Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா, சசிகலா மீதான வழக்கு வாபஸ்!

Featured Replies

ஜெயலலிதா, சசிகலா மீதான வழக்கு வாபஸ்!

ஜெயலலிதா மீதான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்த வழக்கை திரும்பப் பெறுவதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

2 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது குறித்து ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது வருமான வரித்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், சுமார் 18 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில், ஜெயலலிதாவும், சசிகலாவும் அபராதம் செலுத்த தயார் என்று கூறி அபராதத் தொகையை வருமான வரித்துறைக்கு அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அபராதம் செலுத்திவிட்டதால், சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வருமான வரித்துறை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து, வருமான வரித்துறையின் முடிவு குறித்து இறுதி உத்தரவை பிற்பகலில் அளிப்பதாக எழும்பூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://www.pathivu.com/news/36734/57//d,article_full.aspx


நியானி: செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
களவிதி: செய்திகள், ஆக்கங்கள், பதிவுகள் முழுமையாக இணைக்கப்படல் வேண்டும்
.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

201501090124569552_AIADMK-chief-Jayalali
சென்னை, 

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வருமானவரித்துறை வழக்கில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

வருமானவரி வழக்கு

வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் 4 வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் கடந்த 1996-ம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்த வழக்கை விரைவாக முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் சமரச தீர்வு மனு ஒன்றை வருமானவரித்துறையிடம், ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும் தாக்கல் செய்தனர். ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோரின் சமரச தீர்வு மனுக்கள் மீது வருமானவரித்துறையின் சமரசதீர்வு கமிட்டி விசாரணை நடத்தியது.

சமரச மனுக்கள் ஏற்பு

விசாரணையில் சமரச மனுக்களை, வருமானவரித்துறையின் கமிட்டி ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள 4 வழக்குகளிலும் சேர்த்து ரூ.1.99 கோடி செலுத்தவும், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோருக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா நடராஜன் சார்பில் இந்த தொகை செலுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், வருமானவரித்துறை தொடர்ந்துள்ள இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று காலை 10.30 மணி அளவில், சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா தரப்பு வக்கீல்கள் அசோகன், கருப்பைய்யா, பன்னீர்செல்வம், வைரமூர்த்தி, திவாகர், தனஞ்செயன் ஆகியோர் ஆஜரானார்கள். வருமானவரித்துறை சார்பில் சீனியர் வக்கீல் ராமசாமி ஆஜரானார்.

வழக்கை வாபஸ் பெற்றார்

வக்கீல் ராமசாமி, கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த சமரசதீர்வு மனுக்களை ஏற்றுக்கொண்டு வருமானவரித்துறையின் இயக்குனர் ஜெனரல் தனது இறுதி ஆணையை கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி பிறப்பித்துவிட்டார்.

இதனால் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீதான வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என்று தெரிவித்து இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவுடன், வருமானவரித்துறை இயக்குனர் ஜெனரல் பிறப்பித்த இறுதி உத்தரவு நகலையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி தனது தீர்ப்பை நேற்று மாலை 3 மணிக்கு வழங்கினார்.

விடுவிப்பு

வருமானவரித்துறையினர் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டதால், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி தனது தீர்ப்பில் தெரிவித்தார். எனவே ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் வருமானவரி வழக்கில் இருந்து விடுதலை பெற்றனர். கடந்த 18 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது. 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.