Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்‌ஷவை மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவர நீதிமன்ற உதவியை நாடும் பொலிஸ்

Featured Replies

basil-01.jpg?resize=315%2C236

 

 

 

 

 

 

 

 

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து வெளிநாடு சென்ற அவரது சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நீதிமன்றத்தின் உதவியை தாம் நாடியிருப்பதாக இலங்கை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளார்கள்.

 

அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே பசில் ராஜபக்‌ஷ தேவைப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ரூவான் குணசேகர இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

 

பசில் ராஜபக்‌ஷ உட்பட ராஜபக்‌ஷ குடும்பத்தவர்கள் பலர் மீதும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின்படி தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக இவர்கள் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

 

மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள பசில் ராஜபக்‌ஷவும் அவரது மனைவியும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள். தற்போது அவர்கள் லாஸ் எஞ்சல்ஸில் இருப்பதாகக் கருதப்படுகின்றது.

 

இருந்தபோதிலும் பசில் ராஜபக்‌ஷ அமெரிக்காவிலிருந்து வெளியேறி தற்போது வியட்னாமில் இருப்பதாக அரச தரப்பு வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன.

 

“பசில் அமெரிக்காவில் இல்லை என எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. எம்முடன் நாடு கடத்தும் உடன்படிக்கையைக் கொண்டிராத நாடொன்றை அவர் தேடிக்கொண்டிருப்பதாக அறியமுடிகின்றது. அவ்வாறான நாடு ஒன்றுக்குச் சென்றால் அவரைத் திருப்பியனுப்ப முடியாது” என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரோ இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

 

பசில் ராஜபக்‌ஷ நாட்டு வெளியாலேயே இருப்பாராயின், அவர் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இன்டர்போலின் உதவியை அரசாங்கம் நாடவேணள்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

 

http://tamilleader.com/?p=47848

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.