Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசிடம் விசேட திட்டம் உள்ளதா

Featured Replies

Untitled-1_100.jpg
 
யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்த
விசேட நீதி­மன்­ற­மொன்றை கட்­ட­மைக்கும் ஒழுங்கு முறை அர­சாங்­கத்­திடம் உள்­ளதா என சர்­வ­மத தலை­வர்கள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.
 
மேலும் யுத்­த­த்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, இதன்போது குற்­ற­மற்­ற­வர்­களை உடன் விடு­தலை செய்­ய­வேண்டும்.
 
மேலும் யுத்­த­தினால் இடம்­பெ­யர்ந்­தோரின் காணிகள் தொடர்­பி­லான சட்­டத்தில் சிக்­கல்கள் இருப்பின் திருத்­தங்­களை மேற்­கொண்­டா­வது உட­ன­டி­யாக மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என சர்­வ­மத தலை­வர்கள் பேரவை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.
 
அத்­தோடு வடக்கில் மீள்­கு­டி­யெற்றம் செய்­யப்­பட்­டாலும் எந்­த­வொரு வச­தி­களும் இன்றி யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வானத்தை அன்­னாந்து வேடிக்கை பார்க்கும் நிலை­மையே வடக்கில் காணப்­ப­டு­கி­றது. எனவும் அப்­பே­ரவை சுட்­டி­காட்­டி­யுள்­ளது.
 
சர்வமத தலைவர்கள் பேரவையுடான விஷேட சந்திப்பு நேற்று நீதி அமைச்சில் இடம் பெற்றது.வடக்கு மக்­களின் பிரச்­சிணை தொடர்பில் நேற்று நீதி அமைச்சில் இடம்­பெற்ற விஷேட கலந்­து­ரை­யா­டலின் போதே சர்­வ­மத தலை­வர்கள் பேர­வையின் உறுப்­பினர் மாது­லு­வாவே சோபித தேரர் மற்றும் கரிதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் நிதி அமைச்சர் விஜய தாஸ ராஜபக்ஷவிடம் கேள்வியொழுப்பினர்.
 
மதுலுவாவே சோபித தேரர் கருத்து வெ ளியிடுகையில்,
 
நாட்டின் மதத்­த­லை­வர்கள் மக்­களின் பிரச்­சி­னையை தனது பிரச்­சி­னையாக கொண்டு செயற்­ப­ட­வேண்டும்.மக்­களின் அன்­றாட வாழ்க்கை பிரச்­சினை மாத்­தி­ர­மின்றி தேசிய அளவில் முகங்­கொ­டுக்கும் பிரச்­சினை குறித்தும் அவ­தானம் செலுத்­து­வது எமது கட­மை­யாகும். இதன்­பி­ர­காரம் யுத்­ததின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் பல்­வேறு தரப்­பினர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டு­ள­ளனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் மீது எந்­த­வொரு விசா­ர­ணை­களும் முன்­னெ­டுக்­காமல் பல வரு­டங்­க­ளாக குறித்த அர­சியல் கைதி­களை தடுத்து வைத்­துள்­ளனர்.
 
இது குறித்­தான பிரச்­சிணை சர்­வ­தேச அளவில் பெரும் அவ­தா­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது. இந்த விடயத்தில் இலங்கை சிக்­கி­கொண்­டுள்­ளது. தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்பில் பல்­வேறு தர­வுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. எனினும் குறித்த தர­வுகள் எந்த அளவு உண்மை தன்மை கொண்­டவை என்­ப­தனை எம்மால் உறு­தி­யாக கூற­மு­டி­யாது.
ஆகையால் இது குறித்­தான உண்மை தக­வல்­களை அர­சாங்கம் வௌியி­ட­வேண்டும் . எனவே சர்­வ­மத தலை­வர்கள் என்ற வகையில் நாம் தற்­போது இது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம்.
 
இந்­நி­லையில் யுத்­ததின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பல வரு­டங்­க­ளாக வேதனை அனு­ப­வித்து வரு­கின்­றனர். அர­சியல் கைதிகள் மாத்­தி­ர­மின்றி ஏனைய குற்­றச்­செ­ய­லுக்­காக கைது செய்­யப்­பட்­டோ­ரி­னதும் நிலைமை இவ்­வாறே காணப்­ப­டு­கி­றது. கைது செய்­யப்­பட்­டோரின் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்து கொள்­ளாது பல வரு­டங்­க­ளாக சிறை­யி­லேயே தனது வாழ்க்­கையை கொண்டு செல்­கின்­றனர். இதன்­கா­ர­ண­மாக அவர்­க­ளது வாழ்க்கை அர்த்­த­மற்­ற­தாக மாறு­கி­றது. எனவே இந்த நிலை­மையை மாற்­றி­ய­மைக்க வேண்டும்.
 
இதற்­க­மைய யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டோரின் மீதான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்தி , அத­னு­டாக குற்­ற­வா­ளிகள் அல்­லாத அனை­வ­ரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்­ய­வேண்டும் . இதனை துரி­த­மாக செய்­ய­வேண்டும்.
 
மீள்­கு­டி­யேற்றம்
 
இதே­வேளை 30 வரு­டக்­கால இடம்­பெற்ற யுத்­ததின் கார­ண­மாக தனது சொந்ந இடங்­களை இழந்து பலர் அகதி முகாம்­க­ளி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அது­மாத்­தி­ர­மின்றி பலர் இந்­திய அகதி முகாம்­க­ளிலேும் வாழ்ந்து வரு­கின்­றனர். தற்­போது 10 வரு­டங்­க­ளுக்கு மேல் தனது சொந்த இடங்­களில் இழந்து வாழ்ந்து வரு­கின்­றனர். ஆகையால் வடக்கில் இடம்­பெ­யர்ந்த அனை­வ­ரையும் அர­சாங்கம் மீள்­கு­டி­யேற்ற வேண்டும். இதன்­போது தமி­ழர்கள் மாத்­தி­ர­மின்றி சிங்­க­ள­வர்கள் ,முஸ்­லிம்­க­ளையும் மீள்­கு­டி­யேற்ற வேண்டும். இந்த விட­யத்தில் சட்­ட­சிக்­கல்கள் ஏதும் இருப்பின் குறித்த சட்­டங்­களை திருத்­தி­யா­வது மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்த வேண்டும். எனவே மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் காலத்­தா­மதம் கொள்­ளாமல் மீள்­கு­டி­யேற்ற வேண்டும்.
 
வடக்கு பொரு­ளா­தார பிரச்­சி­ணைக்கு தீர்வு
 
வடக்கில் யுத்­த­தினால் பாதிக்­கப்­பட்­டோரை மீள்­கு­டி­யேற்றம் செய்த போதிலும் எந்­த­வொரு தொழில் வச­தியும் இல்­லாமல் அவர்­களால் நிம்­ம­தி­யாக வாழ்க்­கையை கொண்டு செல்ல முடி­யாது. இந்­நி­லையில் அவர்கள் தனது வாழ்­வா­தா­ரத்­திற்­காக வானத்தை அன்­னாந்து வேடிக்கை பார்க்கும் நிலைமை ஏற்­படும். ஆகையால் வடக்கு மக்­களின் பொரு­ளா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். அப்­பி­ர­தேச மக்­களின் பொரு­ளா­தாரம் அபிவிருத்தி செய்யப்படாவிடின் வடக்கு மக்களின் பிரச்சினையை ஒரு போதும் தீர்க்க முடியாது.
முன்னைய ஆட்சியின் போது எம்மீது சர்வதேசத்தினால் விதிக்கப்பட்ட தடைகள் தற்போதைய புதிய ஆட்சியில் நீக்கப்படும் என நம்புகிறோம். இதன்படி எமக்கு ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை ,ஐரோப்பிய மீன் இறக்குமதி தடைகள் நீக்கப்படும்.இதனுடாக வடக்கு மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும். எமது நாட்டு மக்கள் யாழ்ப்பாணத்தில் பயிரப்படும் கிழங்கிற்கு அதிகளவு விருப்பம் .எனவே வடக்கு பொருளாதாரம் நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. என்றார்.
 
மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடுகையில்,
 
யுத்­ததின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்த விஷேட நீதி­மன்­ற­மொன்றை கட்­ட­மைக்கும் ஒழுங்கு முறை அர­சாங்­கத்­திடம் உள்­ளதா? மேலும் புனர்­வாழ்வு அளிக்கும் நோக்­குடன் தடுத்­து­வைக்­கப்­பட்­டவர் சிலரை வேறு முகாம்­க­ளுக்கு மாற்­று­வ­தி­னூ­டக பல்­வேறு பிரச்­சி­ணைக்கு அப்­பாவி முகங்­கொ­டுக்­கின்­றனர். குறித்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை அரசு துரி­தப்­ப­டுத்த வேண்டும் .இதற்­கான வேலைத்­திட்டம் அர­சாங்­கத்­திடம் உள்­ளதா என்று கேள்வியெழுப்பினார். இந்த சந்திப்பில் அமைச்சர்களைான விஜயதாச ராஜபக்ஷ டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் சர்வமத பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலலித்தனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.