Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் வடமாகாண சபையும்

Featured Replies

TNA%20NPC_CI.jpg

கட்டுரை ஆசியரின் இணக்கத்துடன் திருத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் செயற்பாடுகளினால் 24 உறுப்பினர்கள் கடுமையான விரக்த்தி மனநிலையில்? உள்ளக ஜனநாயகம் இன்மையால் பரிதவிக்கும் ஏனைய கட்சிகள்-

சரியான தலைமை இல்லை என குற்றம் சுமத்தியபோதும் அமைதிகாத்த சம்பந்தன்.

30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று?

-அ.நிக்ஸன்-   

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது முக்கியத்துவதைதை இழந்து வருகின்றது. உள்ளக முரண்பாடுகள், வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவனைத்துச் செல்ல முடியாத சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தாம் நினைத்தையே செயற்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன. கட்சி அரசியலை நடத்த முடியாத அல்லது நடத்த தெரியாத ஒரு நிலையா? அல்லது தமிழர்களிடையே யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இருந்த மேட்டுக்குடித்தனமா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

வெளிப்படைத் தன்மையில்லை

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்கவில்லை என்பது வேறு அது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்சினை. தற்போது வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட நிலையில் வடமாகாண சபையின் அதிகாரங்களை உரிய முறையில் செயற்படுத்த அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்பதும் இருக்கின்ற அதிகாரங்களை பிடிங்கி எடுக்கின்றார்கள் என்பதும் சர்வதேச ரீதியாக தெரிந்த வடயங்கள். இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையும் அதன் மூலமான நிரந்த அரசில் தீர்வுக்கும் பல தரப்பகளும் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலகட்டத்தில் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்தளவுக்கு பொறுப்புடன் செயற்படுகின்றது என்பது கேள்வியாகும்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 38 உள்ளுராட்சி சபைகளில் 90 வீதமான சபைகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது ஆட்சியில் வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் 14 உறுப்பினர்கள் வடமாகாண சபையில் 30 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்கள். ஆகவே குறைந்த பட்சம் இத்தனை உறுப்பினர்களையும் வடமாகாணத்தின் ஆட்சி ஒன்றையும் வைத்தக் கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றதா? பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் ஆகிய கூட்டங்களைக்கூட தலைமை உரிய நேரத்தில் கூட்டுகின்றதா? அல்லது இவர்களுடன் ஆலோசித்து ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்களா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

கூட்டுப்பொறுப்பு இல்லை

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளை விட ஒரு தேசிய இயக்கம் போன்ற செயற்பாடு ஒன்றுக்காகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மக்கள் தொடர்ந்தும் ஆதரரித்து வந்தனர். ஆனால் இங்கு சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டு முறைகள் கூட இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட நபர்களுடைய விருப்பு வெறுப்புகளுடன் கூட்டமைப்பு செயற்படுவதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மூன்று விடயங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

ஒன்று சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் என்ற மூன்று நபர்களுடைய செயற்பாடுகள். அதுவும் சம்பந்தன் சுமந்திரன் கூறுவதையே விக்னேஸ்வரன் வடமாகாண சபையில் செயற்படுத்துகிறார் என்பது முக்கியமானது.

இரண்டாவது கூட்டமைப்பக்குள் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் இல்லை தனிநபர் அல்லது மேற்படி மூன்று நபர்களுடைய முடிவுகள்.

மூன்றாவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் வடமாகாண சபைக்கும் கிடைக்கின்ற நிதியை பயன்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளிலும் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயகமற்ற செயற்பாடுகள் என்பது முன்னாள் போராளிகளாக இருந்து தற்போது அரசியல் கட்சிகளாக செயற்படும் இயக்கங்களை வெளியேற்றும் சர்வாதிகார போக்காக காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சிகளை விமர்சித்திருக்கின்றார். அப்போது கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட வராலாற்றை மற்றைய கட்சி தலைவர் ஒருவர் எடுத்துக்கூறியுள்ளார். முதலமைச்சர் வேட்பாளராக வருவதானால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் சோந்து அழைப்பு விடுக்க வேண்டும் என விக்னேஸ்வரன் அப்போது கூறியதையும் தான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவன் என்று குறிப்பிட்டதையும் சில உறுப்பினர்கள் ஞாபகப்படுத்தினார்.

சம்பந்தன் சுமந்திரன் மௌனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன்தான் சோந்து இயங்கவேன்டும் ஏனைய கட்சிகளுடன் சோந்து செயற்பட முடியாது என விக்னேஸ்வரன் கூறியதும் அதற்கு ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளித்தபோதும் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் ஏதுமே பேச முடியாத நிலையில் மௌனமாக இருந்தனர். அதாவது தமது நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் வெளிப்படையாகவே கூறிவிட்டார் என்ற வெட்கத்தல் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபையில் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்குபேர் அமைச்சர்கள் ஒருவர் தவிசாளர் ஒருவர் முதலமைச்சர் இந்த ஆறு பேரையும் தவிர ஏனைய 24 உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாடுவதில்லை என்றும் இந்த ஆறு பேருமே சகல முடிவுகளையும் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

நான்கு அமைச்சுகளும் முதலமைச்சரின் கீழ் 16 திணைக்களங்களும் உள்ளன. இந்த 24 உறுப்பினர்களுக்கும் இவற்றை பகிந்தளித்து நிர்வாகத்தை இலகுவாக்கலாம். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அவ்வாறான திட்டங்கள் இருந்ததாக கடந்த ஒரு வருட ஆட்சியில் காண முடியவில்லை.

அரசாங்கம் அரசியல் அதிகாரங்களை வழங்கவில்லை என்பது ஒரு புறம். மறுபுறத்தில் இருக்கின்ற அதிகாரங்களை சரியாக தமக்குள்ளே பரவாலாக்கம் செய்து செயற்படுத்த முடியாத நிலையில் விக்னேஸ்வரன் உள்ளார். ஏனைய 24 உறுப்பினர்களும் வெறுமனே கூட்டங்களுக்கு மட்டும் வந்து செல்பவர்களாக காணப்படுகின்றனர்.

சரியான தலைமைத்துவம் இருந்தால் இந்த நிலை வந்திருக்காது என உறுப்பினர் ஒருவர் கூட்டத்தில் கூறியபோது சம்பந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் என உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை அமைச்சு பொறுப்புகள் அல்லாத ஏனைய 24 உப்பினர்களும் கடுமையான விரக்த்தி மனநிலையில்?  இருப்பதாகவும் உள்ளக தகவல் தெரிவிக்கின்றன. ஆகவே 1920களில் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்த இன முரண்பாடு அதன் பின்னரான 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தினால் சர்வதேசத்தை பேச வைத்தது. ஆனால் இன்று? 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112556/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.