Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவமே வெளியேறு! – ஆண்டியாபுளியங்குள மக்கள் இன்றும் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vavuniya-protest-350-news.jpg

இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி, வவுனியா செட்டிகுளம் ஆண்டியாபுளியங்குளம் மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளரால், விளையாட்டு மைதானம், ஆரம்ப சுகாதார மையம், ஆரம்ப பாடசாலை என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை மக்கள் நேற்று முன்தினம் துப்பரவு செய்ய முற்பட்ட போது, குறித்த நிலம் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துப்பரவு செய்யும் பணியை நிறுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு இராணுவத்தினர் பணித்தனர்.

   

இதனையடுத்து நேற்றைய தினம் இராணுவத்தினர் ஒதுக்கப்பட்ட காணியை சுற்றி வேலி அமைக்க முற்பட்ட வேளை, அப் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் பொலிஸார் சமரசம் செய்ய முற்பட்டபோதிலும் அதுவும் பயனற்று போகவே ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்றது. இந்நிலையில் நேற்று இரவு குறித்த காணியை சுற்றி இராணுவத்தினர் வேலி அமைத்துள்ளனர்.

இது தொடர்பில், அதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று காலை மன்னார் மதவாச்சி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ‘இராணுவமே வெளியேறு’, ‘காணி அதிகாரம் இராணுவத்திற்கா பிரதேச செயலாளருக்கா?’, ‘வட புலத்தில் காணி அதிகாரத்தில் இராணுவம் காட்டுமிராண்டித்தனம் செய்வது அரசுக்கு தெரியாதா?’, ‘காணி கிடைக்கும் வரை போராடுவோம்’, ‘பாடசாலை ஊர் மக்களுக்கானதா அல்லது இராணுவத்திற்கா?’, ‘வடக்கின் காணி அதிகாரம் இராணுவத்தின் கைகளிலா?’, ‘மகிந்த அரசே எமக்கு நீதி கிடைக்குமா?’ போன்ற கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரியபோதிலும் எவ்வித பலனும் கிடைக்காத நிலையில் அப்பகுதிக்கு பிரதேச செயலாளர் வருகை தந்து காணியை பார்வையிட்டதுடன் இராணுவத்தினருடனும் கலந்துரையாடியிருந்தார். இதனையடுத்து மக்களின் காணி என்பதை உறுதிப்படுத்தும் பத்திரங்களை காண்பிக்குமாறு இராணுவத்தினர், பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தனர். இதனையடுத்து பிரதேச செயலாளர் அவ் ஆவணங்களை பிரதேச செயலகத்தில் இருந்து எடுத்து வந்து இராணுவத்திற்கு காண்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற வேளை இச் சம்பவங்களை புலனாய்வுத்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஒளிப்பத்திவு செய்திருந்ததுடன் குறிப்பட்ட காணியில் அதிகளவான இராணுவத்தினரையும் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

vavuniya-protest-2-071214-seithy.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=122223&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Vanni%20Army%20land_CI.jpg

வவுனியா ஆண்டியா புளியங்குளத்தில் இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டம் இன்று (7.12.14) மதியம் கைவிடப்பட்டுள்ளது.

செட்டிகுளம் பிரதேச செயலாளாரினால் ஆண்டியா புளியங்குளம் மக்களுக்காக விளையாட்டு மைதானம் ஆரம்ப சுகாதார மையம். ஆரம்ப பாடசாலை என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட காணியை இராணுவத்தினர் தமது காணி எனவும் அதற்குள் எவரும் உட்பிரவேசிக்க வேண்டாம் எனவும் தொவிக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று காலையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் காணி தொடர்பான ஆவணங்களை இராணுவத்தினருக்கு காட்டியதுடன் கலந்துரையாடி இயிருந்தார்.

இதனையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் இது தொடர்பான தீர்வை பெற்றுத்தருவதாக பிரதேச செயலாளர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் இன்று மதியம் கைவிடப்பட்டது.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114241/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.