Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுந்தரவனப் பகுதி ஆற்றில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலால் சுற்றுச்சூழல் அச்சங்கள்

Featured Replies

141210172038_sundarbansship_624x351_bbc_
சுந்தரவனப் பகுதியில் ஆற்றில் மூழ்கிய கப்பல்
 
உலகின் மிகப் பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காடுகளினூடாகப் பாயும் ஆறு ஒன்றில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று மூழ்கியதை அடுத்து அப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து அச்சங்கள் ஏற்பட்டிருப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கப்பல் பணியாளர்களில் ஒருவர் காணவில்லை; அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுமார் 3,50,000 லிட்டர்கள் எண்ணெயைத் தாங்கிவந்த இந்த கலம் மூழ்கியிருப்பது அப்பகுதிய்ல் இருக்கும் ஆற்று டால்பின்கள் , மீன் மற்றும் பிற நீர் வாழ் உயிரினங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக வனத் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
சுந்தரவனக்காடுகள் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே பரவிக்கிடக்கின்றன. ராயல் பெங்கால் புலி இனம் இந்தக் காடுகளில்தான் வாழ்கிறது.
இந்த எண்ணெய் கப்பலின் உரிமையாளர் மீதும் அதனைப் பின்புறமாக மோதி இந்த விபத்துக்குக் காரணமாக இருந்த மற்றுமொரு சரக்குக் கப்பலின் உரிமையாளர் மீதும் வனத்துறை வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது.
மீட்பு நடவடிக்கைகளை நடத்த பங்களாதேஷ் கடற்படை நான்கு கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியிருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

காயலாங்கடையில் போடவேண்டிய படகுகளில் எண்ணையை கொண்டு திரிகிறார்கள்..!

  • தொடங்கியவர்

சுந்தரவனக்காடுகளில் வணிகரீதியான நீர்வழிப் போக்குவரத்தைத் தடை செய்ய ஐநா கோரிக்கை

 

 

141210182932_bangladesh_oil_spill__512x2
கசிவு ஏற்பட்ட ஆறு
 
பங்களாதேஷில் சுந்தரவனக் காடுகளினூடாக நடக்கும் அனைத்துவகை வர்த்தகரீதியான நதிநீர்ப் போக்குவரத்தைத் தடை செய்யுமாறு ஐ.நா மன்றம் கோரியிருக்கிறது.
ஆற்றில் உடைந்த கப்பல் ஒன்றிலிருந்து பெருமளவு எண்ணெய் கசிந்ததை அடுத்து இந்த கோரிக்கை வருகிறது.
 
இந்தக் கசிவு இரண்டு வகை அழிந்துவரும் டால்பின்கள் வாழும் ஒரு வனவிலங்குகள் சரணாலயத்திற்கு வெகு அருகே உள்ள ஒரு ஆற்றில் நடந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் ( யூ.என்.டி.பி) சுட்டிக்காட்டியது.
 
தனியார் எண்ணெய் கப்பல்கள் இந்த உடைந்த கலனை ஆற்றங்கரைக்கு இழுத்து வந்திருக்கின்றன ஆனால், அப்பகுதியிலிருக்கும் தாவரங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இதனால் மோசமான தாக்கங்கள் ஏற்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ஆற்றுப்படுகையை தங்கள் ஜீவாதாரத்துக்காக நம்பியிருக்கும் உள்ளூர் மக்களும் இது குறித்து கவலையில் இருக்கிறார்கள்.
இந்த எண்ணெய்க் கசிவு சுமார் 60 கிமீ நீளமுள்ள நீர்வழிகளைப் பாதித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
 
  • தொடங்கியவர்

சுந்தரவனக்காடு எண்ணெய்க் கசிவால் டால்பின்கள் இறக்கின்றனவா?

 

141211213338_sp_bangladesh_river_624x351

சுந்தரவனக்காட்டின் எண்ணெய்க்கசிவு

 
வங்கதேசத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காட்டில் எண்ணெய்க் கப்பல் ஒன்று மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஒரு டால்பின் செத்துக்கிடக்கும் புகைப்படம் ஒன்றை வங்கதேச செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
 
இந்த குறிப்பிட்ட டால்பின் இறந்ததற்கான காரணம் என்ன என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும் இந்த எண்ணெய்க்கசிவால் அந்த பகுதியில் வாழும் டால்பின்கள் உள்ளிட்ட அரிய வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்கள் குறித்த அச்சங்களை இந்த செய்தியும் புகைப்படமும் அதிகரித்திருக்கிறது.
 
மூன்று லட்சத்துக்கும் அதிகமான அடர்த்தியான பெட்ரோலிய எண்ணெயைத் தாங்கிவந்த இந்த கலம் வேறொரு கலத்துடன் மோதிக்கவிழ்ந்ததில், அதில் இருந்த எண்ணெய் அனைத்தும் சுந்தரவனக்காட்டின் நீரில் கசிந்தது.
 
இப்படி சுந்தரவனக்காட்டு நீர்நிலையில் சிந்தியிருக்கும் எண்ணெயை கைகளால் அப்புறப்படுத்துவதில் உள்ளூர் கிராமவாசிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கைக்கு கிடைத்த பானை, பாத்திர பண்டம் அனைத்தையும் பயன்படுத்தி அவர்கள் இந்த எண்ணெயை நீரில் இருந்து பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.