Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் காணிகள் வழங்கப்பட்டு அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என பெயரிடப்படுகின்றது – விஜித ஹேரத்

Featured Replies

vijitha%20herath_CI.jpg

வடக்கில் காணிகள் வழங்கப்பட்டு அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என பெயரிடப்படுவதாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் லாபத்தைக் கருத்திற் கொண்டு ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த மக்கள் வடக்கில் குடியமர்த்தப்படுவதாகவும் ஒவ்வொரு ஏக்கர் காணியை வழங்கி அந்தக் கிராமத்திற்கு நாமல் கம என அரசாங்கம் பெயர் சூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் சுதந்திரம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சுதந்திரம் இருந்தால் அறை இராணுவ ஆட்சி நடத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

முழு அளவில் வடக்கில் சிவில் நிர்வாகமொன்றை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி என்ற பெயரில் பாதைகள் மற்றும் மைதானங்களை அமைப்பதனால் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் சுதந்திரம் அடிப்படையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்களின் காணி உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் அலரி மாளிகைக்கு சென்று கேக் துண்டு ஒன்றை சாப்பிட்டு தேனீர் அருந்துவதன் மூலம் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் என்ற எண்ணத்தை விடவும் தாம் இலங்கையர் என்ற நிலைப்பாட்டை வடக்கு மக்கள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்..

வடக்கிற்கு செல்லும் அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஓர் முட்டாள்தனமான தீர்மானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிபந்தனைகளை விதித்தால் சுற்றுலாப் பயணிகள் வடக்கிற்கு செல்வார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113233/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.