Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள்

Featured Replies

இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள்

அக்டோபர் 10, 2006

அய்ஸ்வால்:

மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யூத இனத்தவர் வசித்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் கணிசமான அளவிலான யூதர்கள் உள்ளனர். மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 7000 பினே மனசே என்ற பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வசித்து வருகிறார்கள்.

ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில் சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் குடியேறினர். சிலர் மியான்மரில் அடைக்கலம் புகுந்தனர்.

சிரியா, ஈரானிலும் இந்தப் பிரிவைச் சேர்ந்த சிலர் வசித்து வந்தனர். ஆனால் கால ஓட்டத்தில் இப்பழங்குடி பிரிவு யூதர்களின் எண்ணிக்கை மிகவும் சுருங்கிப் போய் விட்டது. இந்த பழங்குடி பிரிவினர் குறித்த விவரங்கள் இஸ்ரேல் அரசிடம் இல்லாததால் இவர்களை யூதர்களாக அங்கீகரிக்க அந்த அரசு தயங்கி வந்தது.

இந்த நிலையில் மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு இந்தியாவில் வசித்து வரும் மனசே பிரிவு யூதர்கள், தங்களையும் யூதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசைக் கோரி வந்தனர்.

இக்கோரிக்கையைப் பரிசீலித்த இஸ்ரேல் அரசு மனசே பிரிவு குறித்து விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலிலிருந்து கடந்த ஆண்டு யூத இன தலைமை மதகுருவான ரப்பி ஸ்லோமோ அமர் மிஸோரம் வந்தார்.

மிஸோரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மனசே பிரிவு யூதர்களை அவர் சந்தித்து, யூதர்களாக மாறி இஸ்ரேலில் வசிக்க விருப்பமா என்பதை கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் தாங்கள் யூத இன பழக்க வழக்கங்களையே கடைப்பிடித்து வருவதாகவும், மத நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தலைமை மத குரு அளித்த அறிக்கையின் அடிப்படையில், வட மனசே பிரிவினரை யூதர்களாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 218 பேர் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளனர். அங்கேயே நிரந்தரமாக தங்கவும் முடிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 3வது வாரத்தில் இவர்கள் இஸ்ரேல் கிளம்புகின்றனர் என்று மிஸோரம் தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள ஷவே இஸ்ரேல் ஹீப்ரு மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள மனசே பிரிவினருக்கு அலியா என்ற மதமாற்ற சடங்குகள் நடத்தப்பட்டு யூதர்களாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேலில் நிரந்தரமாக குடியேற அங்கீகரிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2006/10.../10/israel.html

  • தொடங்கியவர்

இந்தே நிலை தான் நாளை எம் தமிழருக்கும் :wink: :wink:

யூதர்கள் யாராவது ஜெருசலோம் போகவேண்டும்மானால் அவர்கள் வெளிநாடுகளில் வசித்த காலத்துக்கு ஏற்ற படியான நிதியை இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு வளங்கவேண்டுமாமே உண்மையா.??

யூதர்கள் யாராவது ஜெருசலோம் போகவேண்டும்மானால் அவர்கள் வெளிநாடுகளில் வசித்த காலத்துக்கு ஏற்ற படியான நிதியை இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு வளங்கவேண்டுமாமே உண்மையா.??

இந்தே நிலை தான் நாளை எம் தமிழருக்கும்
:idea: :|
  • கருத்துக்கள உறவுகள்

இதிலே ஒரு முக்கியமான சம்பவத்தைச் சொல்ல வேண்டும். அவ்வாறு யுூத இனமாக அவர்கள் இஸ்ரேலுக்குச் செல்லும்போது, அவர்களின் மொழிக் கல்வி, மற்றும் மத பழக்கவழக்கங்கள் போதிக்கப்பட்ட பின்னரே, குடியேற்றப்படுகின்றனர் என்பது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.