Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் - விக்கி எதிர்முனைப் போக்கு இலங்கை வேலன்

Featured Replies

ranil.wiki_CI.jpg

வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு என்பதை வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

தேசங்களின் உருவாக்கம் என்பது தேசியவெறியாகவும், பிரிவினைவாதமாகவும் கொண்டு தேசத்தினை சிதைப்பதற்கான வேரை வரலாற்று நிகழ்வுகளை அகற்றிவிட்டு புரிந்து கொள்ள முடியாது. ரணில் சிறிலங்கா தேசத்தின் பழுத்த அரசியல்வாதி, இனவழிப்பை மேற்கொண்ட பிரதான கட்சியில் முக்கியமான காலகட்டத்தில் அங்கம் வகித்தவராவார். பாரம்பரியமாக தென்னிலங்கை அரைநிலப்பிரபுத்துவ- பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகும். நவதாராளவாதம் என்பது றீகன் காலத்தில் கட்டற்ற தனியார்மயமாக்கல் ஊடாக விரைந்த நிதிமூலதனத்தின் ஆக்கிரமிப்பும், நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி அனைத்தையும் விற்பனைப் பண்டமாக்கிய பொருளாதார நிகழ்வுகளை தொடங்கி நடத்திய கட்சியின் பழுத்த உறுப்பினர்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் சமரசம் கொண்ட நிலப்பிரபுத்துவ பௌத்த பேரினவாத வெறிக்குள் அரசியல் செய்யும் தென்னிலங்கை அரசியல் சக்திகளாகும். தென்னிலங்கை சக்திகள் எவையும் ஆரிய- சிங்கள மாயைக்கு வெளிப்படையாக விடைகொடுக்கும் - வெளியேறும் அரசியல் தார்மீகப்பலம் இல்லாத சக்திகளே தென்னிலங்கையில் இருந்து உருவாகிக் கொள்கின்றன.

பௌத்த பேரினவாத சிந்தனையை உள்ளிருந்தே அகற்றப்படவேண்டும். பேரினவாதம் அகற்றப்படாத வரையில் இனப்பிரச்சனை என்பதற்கு சாத்தியமான தீர்வை பெறமுடியாது. அரைநிலப்பிரபுத்துவம்- பௌத்தம்- பேரினவாதச் சிந்தனையில் மேல் கட்டமைக்கும் அரசியல் படி தான் எந்த சக்திகளும் இயங்குகின்றன.

1995களில் வெளிப்பட்ட இடதுசாரிகளின் முயற்சி கூட இந்த சக்திகளினால் அழிக்கப்பட்டது. அதாவது ஒரு தேசம் போராடிக் கொண்டிருக்கையில் அதற்கு சமமாக சொந்த தேசத்தில் போராட்டத்தினை முடுக்கிவிடவேண்டும் என்று சிந்தனை கொண்ட சிங்கள இடதுசாரிகள் அழிவிற்கு உள்ளாகினர். இவர்களின் நிலைப்பாடுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் அறிகின்ற போது தவறவிட்ட வரலாற்றுத் சந்தர்ப்பங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான துரோகங்களும் இடம்பெற்றுக் கொண்டதை அறிய முடிகின்றது.

இந்த சக்திகளின் பேரினவாதச் சிந்தனை விகிதத்தில் என்றால் மாறுபடலாம். ஆனால் அடிப்படையில் மாற்றமில்லை மார்க்சியம்- புரட்சி பேசிக்கொண்டே ஒரு தேசத்தின் அழிவிற்கு துணைநின்ற சக்திகள். இவர்கள் பொதுவெளியில் இன்று அனைத்து மொழியிலும் சுயவிமர்சனம் செய்யாதவர்களாகவும் தமிழருக்கு ஒரு முகம் மற்றைய மொழிபேசும் மக்களுக்கு ஒரு முகம் காட்டுபவர்களாக உள்ளனர். ஜேவிபி வடக்கு- கிழக்கு மாகாண இணைப்பு உட்பட திம்புக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் நிலையைக் கொண்ட பிரச்சாரங்களே தென்னிலங்கையில் தேவையானதாகும். இதுவே நீண்டகாலத்திற்கு பலன் கொடுக்கக்கூடிய வேலைமுறையும் குறைந்தபட்ச வேலைமுறையாகவும் இருக்க முடியும்.

ரணிலின் பின்புலத்தை அறியாது அவர் குழந்தைப் பிள்ளை சண்டை (Expressing things with unprofessional manner) பிடிக்கின்றார் என்று முகத்திற்கு முன்னால் கூறிவிடுவது என்பது அறியாமையின் வெளிப்பாடு. தமிழ் மக்களிடையே முரண்பாடுகளை அரசியல் நீக்கம் செய்யும் தொழிலைத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்புச் செய்கின்றது. அரசியல் உரிமைகளுக்கும் சலுகைகளுக்குள் முடக்கிவிடும் பிரக்கிராசிமார்களின் அரசியல் தொடர்ச்சியே இதுவாகும்.

மேற்கூறியபோல் பௌத்த வெறியே வாங்குவங்கியை தீர்மானிப்பதாகவும், அடிப்படைவாதிகளை சமசரம் செய்யவேண்டிய நிலையில் தான் பௌத்த பேரினவாத மையச் சிந்தனையில் இருந்து இயங்குபவர்களின் நிலை.

ஆக விக்கியின் நிலைப்பாடு இந்திய- சிறிலங்கா நலனுக்கு நேர்முரண் நிலை கொண்டது. வடக்கின் இந்த நிலை என்பது அரசியல் பேரத்தினுள் அடங்கியிருப்பினும் தமிழ் மக்கள் அந்த குரலுக்குள் இருந்துதான் தம்மை வெளிப்படுத்த வேண்டிய ஒரு நிலையாக இருக்கின்றது.

தமிழர் தரப்புக்கள் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுபட்டு நடக்கின்ற வேளையில் தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச முதலாளித்துவ ஜனநாயக உரிமையின் உள்ளடக்கத்தை மக்கள் மயப்படுத்துவது அவசியமானதாகும். இங்கு சர்வதேச நீதிமன்றம், மக்களுக்கான நீதி என்று அன்னிய சக்திகளிடம் கையேற்திக் கொண்டிருக்கின்றபோது தமிழ் மக்கள் அனைவரினதும் கோமணம் உருவப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

தென்னிலங்கை பௌத்த பேரினவாதத்தின் ஆழத்தினை வெளிப்படுத்திய தேர்தலாகவே இருந்தது. இனிவரப்போகும் தேர்தல் கூட பெருந்தேசியவாதத்தின் பலத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். பெருந்தேசியவாதச் சிந்தனையில் வேர் அறுபடவி;ல்லை என்றால் எவ்வாறு குறுகியகாலத்தில் மாற்றம் ஏற்படும். இலங்கை முழுவதற்குமான மாற்றத்திற்கான சந்தர்ப்பம் குறுகிய காலத்தினுள் இருக்காது.

தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு கூட நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கின்றது. தமிழ்தேசமும், மற்றைய தேசிய இனங்களும் ஒரு நிலையில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இங்கு முகமாற்றம் என்ற நிலைக்கு அப்பால் வெளிப்படும் ஒரு அரசியல் நிகழ்வு மகிந்தவை தோற்கடித்ததாகும். இந்த தேர்தல் கூட இனவாதத்தின் கெட்டித்தன்மையை மீண்டும் நிரூபித்த தேர்தலும் ஆகும்.

இனவாதிகளில் இடையே ஏற்பட்ட வாங்கு பங்குவைத்தலில் கூட அறுதிப்பெரும்பான்மை கொண்டதாகத் தான் இரண்டுபகுதி வாக்குத் தொகைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றது. இன்று சிங்க பெருந்தேசியவாதம் கோபம் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாடுகளின் பின்னால் உள்ள பெருந்தேசிய மையவாதச்சிந்தனையை சிதைப்பதற்கு எவரும் ஒன்றும் செய்யவில்லை என்பதே வெளிப்பாடாகும்.

தமிழ் மக்களிடையே குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையைக் கொண்ட சமூகமாக வாழ்வதற்கு அடிப்படை உரிமை பற்றிய போதிய தெளிவின்மையால் கூட்டமைப்பு போன்ற பிரக்கிராசி அரசியல்தலைமையால் அரசியல் நீக்கம் செய்யப்படுவதை தடுக்கமுடியாது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118091/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.