Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்ணாகத்து தண்ணியில் எண்ணை” திட்டமிட்ட செய்யலா ? ஐயம் வலுக்கிறது

Featured Replies

13929028Natn-600x396.jpg

 

”வலிகாமம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நோர்தன் பவர் நிறுவனம் காரணம் இல்லை. எவ்வாறு ஏற்பட்டது என்பதற்காக காரணத்தை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வெளியிடவேண்டும்.
 
கடந்த சில மாதங்களாக சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலப்பு தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
அதில் எமக்கு தெரிந்த சில உண்மைகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கவேண்டியது அவசியம்.
நொர்தேன் பவர் மின் உற்பத்தி நிலையம் 2009ஆம் ஆண்டு செயற்பட ஆரம்பித்திருந்தது. அதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அஸ்ரம் கூல் எயார் நிறுவனம் மின் உற்பத்தி செய்தது.
 
சுன்னாகம் பகுதியிலுள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர் 2008ஆம் ஆண்டு அந்தப் பிரசேத்திலுள்ள நீரில் ஒயில் கலப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். அந்த காலத்தில் முனைப்புடன் எந்த செயற்பாடுகளும் நடைபெறவில்லை.
 
இதுவரை நொர்தேன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட எண்ணெய்யின் மூலம் தான் கசிவு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் மூலம் எந்த முடிவுக்கும் நாம் வரமுடியாது. மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் நாம் இதுவரையில் ஈடுபடவும் இல்லை, ஈடுபடப்போவதுமில்லை. உண்மை நிலை அனைவருக்கும் வெகுவிரைவில் தெரியப்படுத்தவேண்டும்.எமது நிறுவனத்தில் 54 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனார்கள்.
 
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நொர்தேன் பவர் நிறுவனத்தின் இயந்திரங்களை பராமரிப்பு செய்வதற்காகவும், நீதிமன்றில் கோரிக்கை விடுத்து அதற்கு தற்போது அனுமதி பெற்றுள்ளோம்.இதுவரை காலமும் எமது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்யை விற்பனை செய்கிறோம். அதை மண்ணுக்குள் விடவேண்டிய தேவை இல்லை. மிகுதி கழிவுகளை நிலத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தாங்கியின் மூலம் வெளியேற்றி வருகின்றோம். ”
 
இங்கு அவரால் கூறப்பட்டவைகள் பொய்யானவைகளாகவும், ஏமாற்றுப் பேச்சுக்களாகவும்தான் உள்ளன.
முதலாவதாக, எஸ்.ராஜகுரு என்பவர் மல்லாகம் நீதி மன்றத்தால் பூட்டப்பட்டுச் சீல் வைக்கப்பட்ட நொதேர்ன் பவர் கொம்பனி பராமரிப்பு வேலைகளைச் செய்வதற்கு நீதி மன்றம் அனுமதி வழங்கியதாகக் கூறியிருப்பதைப் பார்ப்போம்.
இது தொட்ர்பாக ராஜகுரு பின்வருமாறு கூறியுள்ளார்
 
”நொர்தேன் பவர் நிறுவனத்தின் இயந்திரங்களை பராமரிப்பு செய்வதற்காகவும், நீதிமன்றில் கோரிக்கை விடுத்து அதற்கு தற்போது அனுமதி பெற்றுள்ளோம்.” இது முற்றிலும் பொய்யானது!!
 
நொதேர்ன் பவர் கம்பனியார் தமது என்ஜின்களை ஓட்டாது நீண்டகாலம் விட்டால் அவை பழுதடைந்துவிடும் எனக் கூறி, மேல் நீதிமன்றத்தில் என்ஜின்களைப் பராமரிக்க அனுமதி கோரியிருந்தனர். அதற்கு மேல் நீதிமன்றம் மல்லாம் நீதிமன்றத்தின் பதிவாளரின் முன்னிலையிலும், இலங்கை மின் சார சபையின் பொறியிலாளரதும், 11 வழக்காளிகளின் சார்பிலான பொறியியலாளரதும் முன்னிலையிலும் பராமரிப்பு வேலைகளைச் செய்ய சென்றவாரம் அனுமதியை வழங்கியிருந்தது.இது பற்றி ஏற்கனவே இந்த முகநூலில் செய்தி போடப்பட்டிருந்தது.
 
ஆனால்,மல்லாகம் நீதி மன்ற பதிவாளர் என்ஜின்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியைத் திறந்து விட்டபோது, உள்ளே நுழைந்த தொதேர்ன் பவர் கம்பனியினர் கொழும்புடன் தொடர்பு கொண்ட பின்னர்,, கட்டிடத்தைக் கூட்டும் வேலைகளில் மாத்திரம் ஈடுபட்டனர். என்ஜின்களைப் பராமரிக்கும் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. அது மாத்திரமன்றி, தாம் தொடர்ந்தும் உள்ளேயே நிற்கவுள்ளோம் என்றும் கூறினர்.
 
இதனால் மல்லாகம் நீதிமன்றப் பதிவாளர் நீதிவானுக்கு விடயங்களைக் கூறிய நிலையில், நீதிவானின் உத்தரவில் நொதேர்ன் பவர் கொம்பனியார்கள் பொலீசாரால் வெளியே விரட்டப்பட்டு, மீண்டும் அவர்களின் மின் நிலையம் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது!
 
இதன் பின்னர், மேல் நீதி மன்றம் இனிவரும் 10ஆம் திகதியன்றே வழக்கினை விசாரணை செய்ய தேதியை நேறறைய தினம் நிர்ணயித்திருந்தது! இந்தநிலையில், இந்த ராஜகுரு என்பவர் யாழ்ப்பாணத்தில் மேல் நீதி மன்றத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாகவே முழுப் பொய்யினைக் கூறியுள்ளார்! அவர் நீதி மன்றத்தில் நடைபெற்றவைகளையே பொய்யாகக் கூறத் துணிந்துவிட்டார். முன்னைய ஆட்சியின்கீழ் நீதித் துறைக்கு நடைபெற்றவைகள் போன்று, இன்று வடக்கின் நீதித்துறைக்கு நொதேர்ன் பவர் கொம்பனியால் உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்பவைக்கிறது!
 
இப்படி நீதி மன்ற விடயங்களிலேயே பொய் சொல்லும் நொதேர்ன் பவர் கொம்பனியினர் தமது செயற்பாடுகள் தொடர்பாகக் கூறுகின்றவைகள் எவ்வளவு பொய்யாக இருக்கமுடியும் என்பதை ஒருவர் சுலபமாக ஊகிக்கமுடியும்.
இந்த நொதேர்ன் பவர் கொம்பனியினர் மல்லாகம் நீதி மன்றத்தில் முதலில் சமர்ப்பிருந்த சத்தியக்கூற்றில், வழக்குத் தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட11 பேரும், அவர்கள் சார்பில் தோன்றும் சட்டத்தரணிகளும் புலிகளின் சார்பான ஆட்கள் எனக் கூறி, சில்லறை இனவாதம் நீதி மன்றத்தில் பேசிய நிலையில், சட்டத்தரணிகள் அதைத் தீவிரமான எதிர்த்த நிலையில், நீதிவான் நீதி மன்றத்தில் இனவாதத்திற்கு இடமில்லை எனக் கொழும்பிலிருந்து வந்து கம்பனி சார்ப்பில் தோன்றிய சட்டத்தரணிகளை எச்சரித்து.சத்தியக் கூற்றில் இனவாதம் பேசியிருந்த இரண்டு பந்திகளையும் நீக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்,
 
அப்பந்திகள் நீக்கப்பட்ட பின்னர்தான் அச்சத்தியக்கூற்று நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டிருந்தது!
இது மாத்திரமல்ல. மேல் நீதிமன்ற விசாரணையின்போது, நொதேர்ன் பவர் கொம்பனி சார்பில் தோன்றிய சிங்களச் சட்டத்தரணி ”தோசைக் கடை” என விமர்சனம் செய்த நிலையில், தமிழ்ச் சட்டத்தரணிகளது காரசாரமான பேச்சுக்களால் வாயடைத்தும் நின்றிருந்தார்!
 
இவை நொதேர்ன் பவர் கொம்பனியாரினதும், அவர்கள் சார்பில் தோன்றிய சிங்களச் சட்டத்தரணிகளதும் இனவாதப் போக்கினையும், ஒருவிதம மேலாதிக்கச் சிந்தனைப் போக்கினையும்தான் அப்பட்டமாகக் காட்டியிருந்தது!
இப்படியான கொம்பனியினர் என்னென்ன விடயங்களைச் சட்டத்திற்கு முரணாகச் செய்திருந்தனர் என்பதை, முழுமையாக ஆராய்ந்துதான் அறியவேண்டும்.
 
எதுவிதத்திலும், கழிவு எண்ணெய்கள் தொடர்பாக ராஜகுரு என்பவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
”இதுவரை காலமும் எமது நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்யை விற்பனை செய்கிறோம். அதை மண்ணுக்குள் விடவேண்டிய தேவை இல்லை. மிகுதி கழிவுகளை நிலத்துக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தாங்கியின் மூலம் வெளியேற்றி வருகின்றோம். ”
 
ஆனால், நொதேர்ன் பவர் கொம்பனியின் இயக்குகை தொடர்பாகப் பல சட்டபுர்வமான கேள்விகள் எழுப்பப்படவேண்டியுள்ளன, பொறியியல் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படவேண்டியுள்ளன.
முதலாவதாக, இந்தக் கொம்பனி எத்தனை MW மின்சக்தியை உற்பத்திசெய்யும் மின்பிறப்பாக்கிகளைக் கொண்டது என்பது மிக முக்கியமானதாகும்.
 
ஏன் எனில் 30 MW இற்கு மேற்பட்ட மினசக்தியை உற்பத்தி செய்வதாயின், அந்த மின் நிலையத்தை அமைப்பதில் வேறு விதமான பலதரப்பான சட்டதிட்டங்கள் உள்ளன.
இதைவிட, இந்தக் கொம்பனியானது செயற்பட எந்த ஆண்டில் அனுமதி எழுத்து வடிவில் வழங்கப்பட்டது என்பது முக்கியமானதாகும்.
 
மேலும், இந்தக் கொம்பனியிடமிருந்து மின் சக்தியைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தை எழுதியிருந்த இலங்கை மின்சாரசபை ஒப்பந்தத்தில் எவையெவைகளைச் சட்டத்திற்கு இணங்கவும், சட்டத்திற்கு முரணாகவும் குறிப்பிட்டிருந்தது என்பது மிகமுக்கிய கேள்வி.
 
ஒப்பந்தத்தில் இந்த என்ஜின்கள் என்ன எரிபொருள் கொண்டு இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது? உண்மையில் இந்த என்ஜின்கள் எந்த எரிபொருள்கொண்டு இயக்கப்பட்டன?
 
மேலும், இந்தக் கொம்பனி எவ்வளவு மின்சக்தியை உண்மையில் ஒவ்வொரு மாதமும் இலங்கை மின்சார சபைக்கு என்ன விலைக்கு விற்று வந்துள்ளது என்பதும் முக்கியமானதாகும்.
 
இவைகளைவிட, இந்தக் கம்பனியின் என்ஜின்கள் எந்த நாட்டின் எந்தக் கம்பனியால் எப்போது உற்பத்தி செய்யப்பட்டது, அவற்றின் வியாபாரத்திற்கான பெயர் என்ன, அவை எப்போது முதன் முதலாக எந்தக் கம்பனிக்கு விற்கப்பட்டிருந்தன, நொதேர்ன் பவர் கம்பனி அதனது இந்த என்ஜின்களைப் புதிதாகத்தான் வாங்கியிருந்ததா, அல்லது அவை பழைய என்ஜின்களா, இலங்கை மின்சார சபையுடன் எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா, சட்டவிதிகளுக்கு இணங்கத்தான் மின் சக்தியை மின்சார சபை கொள்வனவு செய்துள்ளதா எனப் பல கேள்விகள் எழுகின்றன.
 
இவற்றைவிட, இந்த ஒரு என்ஜின் சராசரியாக ஒரு வருடத்தில் எவ்வளவு கழிவு எண்ணெய்களை உருவாக்கும், ஒரு வருடத்தில் எத்தனையாயிரம் லிற்றர் கழிவு எண்ணெய்களை அனைத்து என்ஜின்களும் உருவாக்கியிருக்கும், இந்தக் கொம்பனி செயற்பட்டுவரும் மொத்தக் காலத்தில் எத்தனை லட்சம் லிற்றர் கழிவு எண்ணெய்கள் சுண்ணாகத்தில் உற்பத்தியாகியிருக்கும், இவற்றை எப்படி கம்பனி முகாமைப்படுத்தியது, அதற்கான ஆதாரங்கள் எவை, …… எனப் பல தொழில் நுட்பம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன.
 
இவைகளுக்கெல்லாம் நொதேர்ன் பவர் கொம்பனி ஆதாரபூர்வமான விடைகளைக் கொடுக்கவேண்டும்.
இவைகளைவிட, இன்று தொழில் நுட்பம் முன்னேறியுள்ள நிலையில், பரிசோதனைகளுடாகச் சுண்ணாகம் மின்னிலையப் பகுதியில் எவைகள் கடந்த காலத்தில் நடைபெற்றன என்பதைச் சுலபமாக அறியமுடியும்.
இந்த நிலையில், நொதேர்ன் பவர் கொம்பனி எவற்றையும் கூறமுடியும். ஆனால், எவை உண்மையனவை, எவை பொய்யானவை என்பதை ஆய்வுகளுடாகச் சுலபமாக உறுதிப்படுத்த முடியும்.
 
பொய்களையே சகலவற்றிலும் கூறிவரும் இனவாதப் பேச்சுப் பேசும் நொதேர்ன் பவர் கொம்பனியர்கள் சொல்வதெல்லாம் பொய் என்றே ஒருவரைக் கருத வைக்கும். ஐயா ராஜகுரு! யாழ்ப்பாணத்தில் வசிப்பர்களுக்கு எதுவும் தெரியாது என்று மாத்திரம் நினைக்கவேண்டாம். ”சர்வதேசம்” கொஞ்சம் நசுக்கிவிட்டது. அவ்வளவுதான்!
 
பரிசோதனைகள் முடிந்த பின்னர், எவரெவர்கள் குற்றவாளிகள் என்பது சரியாகத் தெரியும். ஆகவே, சில்லறை அரசியல் நடாத்தாது இருந்துகொள்வது நல்லது ஐயா! எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது
 
  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றில் வந்த எண்ணையையும், நிறுவனத்தின் எண்ணையையும் பகுப்பாய்வு செய்தால் முடிவு தெரிந்துவிடுமே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.