Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீரில் நச்சுத்தன்மை! ஆபத்தான நோய்களை எதிர் நோக்கவுள்ள வலி வடக்கு மக்கள்!

Featured Replies

மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்!

Well%20oil_CI.jpg

யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் கோப்பாய் பகுதியில் சில கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள் வர ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உதுறு ஜனனி மற்றும் நொதேர்ன் பவர் பிளான்ட் எனும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பாரிய மின் பிறப்பாக்கிகள் தற்போதும் இயங்கி வருவதாகவும் இவற்றின் மூலம் வெளியேறும் அதிகளவிலான எண்ணெய்க் கழிவுகளே பாதுகாப்பற்ற முறையில் நிலத்தினடியில் விடப்படுவதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களிற்கு முன்னதாகவே பொதுமக்களாலும் சில சமூக அமைப்புக்களினாலும் இது தொடர்பான முறைப்பாடுகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அரச அதிகாரிகளால்; திட்டமிடப்பட்ட முறையில் இம்முறைப்பாடுகளும் இவை தொடர்பான செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.

இப்பிரதேச நீர் மாதிரிகளைப் பரிசோதனை செய்த பின்னர் கட்மியம், ஆசனிக் மற்றும் ஈயம் போன்ற உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய நச்சுப் பொருட்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக மாசுபட்ட நீரினை அருந்துவதனால் புற்றுநோய், மலட்டுத் தன்மை, பிறப்புரிமைக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் மற்றும் மரணம் என்பன ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள். அண்மையில் இது தொடர்பான 2 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113446/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு ; 17 வரை ஒத்திவைக்கப்பட்டது
94f652022fb37fbcd3fcc1a1c79fac09.jpg

 சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டார்.

 
சுன்னாகம் மின்சாரசபை வளாக நிலத்தில், வெறுமனவே ஊற்றப்பட்ட கழிவு எண்ணெயானது சுற்றாடலிலுள்ள கிணறுகளில் கலந்துள்ளது. ஆரம்பத்தில் அருகிலுள்ள கிணறுகளுக்கு பரவிய இந்த கழிவு எண்ணெய், தற்போது மின்சார சபை வளாகத்தைச் சூழவுள்ள 5 கிலோமீற்றர் பகுதியிலுள்ள கிணறுகளுக்கும் பரவியது. 
 
இதனால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய 250 இற்கும் மேற்பட்ட கிணறுகளின் நீரில் கழிவு எண்ணெய் கலந்து, நீர் மாசடைந்துள்ளது. இந்த நீர் பருக முடியாதுள்ளதோடு குளிப்பதற்கு கூட பயன்படுத்த முடியாது. சரும நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை இந்த கழிவொயில் நீரானது ஏற்படுத்தும். 
 
இந்த தாக்கம் குறித்த, விசாரணைகளை உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, வடமாகாண விவசாய அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளிட்ட பலதரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணற்று நீரை பரிசோதனை செய்து பார்த்த போது, அதில் 30 மில்லிகிராமிற்கும் அதிகமாக எண்ணெய்ச் செறிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அப் பகுதி மக்களுக்கான குடிநீர் வழங்கலை உடுவில் பிரதேச சபை மேற்கொண்டு வந்தது. 
 
இந்த நிலையில், மல்லாகம் நீதிமன்ற வளாகத்திலுள்ள கிணற்றிலும் எண்ணெய் கலந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அது தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த வழக்கின் பிரதிவாதியாக இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனம் மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. 
 
கிணற்று நீரில் எண்ணெய் கலந்தமை தொடர்பில் உரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட மக்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்தனர். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் வழக்கை அடுத்த விசாரணைக்காகவும், கட்டளைக்காகவும் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு  நீதிபதி ஒத்திவைத்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=458843632812410960#sthash.34Vb74cx.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.