Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் எதிரிகள் யார்?

Featured Replies

"மேரியிடம் ஒரு செம்மறியாட்டுக் குட்டி இருந்தது' மேரி செல்லும் இடமெல்லாம் குட்டி ஆடும் பின்தொடர்ந்து செல்லும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அது போலவே, ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பாளருமாகச் செயற்படுபவராகிய சஜின் வாஸ் குணவர்தனவும் சென்று கொண்டிருப்பார். சென்ற மாதம் ஐ.நா. வின் 69 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றபோது, சஜின் வாஸ் குணவர்தனவும் சென்றிருந்தாரல்லவா? அச்சந்தர்ப்பத்தில், நியூயோர்க் நகரில் ஜனாதிபதி ராஜபக்ஷ பங்கு பற்றிய சந்திப்பொன்றின் போது எல்லோரினதும் முன்னிலையில் எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் வைத்தியக் கலாநிதி கிறிஸ்நோஸ் மீது சஜின் வாஸ் நடத்தியதாக கூறப்பட்ட தாக்குதல் இலங்கை முழுவதற்கும் அவமானம் ஏற்படுத்துவதாகும்.

 

இதற்காக சஜின் வாஸிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டதே ஒழிய, அரசாங்க தரப்பினர் யாரும் அந்த அடாவடிச் செயலை கண்டித்ததாக நாம் அறியவில்லை. பின்பு கிறிஸ் நோநீஸுக்கு எதிராக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு செயலாளர் சில குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்தான் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவிட்டதாக அறியக்கிடக்கிறது. வண. கலகொடஅத்தே ஞானசார தேரர்  வண அசின் விராது கூட்டணி வண. கலகொட அத்தே ஞானசார தேரர் எவ்வளவு தூரம் சிங்கள பௌத்த அதி தீவிரவாதியாக விளங்குகின்றார் என்பதை அறியாதவர்கள் யாரும் இந்த நாட்டில் இருக்க முடியாது.

 

அண்மைக்காலத்தில் பேருவளை அளுத்கமை, தர்கா நகரம் ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பட்டவர்த்தனமான அழித் தொழிப்புகள் இடம் பெற்றதற்கான சூத்திரதாரி அவர்தான் என்பது உலகறிந்த விடயமாகும். அவரது இரணை போன்றவரே அரச அனுசரணையுடன் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தவராகிய மியன்மாரிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையாக செயற்பட்டு வந்தவரும், 969 எனப்படும் அமைப்பின் தலைவருமான வண.அசின் விராது தேரர் சென்ற மாதம் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இவர்கள் இருவரினதும் தலைமையில் நடத்தப்பட்ட மாநாட்டில் பௌத்தர்கள் இக்கட்டான நிலையில் உள்ளனர்.

 

முஸ்லிம் தீவிரவாதத்தை அழித்து, பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கு பொதுபல சேனாவுடன் இணைவோம் என்று அசின் விராது தேரர் கூறியுள்ளார். உண்மையில் பௌத்தத்தின் சீலம், தூய்மை மற்றும் இன்னோரன்ன சீரிய குணாதிசயங்களை இப்பேர்ப்பட்ட "துறவிகளிடமிருந்தே' பாதுகாக்க வேண்டியுள்ளது என்று சொன்னால் அது கிஞ்சித்தும் மிகையல்ல. இந்த நாட்டின் ஒட்டுமொத்தமான நலனுக்கும் கீர்த்திக்கும் மேற்குறித்த ஞானசார  விராது கூட்டணி அதிதீவிரமாக செயற்படுவதற்கு புறப்பட்டுள்ளது.

 

இது தான் பாசிசத்தின் முகம் என பிரபல அரசியல் ஆய்வாளரும் முன்னாள் இராஜ தந்திரியுமாகிய கலாநிதி தயான் ஜயதிலக 2.10.14 ஆம் திகதி "த ஐலன்ட்' பத்திரிகையில் வெளியாகிய தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய செயற்பாட்டிற்கு அனுசரணையாக செயற்பட்டு வரும் பிரபல பௌத்த தேரர்களாகிய வண. பென்கமுவ நாலக, வண எல்.ஏ.குணவன்ச போன்ற தேரர்களும், பல் வைத்தியர் குணதாச அமரசேகர போன்ற புத்தி ஜீவிகளும் விளங்குகின்றனர்.

 

ஞானசார விராது கூட்டணியின் முன்னோடிகளாக 1950 கள் முதல் இரு பிரதான அமைப்புகள் செயற்பட்டு வந்தன. முதலாவது அமைப்பு, 1950 களில் தோற்றம் பெற்று, நாட்டில் ஏற்பட்ட பிரளயங்களுக்கு வித்திட்டதாகிய "எக்சத் பிக்கு பெறமுன' (ஐக்கிய பிக்கு முன்னணி) ஆகும். 1956 இல் பண்டாரநாயக்க "மகஜன எக்சத் பெறமுன' மக்கள் ஐக்கிய முன்னணி  என்ற, சிங்கள பேரினவாத கூட்டமைப்பினை உருவாக்கி "சிங்களம் மட்டும்' கொள்கையை கையில் எடுப்பதற்கு பாத்திரவாளியாக இருந்தது.

 

அதே கூட்டமைப்புத்தான், பின்பு பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தம் கிழித்தெறியப்படும் கைங்கரியத்திற்கும் வழிசமைத்தது. அன்று இதற்கெல்லாம் பக்கபலமாக எவ்.ஆர்.ஜயசூரிய, எல்.எச்.மெத்தானந்த, கே.எம்.பீ.ராஜரட்ண போன்ற சிங்கள அதிதீவிரவாதிகள் விளங்கினர். இரண்டாவது, மேற்குறித்த "எக்சத் பிக்கு பெரமுனவை' அடியொற்றி எழுந்ததாகிய "பௌத்த ஜாதிக பலவேகய' (பௌத்த தேசிய சக்தி) ஆகும். இவ்வமைப்பிற்கு அன்று பாதுகாப்பு அமைச்சு செயலாளரும் இன்றைய பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறியின் தந்தையாகிய என்.கியூ.டயஸ். சிறுபான்மையினருக்கெதிரான இனவாதக் கொள்கைகளை, குறிப்பாக 1960  1964 காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்குள் செலுத்தி அரச எந்திரத்தை சிங்கள  பௌத்த மயமாக்கும் சிற்பியாக விளங்கியவர்.

 

"மேற்குறித்த எக்சத் பிக்கு பெரமுன மற்றும் ஜாதிக பல வேகய ஆகிய இரு அமைப்புகளின் செயற்பாடுகள் வாயிலாகவே நிச்சயமாக நாட்டில் பிரிவினைவாத யுத்தத்திற்கு வழிசமைக்கப்பட்டது' என்று தயான் ஜயதிலக ஒழிவுமறைவின்றி கூறிவைத்துள்ளார். இது உண்மையில் சற்று ஆச்சரியத்தை அளிப்பதாகவும் உள்ளது. ஏனென்றால் தயான் ஜயதிலக்க கடந்த காலத்தில் வெளியிட்ட கட்டுரைகளில் "தமிழ் பிரிவினை வாதிகள் என்று சற்று ஆணித்தரமாக கூறிவந்த ஒருவர் வரலாற்று உண்மை எது என்பதை இன்று நேர்மையாக கூறிவைத்துள்ளார்.

 

அன்று பௌத்த ஜாதிக பலவேகய அன்றைய பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஈடுபட்டிருந்த செயற்பாட்டிற்கு ஒத்ததாகவே இன்று அவ்வமைச்சு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பொதுபல சேன முக்கியஸ்தர் வண. கலகொடகே அத்தே ஞான சார தேரர் ஊடாக செயற்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு பக்கபலமாகவே மியன்மாரை சேர்ந்த 969 அமைப்பின் தலைவர் வண. அசின் விராத்துவின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இந்த பொதுபல சேன  969 அமைப்பு கூட்டணியுடன், சிங்கள ராவய, ஏன், ஜாதிக ஹெல உறுமய கூட ஒன்றிணைந்து முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பூசல்களைக் கிளப்புவதுடன், வடக்கு, கிழக்கு மக்களையும் அந்நியப்படுத்தி பலத்த வெறுப்புணர்வை உருவாக்கி விட இடமுண்டு. என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக காணப்படுகிறது. 2002 இல் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளோடு செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏற்படுத்த முற்பட்டதான சுனாமிக்கு பின்னரான கட்டமைப்பு சேவைகள் திட்டம் இரண்டையும் மகிந்த ராஜபக்ஷ தனக்கு சாதகமாகவும் மிகவும் நாசூக்காக சாதித்துக் காட்டினார்.

 

இன்றைய அரசாங்கம் இதேபோன்ற யுத்திகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வேறு வட்டாரங்கள் மூலம் கையாளக் கூடும். அத்தோடு பொதுபல சேன சிறுபான்மையினருக்கு எதிராக கொட்டித் தீர்க்கக் கூடிய நச்சு விதைகளை ஆட்சியாளர் கண்டும் காணாததுமாக இருக்கக்கூடும். இறுதியாக குறிப்பாக வடக்கு கிழக்கு நிலைமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவுவதாகக் கூறப்படும் முரண்பாடுகள் மிகவும் துர்ப்பாக்கியமாக உள்ளன.

 

அதாவது, ஒரு புறத்தில் கூட்டமைப்பினை ஒரு கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற விடயத்தில் இணக்கம் காண்பது முயற்கொம்பாய் உள்ளது. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்பது மறந்து விடக் கூடியது அல்ல. மற்றும், முன்பு ஆயுதம் ஏந்திப் போராடிய சக்திகள் கூட்டமைப்புக்குள் மாற்றான் தாய் மனப்பான்மையில் நோக்கப்படுவது சாணக்கியமான அணுகுமுறையல்ல.

 

1950 கள் முதல் மூன்று தசாப்த காலமாக பழைய தமிழ்த் தலைமைகள் சிங்கள பேரினவாத ஆளும் வர்க்கங்களால் நட்டாற்றில் விடப்பட்ட வரலாற்றின் பின்புலத்திலேயே, தமிழ் இளைஞர்கள், பொறுத்தது போதும் என்று எண்ணி ஆயும் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்ற வரலாற்றினையும் மறந்து விடலாமா? ஆனால் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் யாதெனில், பரந்துபட்ட மக்களின் ஈடுபாடின்றி வெறுமனே ஆயுதப் போராட்டம் பலனைத்தராது என்பதாகும். -

 

http://thinakkural.lk/article.php?article/jjfnfqqliu9176492284833418829fkudc81ed2fd377c50abdedf9f1jtlj5#sthash.9OW5sRn9.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.