Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தர்ப்பவாத அரசியலை கைவிடாவிட்டால் 10 ஆண்டுகளில் மீண்டும்யுத்தம் ஏற்படுவதனை எவராலும் தடுக்கமுடியாது- My3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

maithiri%2011_CI.jpg


நான் அனைவருக்கும் சொந்தமானவன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் வைத்து தெரிவித்துள்ளார்.


தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் அரசியல் கலாச்சாரத்திற்கு அமைய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானிய கிளைக் குழுவினருடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.


தாம் ஓர் பொது வேட்பாளர் எனவும் தாம் அனைவருக்கும் சொந்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.


எந்தவொரு தனித் தரப்பிற்கும் விசேடமாக சலுகைகளை வழங்கவோ ஒரு தரப்பினை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தவோ போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏதேனும் ஒர் விடயம் பிழையாக போயிருந்தாலும், வாழ்க்கையில் மிகப் பாரதூரமான பாதிப்புக்களை அனுபவிக்க நேரிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த சில காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


2004ம் ஆழிப்பேரலை அனர்த்தம், 2009ம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரனா வெற்றி என பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் நாம் இந்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் பெற்ற வெற்றியை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.


அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் நாட்டில் மீண்டும் ஒர் யுத்தம் ஏற்படுதவனை தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


ராஜதந்திர சேவை மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


ராஜதந்திர பதவிகள் நண்பர்களுக்கான பரிசாக வழங்கப்பட்டு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.


நண்பர்களும் உறவினர்களும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் தங்களது பிள்ளைகளை படிக்க வைத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.


இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக அறவீடு செய்யப்படும் கட்டணத்தை குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
  

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117414/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மைத்திரியர்!  வெளிநாடுகளிலை பெற்றோல் விலையை திருப்பியும் கூட்டீட்டாங்கள்....நீங்கள் / அங்கை என்ன மாதிரி....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.