Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்­கள

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்­கள

 
'மிஸ்டர் பிர­பா­கரன்' என்று கூறு­வதில் தவ­றே­து­மில்லை. சிங்­கள மக்கள் எதி­ரி­யையும் நண்­ப­னாக கவ­னிக்கும் மனப்­பான்மை கொண்­ட­வர்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ முதலில் பிர­பா­க­ர­னுக்கு 'மிஸ்டர்' என்று அழைத்­தவர். அதே­போன்று 600 பிக்­கு­களை கொன்ற கருணா அம்­மா­னுக்கு 'மாண்­பு­மிகு அமைச்சர்' என்ற நாமம் சூட்­டி­ய­வரும் மஹிந்­தவே

ஆவார் என்று மாத்­தறை மாவட்ட ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

mangala-samaraweera_4.jpg

இதே­வேளை ஜன­வரி 9ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது. அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் வர­லாற்றில் எழு­தப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். நாட்டின் பெரும் கட்­சி­க­ளான ஐ.தே.க. வும் சு.க. வும் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிடும் தேர்­த­லாகும். அத்­தோடு இந்த கூட்­ட­ணி­யுடன் தமிழ் முஸ்லிம் சிங்­கள மக்கள் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. நாட்டின் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தவே நாம் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

தற்­போது ஐ.தே.க. வினர் மாத்­தி­ர­மன்றி சு.க வினரும் தனக்கு வேலை­வாய்ப்­பின்றி கிராம புறங்­களில் அவ­திப்­ப­டு­கின்­றனர். இந்த யுகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இம்­முறை தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆத­ர­வாக பிர­சாரம் செய்ய அவ­ரது குடும்ப உற­வி­னர்­களே முன்­வந்­துள்­ளனர். எனினும் அர­சி­யல்­வா­தி­யாக கள­மி­றங்­கு­வ­தாக தெரி­ய­வில்லை. குடும்­பத்­தி­ன­ருக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பிர­சா­ர­மா­கவே ராஜபக் ஷவின் தேர்தல் நட­வ­டிக்கை காணப்­ப­டு­கின்­றது.

இதற்கு அப்பால் பொது­ப­ல­சேனா அமைப்பேராஜபக் ஷவின் கைப்­பைக்குள் உள்­ளது. இதனால் மஹிந்த ராஜபக் ஷவிற்கு இன்னும் வாக்கு சரிவு ஏற்­படும்.

புலிச்­சாயம்

அத்­தோடு தற்­போது எதி­ர­ணியின் மீது புலிச்­சாயம் பூசு­கின்­றனர். எனினும் கருணா அம்மான் கே.பி. ஆகியோர் ராஜபக் ஷவ­சமே உள்­ளனர்.

இதற்கு அப்பால் அடிப்­ப­டை­வாத தமிழ் அமைப்­புக்கள் ராப­ஜபக் ஷ வசம். கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் சர்­வ­தேச தமி­ழீழ அமைப்பு அனைத்தும் இத்­தேர்­தலை புறக்­க­ணிப்­ப­தாக கூறிக்­கொண்டு ராஜபக் ஷவை ஆத­ரிக்­கின்­றனர்.

மிஸ்டர் பிர­பா­கரன்

இதே­வேளைஇ முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க விடு­தலை புலிகள் தலை­வரை மிஸ்டர் என்று கூறி­ய­தாக அரசு அமைச்­சர்கள் அலட்டிக் கொள்­கின்­றனர்.

மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­யதில் தவ­றில்லை. சிங்­க­ள­வர்கள் எதி­ரியை கூட தனது நண்­ப­னாக கவ­னிக்கும் மனப்­பான்மை கொண்­ட­வர்கள். இதற்கு துட்­ட­கை­முனு மன்­னனின் செயல் சிறந்த எடுத்­துக்­காட்­டாகும்.

எனினும் தான் ஜனா­தி­பதி ஆன­வுடன் வெளி­நாட்டு தூது­வர்­களின் உரை­யின்­போது மிஸ்டர் பிர­பா­கரன் என்று கூறி­யவர் மஹிந்த ராஜபக் ஷவே­யாகும். அதே­போன்று அநு­ரா­த­பு­ரத்தில் 600 பிக்­கு­களை கொன்று குவித்த கருணா அம்­மானை மாண்­பு­மிகு அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் என்ற நாமம் ??? வைத்­தவர் ராஜபக் ஷவாகும்.

எனவேஇ இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை அலட்­டிக்­கொள்ள தேவை­யில்லை.

ராஜபக் ஷவி­னரின் பாது­காப்பு

தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெறு­வது உறு­தி­யாகி விட்­டது. தற்­போது ஐ.தே.க. தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் குடும்ப மரம் என்ற நூலை தேடி பொலிஸ் சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த செயலை ஏற்­றுக்­கொள்ள முடியாது. குடும்ப மரம் சிறிகொத்தாவில் இல்லை. மாறாக அலரி மாளிகையில் உள்ளது.எவ்வாறாயினும் ஜனாதிபதி 9ஆம் திகதி தேர்தலில் வெற்றி வாகை சூடிய பின்பு எதிரணியினர் அமைதி காக்க வேண்டும். குழப்பம் தேவையில்லை. அதேபோன்று ராஜபக் ஷ குடும்பத்தினரும் அஞ்ச தேவையில்லை. அவர்களது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம் என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/01/05/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.