Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனுநீதிதான் தமிழர்களைப் பிரித்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"மனுநீதிதான் தமிழர்களைப் பிரித்தது"

பேரூர் மருதாசல அடிகளார் முழக்கம்

கடந்த 20.09௨006 அன்று ஈரோடு மாவட்டம், கோபி பெரியார் திடலில் "தமிழர் கலை இலக்கிய மன்றம்" என்னும் முற்போக்குச் சிந்தனையாளர்களால் துவக்கப்பட்ட இலக்கிய அமைப்பை பேரூர் இளைய ஆதீனம் மருதாசல அடிகளார் தொடங்கி வைத்து கருத்தாழம் மிக்க உரை நிகழ்த்தினார்.

"அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம். ஏன்?" என்ற தலைப்பில் பேசிய அவரது உரையின் சில பகுதிகள்.

"எதையும் ஏன், எதற்கு, எப்படி - என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறார்கள். அனைவரும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியர் ஆகலாம். அனைவரும் இந்தியக் காவல்பணித் தேர்வு எழுதி காவல்துறை அதிகாரி ஆகலாம் - என்று இருக்கும் போது, அனைவரும் அர்ச்சகர் ஆகலாமா?.. என்று கேள்வி கேட்கும் நிலை நாட்டில் இருக்கிறது. நம்மவர்களே இது தகுமா? பண்பாடா? மரபுக்கு மீறிய செயல் அல்லவா? - என்றெல்லாம் அச்சப்படுகிறார்கள்.

தமிழர் வரலாற்றில் கடவுளை வழிபடுவதற்கு எந்தப் பிறப்புத்தகுதியும் வைக்கப்படவில்லை. இடையில் வந்த மனுநீதி, சாத்திரங்கள்தான் அப்படிப் பிரித்தன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்Õ என்பது நம் மறை. தலையிலே, காலிலே, தோளிலே பிறந்தவர்கள் என்று பிரித்து பேதம் செய்தது சாத்திரங்கள்தான். நம்மை அன்னை வயிற்றிலே பிறந்தவர்கள் என்றுதான் நம் பெரியோர் கூறியுள்ளார்கள்.

சிந்தனைத் தெளிவு ஏற்படுத்தியவர் பெரியார்

நம் மண்ணின் மைந்தர், நமக்கெல்லாம் சிந்தனைத் தெளிவை ஏற்படுத்தியவர். அதற்கென்று ஓர் அமைப்பை ஏற்படுத்திச் சிந்திக்க வேண்டும் சிந்திக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் போராடியவர். வைக்கம் வரை சென்று கோயில்களில் உரிமையை நிலைநாட்டியவர்... பெரியார் போன்றவர்கள் சொல்லியும்கூட இன்னும் நம் தமிழர்கள் உண்மையை உணராமல் இருக்கிறார்கள்.

யாரோ, எப்போதோ, எங்கேயோ சொன்னதாகச் சொல்லப்பட்டவைகளை நம்புகிறோம். நம்மோடு ஒருவராக வாழ்ந்த சான்றோர் சொல்வதைக் கேட்காமல் முடிவு செய்யப்படாத நூல்களில் உள்ளவற்றை நம்பிச் செயல்படுகிறோம்.

கலிகாலம் அல்ல! களிப்புக் காலம்!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இது கலிகாலம் என்று ஆதங்கப்படுகிறார்கள்! சட்டரீதியாகத் தமிழர்கள் கோயிலில் சென்று வழிபட இப்போது உரிமை கிடைத்துள்ளது. எனவே இது கலிகாலம் அல்ல. தமிழுக்கு ஏற்றம் தரும் களிப்பு மிகுந்த காலம்!

பெண்களும் வழிபடுவதே நம் நெறி

பெண்களும் கோயில்களில் சென்று இறைவனைத் தொட்டு வழிபடலாம் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. கி.பி. 6ஆம் நூற்றாண்டிலேயே திருப்பனந்தாளில் ஒரு பெண் கோயிலுக்குள் சென்று மாலை சூடி வழிபட்டதாகவும், கன்றாப்பூர் என்னுமிடத்தில் கன்றுக்குட்டி கட்டிய கல்லை ஒரு சிறுமி வழிபட்டு, அதற்குத் தடை செய்தவர்களுக்குப் பாடம் கற்பிக்க இறைவனே நேரில் வந்ததாகவும் சம்பவங்கள் உள்ளன.

ஆதிக்க சக்திகளால் அநீதி

இந்தியாவில் உள்ள 12 சிவத்தலங்களில், வடநாட்டில் உள்ள 11 தலங்களில் யார் வேண்டுமானாலும் அந்த சிலையைத் தொட்டு, நீர் ஊற்றி வழிபடலாம். ஆனால் நம் தமிழ்நாட்டில் உள்ள திருத்தலமான ராமேசுவரத்தில் அப்படி உள்ளே நுழைந்து வழிபட முடியாது. காரணம் இன்னும் ஆதிக்க சக்திகள் அதைச் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.

யார் பெரியவர்?

இறைவனைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்கிறார்கள். உழவர் உற்பத்தி செய்த உணவு உள்ளே போகிறது! எங்கள் சிறுவர்கள் மாடு மேய்த்து, அதில் கிடைக்கும் பால் உள்ளே செல்கிறது! தமிழ்மொழி மட்டும் கோயிலுக்கு உள்ளே போகக்கூடாதா? அங்கு தமிழ்மொழியில் பாடினால் தீட்டாயிடுமா? அந்த இறைவனைத் தீண்டினால் தீட்டுப்பட்டுவிடுமா? அப்படி என்றால் யார் பெரியவர்? இறைவனா அல்லது தொடுபவரா? - என்று சிந்திக்க வேண்டும்.

தேவமொழி அவர்களுக்கு...

தமிழ்மொழியை நீசமொழி என்றும், வடமொழியைத் தேவமொழி என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆம்! அது தேவர்களுக்கான மொழி - அவர்களுக்காகவே இருக்கட்டும். மனிதர்களின் மொழியாக இருக்கும் தமிழ்மொழி நமக்காக இருக்கட்டும். மனித குலத்துக்கே மூத்தமொழியாக இருக்கும் தமிழில் அழைத்தால் இறைவன் வரமாட்டாரா?

திருமணங்களில் வடமொழியில் மந்திரம் கூறுவது ஒரு பண்பாட்டு அவமானம். அந்த மந்திரங்களில் மணமகளை முதலில் "கந்தர்வர்களுக்கு உரிமையாக்கி, பிறகு தேவர்களுக்கு உரிமையாக்கி அதன் பின்பு உனக்கு மணம் முடிப்பதாக" பாடல்கள் உள்ளன. காதணி விழா, புதுமனை புகுவிழா, மணி விழா - போன்றவற்றிலும் தமிழ்ப்பாடல்களே முழங்க வேண்டும்.

எது தேச ஒருமைப்பாடு

தமிழப் பெயர்களைத் தியாகம் செய்து, குழந்தைகளுக்குப் புரியாத, புதிய புதிய வடமொழிப் பெயர்களைச் சூட்டுகிறோம். தேசிய ஒருமைப்பாடு பேசுபவர்களைக் கேட்கிறேன். வடநாட்டில் எத்தனை செழியன்கள் இருக்கிறார்கள்? எத்தனை முருகன்கள் இருக்கிறார்கள்? எத்தனை குமரன்கள் இருக்கிறார்கள்? இதுதான் தேச ஒருமைப்பாடா?

கர்நாடகாவில் ‘புலிகேசி’க்கும் எதிர்ப்பு

23-ம் புலிகேசி என்ற தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் படம் புலிகேசி என்ற மன்னனை இழிவுபடுத்துவதாகக் கூறி கர்நாடகத்தில் திரையிடவிடாமல் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களது மொழியுணர்ச்சியை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசுவார்கள். கன்னடர் சந்தித்தால் கன்னடத்தில்தான் உரையாடுவர். ஆனால் தமிழன் மட்டும் மொழியை மறந்து அதில் சுகம் காண்கிறான். மொழியை அடகு வைக்கும் நிலையைத் தமிழர்கள் மாற்றியாக வேண்டும்.

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறையாக வேண்டும். வருகின்ற எதிர்ப்புகளை சமாளிக்கும் திறம் வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

1954-ல் கோவை-வெள்ளைக் கிணறில் முதல் தமிழ் திருக்குட நீராட்டு தொடங்கி 5000க்கும் மேற்பட்ட தமிழ்மறை விழாக்கள் நடைபெற்றுவிட்டன. அது மேன்மேலும் தொடரவேண்டும். தமிழ் ஏற்றம் பெற, தமிழர் ஏற்றம் பெற ஒவ்வொரு துறையிலும் உழைக்க வேண்டும். இதுபோன்ற இலக்கிய அமைப்புகள் தமிழர் நலனுக்குத் தொடர்ந்து பாடுபட வேண்டும்".

-இவ்வாறு மருதாசல அடிகளார் உணர்ச்சிப் பேருரையாற்றினார்.

-தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.