Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த

Featured Replies

தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த DEC 22, 2014 | 11:25by கார்வண்ணன்in செய்திகள்

mahinda-vajra-300x200.pngஅதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

பினான்சியல் ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள செவ்வியில் அவர், “முதலில், நான் தோற்கமாட்டேன்.

ஆனால், முதிர்ந்த துடிப்பான ஜனநாயக நாடான சிறிலங்காவில் எப்போதுமே அமைதியான முறையில் அதிகாரமாற்றம் இடம்பெற்று வந்திருக்கிறது.

ஆனால், மீண்டும் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மூன்றாவது பதவிக்காலத்தில், இன்னும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு பணியாற்றுவேன்.

சீனாவுடன் சிறிலங்கா நெருக்கமான பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து பேணும்.

சீனாவின் முதலீடுகளில் இருந்து சிறிலங்கா நன்மைகளைப் பெறுகிறது. சிறிலங்கா மட்டுமே, சீனாவிடம் இருந்து நன்மைகளை அனுபவிக்கும் நாடு அல்ல.

சீனாவிடம் இருந்து மட்டும், முதலீடுகள் அதிகரிப்பதை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனைய பல நாடுகளிடம் இருந்தும் முதலீடுகளை நாம் எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மேற்குலக நாடுகளால் போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கூட, சிறிலங்காவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

முதலீட்டாளர்களால் இந்த குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நான் நினைக்கிறேன்.

சிலர் கூறுவது போல அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையோ, மனித உரிமைச் சட்டங்களையோ சிறிலங்கா மீறவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

மனித உரிமைகள் குறித்த விமர்சனங்கள் காலப்போக்கில், பலவீனம் அடைந்து, வலுவிழந்து போகும் என்று நான் நினைக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/22/news/2068

 

வெற்றியடைந்தால் தோல்வியடைந்தவரை தூக்கி உள்ளே போடுவதற்கும் உத்தேசம்.

MR%20New%201_CI.jpg

 ​ஜனவரியில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தி;ல் தான் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைப்பேன் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவாதமளித்தார்.

பினான்சியல் டைம்ஸிற்கு மின்னஞ்சல் மூலமாக அளித்த பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தான் வெற்றிபெறும் பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக புதிய திட்டங்களை வகுக்;கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் சீனாவுடன் மேலும் உறவுகளை ஆழமாக வலுப்படுத்தபோவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளினால் நன்கு முன்னெடுக்கப்படும்,பிரச்சாரம் காரணமாக போட்டி மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் ராஜபக்சவின் குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கம் பலவந்தமாக அதிகாரத்தை தக்க வைக்க முயலலாம்,இதனால் வன்முறையும், ஸ்திரமற்ற தன்மையும் உருவாகலாம் என்;;ற அச்சம் உருவாகியுள்ளது.

முதலில் நான் தோற்கமாட்டேன் என பினான்சியல் டைம்சிற்கு மின்னஞ்சல் பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.இதேவளை முதிர்ச்சியடைந்த வலுவான ஜனநாயக நாடு என்ற வகையில் இலங்கை எப்போதும் அமைதியான முறையில் அதிகாரத்தை வென்றவர்களிடம் ஒப்படைத்துள்ளது.அதேவளை முன்னர் தெரிவித்தது போன்று  நானே வெற்றிபெறுவேன் என நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிதருணங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தகுற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணை செய்யும் என எதிர்பார்க்கும் மேற்குலக அரசாங்கங்கள் இந்த தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கின்றன.

இதேவேளை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இவ்வரும் எட்டு வீதமாக காணப்படும் என்ற அரசாங்கத்தின் எதிர்வுகூறல் காரணமாக உற்சாகமடைந்துள்ள முதலீட்டாளர்களும் தேர்தலை உற்றுநோக்க கூடும்.

உட்கட்டமைப்பு வசதிகளில் பாரிய முதலீடுகளை செய்துள்ள போதிலும், இலங்கை கடந்த சிலவருடங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான இலக்கை தவறவிட்டுள்ளது.கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டு முதலீடு 0.9 வீதமாகவே காணப்படுகின்றது, முன்னைய ஐந்து வருடகால பகுதியிலும் இதே அளவே காணப்பட்டதாக சர்வதே வங்கியொன்று தெரிவிக்கின்றது.

ராஜபக்ச தனது மூன்றாவது பதவிக்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை கவர்வதற்கு தீவிரமாக செயற்படப்போவதாக தெரிவித்தார்.இலங்கையை தென்னாசியாவி;ன் பொருளாதார மையமாக மாற்றுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடனான உறவுகளை மேலும் ஆழமாக விஸ்தரிப்பேன் என குறிப்பிட்ட அவர்,சீனா முதலீடுகளினால் நாங்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளோம்,ஆனால் இதனால் நன்மையடைந்த நாடு இலங்கை மாத்திரமல்ல,வேறு நாடுகளிடமிருந்தும் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகுற்றச்சாட்டுகள் குறித்து தனது வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி,இவ்வாறான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது,இது இந்த குற்றச்சாட்டுகளை முதலீட்டாளர்கள் நம்பவில்லை என்பதற்கான சான்று என குறிப்பிட்டார்.

ராஜபக்ச மூன்றாவது தடவையாக வெற்றி பெற்றாலும்,ஐ.நா விசாரணைக்குழுவின் கடுமையான அறிக்கையை அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்,

ஒபாமா நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள்-ஐ.நாவிற்கான தூதுவர் சமந்தா பவர் உட்பட்டவர்கள் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்ட நாடுகளை பொறுப்பு கூறச்செய்யும் விடயத்தில் இலங்கை ஒரு முக்கிய சவால் என கருதுவதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

எனினும் ராஜபக்ச யுத்தகுற்றச்சாட்டுகளை  முழுமையாக நிராகரித்தார்,இலங்கை சர்வதேச சட்டங்களை மீறவில்லை,சிலர் தெரிவிப்பது போன்று மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என என்னால் உறுதியாக  தெரிவிக்கமுடியும், சிறிது காலத்தின் பின்னர் எம்மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் பலமிழக்கும் என நான் கருதுகிறேன் என ராஜபக்ச தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114737/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.