Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அத்துமிறிய குடியேற்ற முயற்சி மட்டு. அரச அதிபருக்கு கடிதம்!

Featured Replies

 
PHM%20sharlsh%206548545465.jpg
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புறக் கிராமங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை நிறுத்தக் கோரியும், மேய்ச்சல்தரை விவகாரத்துக்கு சுமுகத் தீர்வுகாண வலியுறுத்தியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் இணைந்து மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
 
எமது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினதும் கோறளைப்பற்று தெற்குப் பிரதேச செயலகத்தினதும் மேற்கு எல்லையாய் அமையும் மட்டக்களப்பு மாவட்ட எல்லை பிரதேசங்களான பெரியமாதவணை, மற்றும் மயிலத்தமடு உட்பட வேறு பல பிரதேசங்களில் கடந்த ஆண்டு தொடக்கம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிலரால் அத்துமீறிய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவது தாங்கள் அறிந்ததே. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் ஏனைய சில கலந்துரையாடல்களின் போதும் இவ் விடயம் தங்களதும் மட்டக்களப்பு மாவட்ட வன பரிபாலனத் திணைக்களத்தினதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
 
இதன் அடிப்படையில் மாவட்டச் செயலகத்தின் பணிப்புரையின் பெயரில் சம்மந்தப்பட்ட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள், மற்றும் காவற்துறையினர் ஆகியோர் களவிஜயம் செய்து நிலமைகளைக் கண்டறிந்தனர். மேலும் அத்துமீறுவோரை எச்சரித்ததோடு இடத்தை விட்டு அகழுமாறும் கட்டளையிடப்பட்டது. மேற்குறித்த நடவடிக்கைகளை அத்துமீறிப் பயிர்ச் செய்வோர் தொடர்ச்சியாக அலட்சியம் செய்தே வந்தனர். இதன் காரணமாக கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் மேற்குறித்தவாறான மற்றுமொரு களவிஜயம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம் பெற்றது.
 
இதன் பின்னரும் நிலமையில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக அத்துமீறியோர் தங்கள் பயிர்ச் செய்கைப் பிரதேசத்தை விரிவுப்படுத்திக் கொண்டேவருகின்றார்கள். மாவட்ட வனபரிபாலனத் திணைக்களம், வனக்கட்டளைச் சட்டத்தின் (Forest ordinance ) பிரிவு 7இன் கீழ் காடழிப்போர், காட்டுக்குத் தீயிடுவோர், காடழித்துப் பயிர்ச்செய்வோர், அங்கு தற்காலிக இருப்பிடங்களை அமைப்போர் என்போரை கைதுசெய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி ஒருவருட சிறைத்தண்டனை, தண்டப்பணம் அல்லது இரண்டுக்குமான தண்டனையைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற சட்டவிதிக்கு இணங்கக் குறித்த அத்துமீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவும் இல்லை.
 
மனிதாபிமான அடிப்படையில் இவ்விடயத்தை நன்கு அறிந்துள்ள வனப்பாதுகாப்பு நாயகம் (Conservator General ), அம்பாறை மாவட்ட அரசஅதிபர், மற்றும் அத்துமீறிப் பயிர்ச்செய்யும் விவசாயிகள் பால் அக்கறை கொண்ட அம்பாறை மாவட்ட அரசியற் பிரமுகர்கள் ஆகியோர் குறித்த அத்துமீறியோருக்கு அம்பாறை மாவட்டத்தில் காணிகளை வழங்கிச் சட்டவிரோத செயற்பாட்டைத் தடுத்து நிறுத்திச் சட்டமீறல் செய்வோரை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் கடந்த 6.11.2014. நாளான நோன்மதி தின பகிரங்க விடுமுறை நாளன்று குறித்த அத்துமீறல் நடைபெறும் பிரதேசத்திற்கு மாவட்ட வனபரிபாலனத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட உத்தியோகத்தர்கள் அத்துமீறிப்பயிர் செய்யப்படும் இடங்களின் செய்மதிப் படக்குறிப்பு விபரங்களைப் (GPS) பதிவு செய்து கொண்டு திரும்பியுள்ளார்கள்.
 
மேற்படி நடவடிக்கையானது குறித்த பிரதேசத்தை உரியமுறையில் வரைபடத்தில் பதிவு செய்து குறித்த 3000க்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பைத் தற்காலிக சேனைப் பயிர்ச் செய்கைக்காக வனபரிபாலனத் திணைக்களம் அனுமதித்துள்ளது என்ற புறக்குறிப்போடு அரசாங்க அதிபரை அனுமதிக்கச் செய்து அத்துமீறுவோறுக்கு ஏதோ ஒரு விதத்திலான உரிமம் வழங்கும் தன்னமயுடையாதாய் அமைகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகிய நீங்கள் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் குறித்தகாணி அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறும் மாவட்ட வனபரிபாலன அதிகாரியை (DFO) அழைத்து வனக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 7இன் படி நடவடிக்கை எடுக்கப் பணிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.-
 
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் மாவட்ட வனபரிபாலன அதிகாரி, வனபரிபாலன மா அதிபர், பிரதேச செயலாளர்- ஏறாவூர்ப் பற்று, பிரதேசசெயலாளர் -கோறளைப் பற்று தெற்கு ஆகியோருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.