Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலும் முஸ்லிம்களும் தடுமாறும் மு.க.தலைமை​

Featured Replies

பயமுறுத்தலுக்கு அடிபணிந்தோம் 18 திருத்தத்திற்கு கை தூக்கினோம் முஸ்லிம் காங்கிரஸ்ஹசன் அலி!

 

ஜனாதிபதிக்குக் கொடுத்தஉறுதிமொழியைகாக்க திண்டாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை!

 

ஷா ஜனாதிபதிஎவ்வளவுநல்லவர் இதனைஎம்மால்  முன்பே

புரிந்துகொள்ளமுடியாமல் போய் விட்டதே!

 

சில தினங்களுக்கு முன் ஒரு அலுவலுக்காக தலைநகர்  சென்றிருந்தேன். அப்போது  முன்பு  அறிமுகமான  ஒருவர் என்னை  அடையாளப்படுத்திக் கொண்டார். உங்களுடன்  கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.என்னவிடயம் என்றேன். இல்லை  மனம் விட்டுப்பேசவேண்டும் என்று கூறிய  நண்பர்  சற்றுத் தூரத்தில் இருந்த ரெஸ்டோரியண்டுக்கு  என்னை  அழைத்துச் சென்றார்.

 

நீங்கள்  தினக்குரல் வார  ஏட்டிலும்   ஜப்னா  முஸ்லிம் இணையத்திலும்  எழுதுகின்ற  கட்டுரைகளை  செய்திகளை  விரும்பிப் படிப்பதாகவும்,  அந்தச் செய்திகள் மு.கா. பிரதேச  மட்டத்திலும் அரசியல் உயர் பீடத்திலும் அவ்வப்போது  சர்ச்சைகளைத்  தோற்றுவிப்பதாகவும் குறிப்பிட்டு,ஏன்  இப்படி மு.கா.வை விமர்சிக்கின்றீர்கள்?மக்கள் மத்தியில்  கட்சிக்கு இதனால்  நெருக்கடிகள் தோன்றுகின்றன  என்று என்னிடத்தில் கேள்விகளை  எழுப்பினார்.  

 

அப்படி   என்னதான் மு.கா. மீது உங்களுக்கு இந்தளவுக்கு கோபம். நீங்கள் எல்லோரும் அஷ்ரப்புடன் நெருக்கமாக இருந்தவர்கள்தானே, என்ன நடந்தது  உங்களுக்கு   என்று   அவர்   என்னிடத்தில்  கேள்விஎழுப்பினார்

 

. மனிதன்  நல்லவர்  அரசியலைப் பற்றி  அவருக்கு  பெரிதாக  ஏதும் தெரியாவிட்டாலும்   கட்சி, கொள்கை, சமூகம்  என்பவற்றை விட அவருக்கு   தற்போதய  தலைவரின் பக்தர்  என்பது  மட்டும் எனக்கு   நன்றாகத் தெரியும்.

 

இதனால்  அவருக்கு ஆழமாக விளக்கம்  கொடுக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை என்பதால் மு.கா.வை நான் விமர்சிக்கவில்லை அதன்  தற்போதய நடவடிக்கைகள் தொடர்பாக எனக்கு உடன்பாடு கிடையாது என்றதுடன், நீங்கள் இப்போது   என்னை ஒரு  ஊடகக் காரனாக மட்டுமே பாருங்கள். நான் ராஜபக்ஷவையும்  ரணிலையும் இதனைவிட மோசமாக விமர்சிப்பதையும்  நீங்கள் படிப்பதில்லையா என்று நான் கேட்ட கேள்விக்கு  அது சரிதான் இது சமூகப் பிரச்சினை  என்றார்  அவர்.

 

நானும்  அதனால்   தான் இது விடயத்தில் எனது பணியைச் செய்கின்றேன்  என்றேன். நண்பருக்கு  புரிந்ததோ இல்லையோ  என்று  எனக்குத்  தெரியாது. இருவரும் வெளியே  வந்தோம். ஜனாதிபதிக்கு மு.கா. ஆதரவு என்று முன்பு வெளியிட்ட செய்தி தொடர்பாக  எமது  நிலைப்பாட்டில்  எந்த  மாற்றங்களும் கிடையாது. அது தனிநபர்  வாக்குறுதிதான் என்றாலும் அது ஆணிவேர் கொடுத்த உறுதி என்பதால்தான்  பிரச்சினை.இப்போது  ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் மு.கா.வில் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்திருக்கின்றன  என்பது  மட்டும்  உறுதியாகத்  தெரிகின்றது.

 

தற்போது  நாட்டில்  தோன்றி இருக்கின்றஅரசியல் மாற்றம்,மு.கா. தலைமை  பெரியவருக்கு  தனிப்பட்டரீதியில் கொடுத்த  வாக்குறுதியை  நிறைவேற்ற  முடியாத  நெருக்கடிநிலை,வாக்குறுதியை மறந்து  புதுக்கதைபேசுமளவுக்கு  நிலைமை  இன்று  மாறி இருக்கின்றது  என்று  மட்டும்  நன்றாகத் தெரிகின்றது. ஆளும்  தரப்பில்  போய் அமர்ந்து  சுகபோகங்களை   அனுபவித்துக் கொண்டிருந்த  நாட்களில்   மு.கா.தலைமை  ஷா இந்த  ஜனாதிபதி எவ்வளவுநல்லவர் இதனை  எம்மால் முன்பே  புரிந்து  கொள்ளமுடியாமல் போய் விட்டதே!  என்று  அங்கலாய்த்து மு.கா. தலைமைபேசிய  வார்த்தைகளையும் சமூகத்தில் ஒருசிலராவதுஇப்போதும் நினைவில்  வைத்திருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

 

இது போன்று  மு.கா. அவ்வப்போது  சுகபோகங்களை  அனுபவிப்பதற்காக  சமூகத்துக்குச் சொன்ன  கதைகளை  எவராவது  ஒரு  நாவலாகதொகுத்தெடுப்பார்களாக  இருந்தால் அது  சமூகத்திற்குச் செய்கின்ற  பாரிய  பணியாக இருக்கும்.

 

18ஆவது  திருத்தம் தொடர்பான ஒருகதை  அதுபற்றி இப்போது பார்ப்போம்

 

கதைசொல்வது நமது தலைமைகள் கதை  கேட்டுக் கொண்டிருப்பது கேடு  கெட்ட  நமது  சமூகம்

 

முஸ்லிம்களே  இந்தக் கதையையும்  ஒரு முறை  படித்துப் பாருங்கள்

 

அப்போது  நமது  சமூகத்தின் எதிர்காலம்   எப்படி  அமையப் போகின்றது என்பது  உங்களுக்குப்  புரியும்.!

 

தற்போது   ஜனாதிபதிக்கு  எல்லை  மீறிய  அதிகாரங்களை  உபயோகிக்க 18 திருத்த  மூலம் காரணமாக  இருந்து  வருகின்றது  என்பது  அனைவரும் அறிந்த விடயமே. இந்த 18 திருத்த மூலத்திற்கு  ஆதரவாக  வாக்களித்தவர்கள்  பலர்   தற்போது  சமூகத்தின் முன் வந்து  அதற்கு  மன்னிப்புக் கேட்டுக்  கொண்டிருக்கின்றார்கள்.

 

ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ்  இந்த 18 விடயத்தில் நேரத்திற்கும் இடத்திற்கும் ஒருகதையை தேவைக்கு  ஏற்றவாறு  பேசி  வருவதும்  அனைவரும் அறிந்த  விடயம்.  

 

ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவிடம்  ஒருகாரியத்தை  சாதித்துக் கொள்ளஅல்லதுஅவரது  நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்ள 18 திருத்த மூலத்திற்குநாம் ஆதரவாகவாக்களித்திருக்கின்றோம் என்று நினைவுபடுத்துவார்கள்.  18க்கு கைதூக்கியது  ஒரு  சாதனைபோல்   கடந்த சில தினங்களுக்கு  முன்னரும் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

மூன்றாவது  முறையாகவும் இதன் மூலம் ஜனாதிபதிக்குதேர்தலில் நிற்க சந்தர்ப்பம் கொடுத்தது    நாங்கள் என்று சில தினங்களுக்கு  முன்னர் மு.கா.தலைவர் பேசி இருந்தார். எனவே, இவர்கள் பூரண  விருப்பத்துடனே 18 திருத்தத்தை  ஆதரித்தார்கள்  என்பதுதான் அதன் அர்த்தம்.

 

ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் இந்த 18ஆவது திருத்த மூலத்திற்கு   வாக்களித்தது  என்று  தற்போது   ஒரு புதுக் கதையைசந்தைப்படுத்தி இருக்கின்றார் மு.கா. செயலாளர் ஹசன் அலி. அவர்  தனது   வாக்கு மூலத்தில் என்ன   சொல்லி  இருக்கின்றார் என்று இப்போதுபார்ப்போம். அந்த  நிகழ்வு  நடந்த   முறை   மிகவும் அசிங்கமானது,   அநாகரிகமானது. எங்களுடைய  உயிர்களுக்கு   ஆபத்து  இருக்கின்றது.  எனவே, நீங்கள் 18 க்கு ஆதரவு  தரவேண்டும் என்று   சொல்லப்பட்டது.

 

அந்த  நிலையில்தான் இது நடந்தது.  இந்தத்  தவறுக்காக   மன்னிப்புக்  கோருகின்றோம் என்பது   ஹசனாரின் புதுக் கதை!  எமது  இந்தச்  செய்தி  வந்து   மக்கள் மத்தியில்  சலசலப்புஏற்பட்டால் அதற்கு  வேறு  அறிக்கைகளும் வார இடமிருக்கின்றது. நாம் இங்கு  முன் வைக்கின்ற  ஹசன் அலி  பற்றிய  குறிப்பு  ஆதார பூர்வமானது என்பதனையும் பொறுப்புடன் கூறிக் கொள்கின்றோம்.

 

தமக்கு  விடுக்கப்பட்ட   அச்சுறுத்தல்கள்  காரணமாகவே  நாம் இந்த 18  ஆம் திருத்தத்திற்கு  எமது   கரங்களைப் பாராளுமன்றத்தில் உயர்த்தினோம்  என்று கூறுகின்றார்.  இப்போது. அப்படியானால் உங்களை   அச்சுறுத்தியவர்கள்   யார்   என்று கூற முடியுமா  என்று  கேட்டால்  அவர்களின் பெயர்களை  சொல்லமுடியாது   என்றும் அவர்  குறிப்பிட்டார்.

 

எனவே, அச்சுறுத்தல்களுக்கு  பயந்து இவர்கள் இதன் பின்னரும் காரியம் பார்க்க  நிறையவே  வாய்ப்புக்கள் இருக்கின்றன  என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. எனவேதாம் கோரிநிற்கின்ற  கரையோர நிருவாகஅலகின் கதையும் இது தான் என்பதை முஸ்லிம் சமூகம்  புரிந்துகொள்ளமுடியும்.

 

தனக்கு  ஒரு  கனதியான   அமைச்சு  வேண்டும்         ஐயா!

 

இருவரைச் சமாளிக்க  துணை 2 உம் கூடவே  தேவை    ஐயா!

 

சகோ.வுக்கு  தூது  பதவியும் தந்துட்டால்  போதும்         ஐயா!

 

 சமூகப்  பிரச்சினை  தனி அலகு  என்று  அவ்வப்போது    ஐயா!

 

நாம் ஏதாவது  வாய்  தவறிவிட்டால்   அத்தைப் போய்     ஐயா

 

! பெரிது  படுத்திக் கொள்ளவேண்டாம்                 ஐயா! அரசியல் நாங்கள் சொல்ல குடிகள் கேட்பதுதான்         ஐயா!

 

தற்போது   தமது  கொள்கைக்கு வேலைத் திட்டத்திற்கு  அடிபணிய  முடியாவிட்டால்  இந்த   ஜனாதிபதியைத்   தூக்கி  எறிந்து  போடுவோம் என்று  ஹெல  உறுமய   தனது   நிலைப்பாட்டில்   இன்று  வரை இருந்த   வருவதுடன் நாம் எடுத்த இந்தமுடிவினால் நாம்   சிறைக்குள்ளும் தள்ளப்படலாம். அத்துடன்   எமது உயிர்களை கூட இது விடயத்தில் நாம் இழக்கலாம்   என்றாலும்   சமூகத்தினதும் நாட்டினதும் நலன் கருதியே  இந்த   முடிவை   துணிந்து   எடுத்திருக்கின்றோம் என்று  அதுரலியே,  சம்பிக்க  போன்றவர்கள்   பேசி இருப்பதனையும் முஸ்லிம் சமூகமும் மு.கா.  தலைவர்களும்     தெரிந்துகொள்ளவேண்டும்.

 

எல்லாச்  சலுகைகளையும்   அனுபவித்துவிட்டு இறுதிநேரத்தில் சந்திரிகாவும்,  ரணிலும், ராஜபக்ஷவும் நாம் கேட்டதைத் தருவதாக  சொன்னார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று இறுதிநேரத்தில்  பேசி   மீண்டும் வாக்குப் பிச்சைக்காக  இவர்கள் வரும் போது  சமூகம் எப்படி அவர்களைப் பார்க்கப்  போகின்றது என்பதை வைத்து  முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சிந்தனையையும்  எதிர்காலத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

 

எனவே,  காரியம் சாதிக்கத் தெரியாது  அதற்கு   சந்தர்ப்பத்துகு ஒரு காரணம் கற்பிக்கின்ற  இப்படியான   தலைவர்களைத்  தொடர்ந்தும் பாராளுமன்றம்  அனுப்பி   அதன் மூலம் சமூகம் எதனை  இவர்களிடத்தில் எதிர்பார்க்கமுடியும். எனவே, தொடர்ந்து   விமர்சனங்கள் செய்வதை விட மு.கா. அரசியல் போக்கில் பாரிய  மாற்றங்களுக்கான  வேலைத் திட்டங்களையும்   அழுத்தங்களையும்  சமூகம் முன்னெடுக்க  வேண்டி இருக்கின்றது.   இது   காலத்தின் தேவை.

 

 http://www.thinakkural.lk/article.php?article/jmjihnqtie85848e5231f0ea17685c1ecudafd174b670e838e42d97dkqydq#sthash.1JLkLLGS.dpuf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.