Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்? : ரகசிய சந்திப்பு நடந்ததாக பரபரப்பு தகவல்

Featured Replies

Tamil_News_large_1169024.jpg
 
காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், த.மா.கா., தலைவர் வாசனை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் பரவி உள்ளது. அதனால், த.மா.கா.,வில் அவர் சேரலாம் என்றும் வதந்திகள் உலாவரத் துவங்கி உள்ளன.
 
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த பின், கட்சியில் பெரும் மாற்றம் ஏற்படும் என, சிதம்பரம் எதிர்பார்த்தார். அத்துடன், கட்சியின் தேசிய ஊடக பிரிவு தலைவர் அல்லது பொருளாளர் பதவி, தனக்கு கிடைக்கும் என நம்பினார்.
 
ஆனால், காங்., தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும், சிதம்பரத்திற்கும் பதவி கொடுக்க விரும்பவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த சிதம்பரம், தன் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், தமிழக காங்கிரசில் முக்கியத்துவம் அளிக்கப்படாததால் எரிச்சல் அடைந்தார்.
 
இதற்கிடையில், 'ஜி 67' என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி, கார்த்தி சிதம்பரம் கூட்டம் நடத்தினார் என்பதற்காக, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதும், அதை கட்சி மேலிடம் கண்டு கொள்ளாததும், சிதம்பரத்தை கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்துள்ளது. அதனால், த.மா.கா., தலைவர் வாசனுடன் இணைந்து செயல்பட, அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
கார்த்தி சிதம்பரம் மீது இளங்கோவன் நடவடிக்கை எடுத்தால், காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் ஜனநாயகப் பேரவையை ஆரம்பிக்க, சிதம்பரம் முடிவெடுத்துள்ளார். அத்துடன், த.மா.கா., தலைவர் வாசனுடன், அரசியல் ரீதியாக இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, வாசனை அவர் ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வாசனுடன் இணைந்து செயல்பட சிதம்பரம் தீர்மானித்தால், அவர் காங்கிரசில் இருந்து விலகி, த.மா.கா.,வில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
  • தொடங்கியவர்

காங்கிரசை விட்டு சிதம்பரம் போனால் கவலையில்லை - இளங்கோவன் 

gallerye_23300175_1169442.jpg

''காங்கிரசை விட்டு சிதம்பரம் போனால் கவலையில்லை,'' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் தெரிவித்தார். கார்த்தி சிதம்பரத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே, அவர் அப்படி தெரிவித்ததாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 
சமீபத்தில், சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில், காங்கிரசில் உள்ள தன் ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய, அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனுமான, கார்த்தி சிதம்பரம், 'ஜி - 67' என்ற அமைப்பையும் துவக்கினார். 
 
கட்சி மேலிடத்தில் புகார்: அப்போது பேசிய கார்த்தி, காமராஜர் ஆட்சி மற்றும் தமிழக காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து, கடுமையாக விமர்சித்ததாக, இளங்கோவன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக, கட்சி மேலிடத்துக்கும் தகவல் அனுப்பினார்.பின், கார்த்தி நடத்திய கூட்டம் குறித்து விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசுக்கு வரும், 30ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், 'கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்' என்றும் எச்சரித்திருந்தார். 
 
கார்த்தி சிதம்பரமோ, 'நான் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்; என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை. அத்துடன், இளங்கோவன் அனுப்பியதாக சொல்லப்படும் நோட்டீஸ் எனக்கு வரவில்லை' என, பதிலடி கொடுத்தார். 
 
இந்தப் பிரச்னையால், இளங்கோவன் மீது கோபமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சிவகங்கை மாவட்டத்தில், த.மா.கா., தலைவர் வாசனை, ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. 'தேவையானால், 
 
இருவரும் இணைந்து செயல்படலாம்' என, அப்போது, வாசனிடம் சிதம்பரம் கூறியதாகவும், இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
இந்நிலையில், நேற்று மதியம், சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் அளித்த பேட்டியில், ''சிதம்பரம், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினால், கவலையில்லை,'' எனக் கூறியது, கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
இளங்கோவன் அளித்த பேட்டி:த.மா.கா.,வில் சிதம்பரம் இணைவாரா என்பது குறித்து அவரோ, வாசனோ தான் சொல்ல வேண்டும்.காங்கிரசை விட்டு யார் வெளியேறினாலும், கட்சி கவலைப்படாது. ஈ.வெ.ரா., ராஜாஜி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள், காங்கிரசை விட்டு வெளியேறிய போது கூட, காங்கிரஸ் கவலைப்படவில்லை. 
 
யாருக்கும் உடன்பாடில்லை:கார்த்தி சிதம்பரம், தன்னை முன்னிலைப்படுத்தி, ஜி - 67 என்ற கூட்டத்தை நடத்திஉள்ளார். அந்த கூட்டத்தின் நோக்கம் தவறானது. 'காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்' என, கார்த்தி அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதில், யாருக்கும் உடன்பாடில்லை. காமராஜரைப் போல ஒப்பற்ற தலைவருக்கு பின், தமிழக காங்கிரசில் மக்கள் தலைவர் யாரும் இல்லை. கார்த்தி, யாரை மனதில் வைத்து, முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுகிறார் என, பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காங்கிரசுக்கு ஓட்டு போடுகிற தொண்டனும் ஓட்டு போட மாட்டான். இவ்வாறு, இளங்கோவன் கூறினார். 
 
ஸ்ரீரங்கத்தில் போட்டியில்லை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவன் 
 
 
கூறியதாவது: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் என்ற அளவில், வேட்பாளர்கள் பட்டுவாடா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அடுத்தடுத்தும், பணம் தர தயாராக உள்ளனர். இடைத்தேர்தல் என்பது செல்லாக் காசுதேர்தல்; கண்துடைப்பு தேர்தல். வழக்கம் போல, ஜனநாயக முறையில் நடக்காது. தேர்தலில் போட்டியிடுவதால் கால விரயம் ஏற்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர, போட்டியிடுகிற மற்ற கட்சிகள் அனைத்தும், பணம் பட்டுவாடா செய்யும். 
 
எனவே, அவர்களோடு மோத காங்கிரஸ் விரும்பவில்லை; அதனால் போட்டியிடவில்லை; யாரையும் ஆதரிக்கப் போவதும் இல்லை. அதற்கு பதில், தொண்டர்களை சந்தித்து, மக்களிடம் காங்கிரசை பற்றி எடுத்துச் சொல்லும் பணிகளில் ஈடுபடுவோம்.கடந்த லோக்சபா தேர்தலில், 144 தடை உத்தரவு போட்டு, ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. போலீஸ் பாதுகாப்புடன் பணம் வழங்கினர். இப்படியிருக்க, இடைத்தேர்தல் மீது எப்படி நம்பிக்கை வைப்பது?இவ்வாறு, அவர் கூறினார்.
 
- நமது சிறப்பு நிருபர் -
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.