Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூட்டு பூச்சியை கொல்ல பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இரசாயனப்பொருள் எட்டு மாத குழந்தையின் உயிரை எடுத்ததுடன் நான்கு உடன்பிறப்புக்களையும் ஆபத்தான நிலைக்கு தள்ளிய சோக விபத்து.

Featured Replies

கனடா- அல்பேர்ட்டாவில் வோட் மக்முரெ என்ற இடத்தில் 8-மாத குழந்தை ஒன்று இறந்ததுடன் மற்றும் நான்கு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் தாயார் மூட்டுபூச்சிகளை அகற்றுவதற்கு ஒரு வகை இரசாயன புகையூட்டியை உபயோகித்தமை இந்நிலைக்கு காரணமென கூறப்பட்டுள்ளது.

இவர் மூட்டு பூச்சிகளை கொல்வதற்கென அண்மையில் விடுமுறைக்கு பாகிஸ்தான் சென்று திரும்பியபோது ஒரு வகை இரசாயனப் பொருளை கொண்டு வந்தார் என அவரது சகோதரி ஷாசியா யார்க்கான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்மாடிக்கட்டிடத்தில் இவர்கள் குடியிருந்த யுனிட்டில் மூட்டு பூச்சிகள் இருந்ததாகவும் அது குறித்து பராமரிப்பாளரிடம் தெரிவித்தபோது அவர்கள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லையாதலால் அவற்றை கொல்லும் முயற்சியை தன் கையில் எடுத்துள்ளார்.

எத்தகைய பொருள் உபயோகப்படுத்த  பட்டுள்ளதென்பது பொலிசாரால்  சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இது ஒருவகை நிறமற்ற துர்நாற்றம் வீசும் வாயு கலவை என்றும் மிகவும் ஆபத்தான விவசாய பூச்சிக்கொல்லியான இது மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொஸ்பைன் எனப்படும் இந்த பொருள் கனடாவில் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பாவிப்பதற்கு விசேடமான அனுமதி தேவை. பெரும்பாலும் விவசாயிகள் தங்கள் பயிர்களிற்கு உபயோகிப்பது.

இரசாயன சிந்தல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்று கிழமை வோட் மக்முறெயிலிருந்து ஆர்சிஎம்பியனருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள் குறிப்பிட்ட சிந்தல் ஒரு யுனிட்டில் மட்டுமே காணப்பட்டதை கண்டுபிடித்தனர். ஆனால் முழு கட்டிடத்தில் உள்ளவர்களையும் வெளியேற்றினர்.

திங்கள் கிழமை எட்டுமாத பெண் குழந்தை இறந்து விட்டது. இரண்டு மற்றும் ஆறு வயதுடைய அதன் உடன்பிறப்புக்கள் எட்மன்டனில் உள்ள சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டனர். 4 மற்றும் 7-வயதுடைய மற்றய இரண்டு உடன்பிறப்புக்கள் வோட் மக்முரேயில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குழந்தைகளின் தாயாரும் வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இரசாயனப் பொருளை கடந்த செவ்வாய்கிழமை குழந்தைகளின் தாய் தனது யுனிட்டில் உபயோகித்ததாகவும் சனிக்கிழமை குழந்தைகள் சுகயினமுற தொடங்கியதாகவும் அவரது சகோதரி தெரிவித்தார்..

தனது குடியிருப்பு யுனிட்டில் ஒரு கொடிய இரசாயன பொருளை சிந்தி கவனக்குறைவால் தனது ஐந்து குழந்தைகளிற்கும் விசத்தை வைத்த நிடா ஹபீப் என்ற இந்த தாய் எட்மன்டனிற்கு சென்று கடுமையான சுகயீனமுற்றுள்ள தனது பிள்ளைகளை பார்க்க உதவி கோருகின்றார்.

ஹபீப்பின் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் எட்மன்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதை ஒரு சோகம் ததும்பிய விபத்து என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆண் குழந்தைகள் எனவும் தெரியவந்துள்ளது.

தாயார் நிலத்தை வெற்றிட சுத்தமாக்கியால் துப்பரவு செய்த போது பூச்சிக்கொல்லி துகள்கள் ஆபத்தானவையாகியதுடன் நொருங்கி காற்றில் கலந்து விட்டதாக துணை தீயணைப்பு தலைமை அதிகாரி பிராட் கிரென்ஜர் தெரிவித்துள்ளார்.

இந்த நஞ்சிற்கு மாற்று மருந்து இல்லையென்றும் இது கல்லீரல், இதயம், கிட்னி போன்றனவற்றிற்கு நீண்ட கால சேதத்தை உண்டுபண்ணும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கனடா எல்லை பகுதிகள் சேவை முகமை ஆர்சிஎம்பியனருடன் இணைந்து இந்த வழக்கை கையாள்கின்றனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

bug-600x337.jpgbug1-600x337.jpg bug2-600x337.jpg bug3.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38483.html#sthash.AZg1knA5.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மூட்டைப் பூச்சிகளும், பாகிஸ்தானிலிருந்து... இவர்களுடன் தொத்திக் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும்.
ஒரு மருந்தை அடிக்க முதல்... அதில் என்ன அளவின் படி, எந்த நேரம், எப்படி அடிக்க வேண்டும் என்று ஒரு துண்டு எழுதி வைச்சிருப்பாங்களே.... அதை, இவ வாசிக்கவில்லையா? 

  • தொடங்கியவர்

அந்த மூட்டைப் பூச்சிகளும், பாகிஸ்தானிலிருந்து... இவர்களுடன் தொத்திக் கொண்டு வந்ததாகத்தான் இருக்கும்.

ஒரு மருந்தை அடிக்க முதல்... அதில் என்ன அளவின் படி, எந்த நேரம், எப்படி அடிக்க வேண்டும் என்று ஒரு துண்டு எழுதி வைச்சிருப்பாங்களே.... அதை, இவ வாசிக்கவில்லையா? 

 

 

அந்த மருந்தை அந்த நாட்டின் சீதோஸ்ண மற்றும் தகுதிகளுக்கேற்பத் தயாரித்திருப்பார்கள்.கனடாவில் அடைத்தவீட்டுக்குள் அடித்தால் அவ்வளவையும் அவர்கள் சுவாசித்திருப்பார்கள்.கனடாவில் ஒரு சிறிய வீட்டுக்குள் அதிகமானவர்கள் வசிக்கும் இனமும் இவர்கள் தான்

  • தொடங்கியவர்

வோட் மக். தற்செயல் நச்சினால் இரண்டாவது குழந்தை மரணம்?. 

 

கனடா-எட்மன்ரன். தற்செயல் நச்சினால் உயிழந்த 8-மாத பெண் குழந்தையின் மரணச்சடங்கிற்காக  மக்கள் கூடியிருந்த சமயத்தில் இரண்டாவதாக இரண்டு வயது சிறுவனும் இறந்து விட்ட செய்தி வெளி வந்துள்ளது.

இது அனைவருக்கும் கடினமானதாகும். குடும்பத்தினர், முஸ்லீம் சமுதாயம் பாடசாலை அனைத்துக்கும் கடினமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8-மாத குழந்தை சாரா ஹசனின் மரணசடங்கு வியாழக்கிழமை இடம்பெற்றது. இவள் சோகம் ததும்பிய தற்செயலான நச்சினால் அல்பேர்ட்டா வடக்கில் வோட் மக்முறெயில் மரணமானாள்.

வியாழக்கிழமை மரணமடைந்த இரண்டு வயது சியாவின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரா என்ற பெண்குழந்தை  ஞாயிற்று கிழமை இறந்தது. ஏனைய நான்கு பிள்ளைகளில் இருவர் வோட் மக்முறே வைத்தியசாலையிலும் மற்றய இருவர் எட்மன்ரன் சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்பட்டிருந்தனர். இவர்களில் இரண்டு வயதுடைய சியா வியாழக்கிழமை இறந்து விட்டான்.

மிஞ்சிய மூவரில் இருவர் வியாழக்கிழமை வீடு திரும்பிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் மாவட்டம் முழுவதிலும் பாடசாலை ரத்துச்செய்யப்பட்டது.

அண்மையில் பாகிஸ்தான் பயணத்தில் இருந்து திரும்பிய போது மூட்டு பூச்சியை அழிக்க உபயோகிக்கும் நோக்கத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தை கொண்டுவந்தமை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பூச்சிகொல்லியை உபயோகித்தமையால் குழந்தைகள் சுகயீமடைந்தது மட்டுமன்றி இருவர் மரணத்தையும் தழுவிக்கொண்டனர்.

இந்த குடும்பத்தினருக்காக அறக்கட்டளை நிதியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

boy3-600x400.jpgboy12-600x400.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38557.html#sthash.sRMywcAi.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காகத்தான் குடிவரவுப் பகுதியில் ஒரு படிவத்தை நிரப்பும்படி கேட்கிறவர்கள். அதை ஒழுங்காக நிரப்பினால் இப்படியெல்லாம் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த.... நாட்டுக்கு உரிய மருந்துகளையே.... பாவிக்க வேண்டும் என்பது எவ்வளவு தூரம் உண்மை.
பெற்றோரின் அறியாமையால்... இரு குழந்தைகளின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டு விட்டது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.