Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெங்களூரு சிறைச்சாலையில் பெண் குற்றவாளிகளிடம் ஆண் பாதுகாவலர்கள் கட்டாய உடலுறவு

Featured Replies

1416030220-1449.jpg
 
பெங்களூரு மத்தியச் சிறைச்சாலையில் பெண் குற்றவாளிகளைக் கட்டாயப்படுத்தி ஆண் சிறைப் பாதுகாவலர்கள் உடலுறவு வைத்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
 
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 15 பெண் கைதிகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 3 பெண் கைதிகள் சாதாரணத் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகின்றனர். இந்த சிறைச்சாலையில் செக்ஸ் தொல்லைகளும் பல்வேறுக் கொடுமைகளும் நடப்பதாக அங்குள்ள பெண் கைதிகள் கர்நாடகத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். குறைத் தீர்க்கும் பெட்டியில் இருந்து இவ்வாறு 2 கடிதங்களை நீதிபதிகள் எடுத்துள்ளனர்.
 
ஒரு கடிதத்தில் ஆண் கைதிகளிடம் லஞ்சம் பெறும் வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கடிதங்களை கர்நாடக உயர்நீதிமன்ற  சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
1416030363-206.jpg
 
மேலும் அந்தக் கடிதத்தில், "பெண் கைதிகளிடம் இருந்து அனைத்தும் அபகரிக்கப்படுகின்றன. கைதிகளை உறவினர்கள் முறைப்படிச் சந்திக்க வந்தாலும் அவர்களிடம் இருந்து 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளை பணம் இல்லாமல் அணுக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நாங்கள் கொடுக்க முடியாது என்றால் அவர்கள் எங்களைப் பார்த்து நாய்போல் கத்துவார்கள். எங்களை எங்கள் உறவினர்களைப் பார்க்க அனுமதிப்பது இல்லை.
 
 
 
மேலும் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களில் சரிபாதி வார்டன்களுக்கு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் அதை எல்லாம் வெளியே தூக்கி வீசி விடுவார்கள். வார்டன்கள் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள்.
 
வார்டன்கள் 2 சிறைக்கதிகளுக்கு சட்டவிரோதமாக மொபைல் போன் வைத்திருக்க அனுமதித்து உள்ளனர். ஒருவர் கணவனை கொலை செய்த மனைவி, மற்றொருவர்  ஆங்கிலம் பேசும் கைதி. மற்ற கைதிகள் மொபைல் போன் கேட்டால் மொபைல் போன் பயன்படுத்த அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இருப்பதாகக் கூறுகிறார்கள்.  பணம் இருந்தால் அனைத்தும் அனுபவிக்க முடியும் என கூறுகின்றனர்" என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த புகார் கடிதம் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி பி.எம்.ஜெய்சிம்மாவிடம்  கேட்டபோது இந்த குற்றசாட்டுகளை மறுத்தார். நான் பெண்கள் சிறைப்பகுதிக்குக் கூட செல்வதில்லை என கூறினார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பன சிறையில் இருந்த அம்மாவுக்கு ஆபத்து நேரவில்லை என நம்புவோம்.. :o

  • தொடங்கியவர்

ஆண் கைதிகளுடன் செக்ஸ் உறவு கொள்ளுங்கள்: பெண் கைதிகளை கட்டாயப்படுத்தும் வார்டன்கள்

 

Tamil_News_large_1115715.jpg

 

பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில், பெண் கைதிகளை, ஆண் கைதிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி, சிறை வார்டன்கள் கட்டாயப்படுத்துவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த, 'சேவை'க்காக, ஆண் கைதிகளிடம் இருந்து, சிறை வார்டன்கள் பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
 
பெங்களூரு மத்திய சிறை வளாகத்தில், கர்நாடக உயர் நீதிமன்றம் சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டியில், சில மாதங்களுக்கு முன், இரண்டு கடிதங்கள் போடப்பட்டுள்ளன. தேதி குறிப்பிடப்படாத அந்தக் கடிதங்களில், எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுவதாவது: பெங்களூரு மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகளை, ஆண் கைதிகளுடன் உறவு வைத்துக் கொள்ளும்படி, சிறை வார்டன்கள் கட்டாயப்படுத்துகின்றனர். அதற்காக, 300 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை, ஆண் கைதிகளிடம் இருந்து வசூலிக்கின்றனர். சிறை வார்டன்கள் சொல்வதை கேட்கும் பெண் கைதிகளுக்கு, சிறை அதிகாரிகள் பல சலுகைகள் காட்டுகின்றனர். மறுக்கும் கைதிகளுக்கு பரோல் வழங்க மறுப்பது உட்பட, பல கொடுமைகளைச் செய்கின்றனர். மேலும், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனில், உறவினர்களைச் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. சோப்பு போன்ற கைதிகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட, லஞ்சம் கேட்கின்றனர். இவ்வாறு, அந்தக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறுகையில், 'சிறை வார்டன்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. புகார் கடிதத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, இரண்டு பெண் வார்டன்களும், ஐந்து மாதங்களுக்கு முன்னரே, வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்' என்றனர்.
 
விசாரணைக்கு உத்தரவு:
 
சிறை அதிகாரிகளுக்கு எதிரான, இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 'உள்துறையின் கூடுதல் தலைமை செயலர், இந்த விசாரணையை மேற்கொள்வார். அத்துடன், பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறையும் விசாரணை நடத்த உள்ளது. விசாரணை முடிந்து, 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பித்ததும், குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.