Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3ஆம் இணைப்பு - நண்பகல் 12 மணி வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

election_CI.jpg

இன்று நண்பகல் 12 மணி வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மதியம் வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நண்பகல் அளவில் 50 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்ழ 38 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 60 வீதமானவர்களும், பொலனறுவை மாவட்டத்தில் 55 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

மாத்தளையில் 62 வீதமானவர்களும், அனுராதபுரத்தில் 30 வீதமானவர்களும், மாத்தறையில் 45 வீதமானவர்களும், களுத்துறையில் 40 வீதமானவர்களும் குருணாகல் மாவட்டத்தில் 50 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

வவுனியாவில் 50 வீதமும், வவுனியாவில் 36 வீதமும், யாழ்ப்பாணத்தில் 25 வீதமும், முல்லைத்தீவில் 59 வீதமும் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

மத்தியானம் வரையில் பாரியளவில் எந்தவிதமான சம்பவங்களும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் 1996 என்னும் ஹாட்லைன் இலக்கத்தின் ஊடாக இலங்கை மனித உரிமைஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ய முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் முறைகேடுகள் தொடர்பில் 0114341524 மற்றும் 0112866224 ஆகிய இலக்கங்களின் ஊடாக அறிவிக்க முடியும் என கபே அறிவித்துள்ளது.

2ஆம் இணைப்பு - முற்பகல் 11.30 வரையில் 30 முதல் 40 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்:-

இன்று முற்பகல் 11.30 மணி வரையில் சுமார் 30 முதல் 40 வீதமான வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

அநேகமான மாவட்டங்களில் 40 வீதமான வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 40 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 30 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

காலியில் 33 வீதமானவர்களும், புத்தளத்தில் 30 வீதமானவர்களும் மொனராகல் மாவட்டத்தில் 30 வீதமானவர்களும், கொழும்பில் 35 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர்.

வடக்கைப் பொருத்தமட்டில் காலையில் அதிகளவானவர்கள் வாக்களிக்கவில்லை எனவும் மாலையில் அதிகளவானவர்கள் வாக்களிக்கக் கூடும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

08-01-2015 - 01:38

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளளதுடன், மாலை 4.00 மணி வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.

முடிந்தளவு காலை வேளையிலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களிடம் கோரியுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்களது கடவுச் சீட்டுக்களை எடுத்துச் செல்வது உசிதமானது என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமொன்றை அனைத்து வாக்காளர்களும் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது எனவும் அவ்வாறு ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, காலவதியாகா கடவுச்சீட்டு, கலாவதியாகா வாகன சாரதி அனுமதிப்பத்திரம் போன்றனவற்றை பயன்படுத்தி ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை ஜனாதிபதி 15044490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 22 மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115278/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.