Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரியடி ஜெனிரோ: ராணுவ சர்வாதிகார ஆட்சியில், தான் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் பெண் ஜனாதிபதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில், 1964ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக்காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை, ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினர்.

இந்நிலையில் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்தலில் அதிபராக இடதுசாரி கொள்கையுடைய தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய அதிபர் தில்மா ரூசெப், அப்போதைய சர்வாதிகார கொடுங்கோல்  ராணுவ ஆட்சியை எதிர்த்தார். இதனால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சர்வாதிகார ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை அறிய தேசிய உண்மை கண்டறியும் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் முழுவதும் விசாரணை நடத்தி அந்நாட்டு அரசிடம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த குழு தனது அறிக்கையில், 191 பேர் கொல்லபட்டதாகவும், 210 பேர் மாயமானதாகவும், இதில் 33 பேரின் சடலங்கள் மீடகபட்டதாகவும் விசாரணைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பிரேசிலில் தங்கி இருந்து பிரேசில் ராணுவத்திற்கு சித்ரவதை நுட்பங்களை கற்பித்து உள்ளனர்.  பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சுதல், பாலியல் பலாத்காரம், மனரீதியான சித்ரவதைகள்  போன்றவை செய்யபட்டதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேசில் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் மரியா லாரா கனியு, "விசாரணைக்குழு அறிக்கையில் மனித உரிமைகளை மீறி சித்ரவதை செய்ததாக 377 பேர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே குற்றவாளிகள் தப்ப முடியாது" என்றார்.

இது பற்றி பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உருக்கமான உரையில், "பிரேசிலில் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து நாம் இப்போது சுதந்திரமாக உள்ளோம். சர்வாதிகார ஆட்சியில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவத்தால் பலர் சித்ரவதை செய்யப்பட்டனர். குற்றம் செய்தவர்கள் நீதி முன்பு நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கொடுங்கோல் ஆட்சியில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.

1970ஆம் ஆண்டு எனக்கு 22 வயது. அந்த ஆட்சியை எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்துக்காக நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தினார்கள். கரண்ட் ஷாக் கொடுத்தனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். என்னையும், எனது 2 குழந்தைகளையும் சிறைக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கும் என்னை குழந்தைகள் முன்பு மிருகத்தனமாக அடித்தார்கள். இதில் நான் பலத்த காயம் அடைந்தேன். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம் உடல் முழுவதும் வழிந்து காய்ந்து போய்விட்டது. இதைபார்த்து என்னுடன் இருந்த எனது 4 வயது மற்றும் 5 வயது வயது குழந்தைகள் என்னை பார்த்து "அம்மா உன் உடல் ஏன் இப்படி நிறம் மாறி இருக்கிறது" என்று அப்பாவியாக கேட்டது இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.

இதேபோல் எனது கர்ப்பிணி சகோதரியும், அவரது கணவரும் சித்ரவதை செய்யப்பட்டனர். அவரது கட்சி உறுப்பினர், அவரது கண்முன்னால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சித்ரவதைகளுக்கு யார் எல்லாம் காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும். அவரும், அவரது குடும்பத்தினரும் இப்போது சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36151

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.