Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரவலான விமர்சனங்களை தூண்டிவிட்டுள்ள கியுபெக் நீதிமன்ற நீதிபதியின் பர்தா நீக்கம்?

Featured Replies

கனடா- ஒரு பெண் அணிந்திருந்த பர்தாவை அகற்றாவிட்டால் அவரது வழக்கை கேட்கப்போவதில்லை என கியுபெக் நீதிபதி ஒருவர் மறுத்ததன் எதிர்விளைவாக சிவில் உரிமைக் குழுக்கள், அரசியல் வாதிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் பரந்த சீற்றமும் கண்டனங்களும் வெளிப்பட்டுள்ளன.

கியுபெக் முதல்வர் பிலிப்பே கொயிலாட் இந்த முடிவு அமைதியை குலைக்கின்றதென தெரிவித்துள்ள வேளையில் கனடிய சிவில் உரிமைகள் சங்கம் இது தொந்தரவு, பாரபட்சமானது என்று தெரிவித்ததோடு சமய சுதந்திரத்தின் கனடிய சாசன உரிமையை மீறுதல் எனவும் தெரிவித்துள்ளது.

ஜஸ்ரின் ட்றூடோ “இது வெறும் தவறு” என அறிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை றானியா எல்-அலோல் என்ற தாய் ஒருவர் பறிக்கப்பட்ட தனது காரை மீள பெறுவதற்காக நிதிமன்றம் போனார். கார் பறிக்கப் பட்ட போது இவர் காரை ஓட்டவில்லை. இவர் தவறு ஏதும் செய்யவில்லை. செய்தது வருடக்கணக்காக அணியும் சமய தலை அங்கியை மட்டுமே அணிந்திருந்தார். கனடியராக சத்தியபிரமாணம் எடுத்துகொண்ட போதும் இதே பர்தாவை அணிந்திருந்தார்.

இவரது மகன் லைசென்ஸ் இன்றி காரை செலுத்தியதால் கார் பறிக்கப்பட்டது.

கியுபெக் நீதிமன்ற நீதிபதி எலியானா மாரென்கோ வாகனம் சம்பந்தபட்ட அவரது வழக்கை கேட்பதற்கு முன்னர் மொன்றியல் நீதிமன்ற அறைக்குள் றானியா அவரது பர்தாவை  அகற்ற வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் தனது நீதிமன்ற அறை மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் எல்-அலோலின் இஸ்லாமிய பர்தா பொருத்தமற்றதெனவும் மாரென்கோ கூறியுள்ளார்.

பர்தாவை அகற்ற எல்-அலோல் மறுக்க அதற்கு பிரதிபலிப்பாக மாரென்கோ காலவரையறையின்றி வழக்கை நிறுத்தி வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பிரதம மந்திரியின் காரியாலய பேச்சாளர் ஒருவர் ஒருவர் தனது முகத்தை மறைக்காத பட்சத்தில் அவர்கள் சாட்சி சொல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நீதிபதி தவறு செய்து விட்டார் என என்டிபி தலைவர் ரொம் முல்கெயர் கூறியுள்ளார்.

நீதிமன்ற அறை ஒன்றின் அனைத்து இடங்களிலும் ஒருவரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படாமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கான விளைவுகள் இருக்குமென தாங்கள் எதிர்பார்ப்பதாக ட்றூடொ கூறியுள்ளார்.

தாங்கள் மரென்கோவின் முடிவுடன் நிற்பதாகவும் பொது அழுத்தத்திற்கு நீதிபதி அடிபணிய முடியாதெனவும் கியுபெக் நீதிமன்றம் கூறியுள்ளது.

மத சார்பான ஆடைகள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் சமயத்தில் தகவல் தொடர்பு அடையாளம் அல்லது பாதுகாப்பு காரணங்களிற்காக அதனை அகற்றுமாறு கேட்கப்படும் என்பது தனது அரசாங்கத்தின் அபிப்பிராயம் என கியுபெக் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வால் தான் கலங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்லும் உரிமை மாநிலத்திற்கு இல்லை என கனடிய சிவில் உரிமைகள் சங்க நிர்வாக இயக்குநர் சுகனியா பிள்ளை கூறியுள்ளார்.

நீதிமன்ற அறை மதச்சார்பற்றதாக இருப்பதற்கு உரிமை உள்ளது ஆனால் மக்கள் என்ன அணிய வேண்டும் அல்லது அணிய கூடாது என சொல்வதாக இல்லை. ஒரு வகையில் அது அவர்களின் மத சுதந்திரத்துடன் பொருந்தியிராது என கூறப்பட்டுள்ளது.

கனடா முழவதிலும் இருந்து மட்டுமல்லாது உலகம் பூராகவும் இருந்து எதிர்வினைகள் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன.

மத்திய அரசின் அதிகார பூர்வ விடையிறுப்பு பல்கலாச்சார மாநில அமைச்சிடமிருந்து வந்துள்ளதாக அறியப்படுகின்றது.

court11-600x450.jpg

 

 
 

 

- See more at: http://www.canadamirror.com/canada/38591.html#sthash.31SkcGDK.dpuf

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.