Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு:

Featured Replies

இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்து விட்டார். தெய்வ நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன். அவரை பாராட்டுகிறேன். அவர் லட்சிய பற்றுள்ளவர்.

-திரு.இல.கனேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

....."ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்த சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அது போலவே பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை!...

...பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். 'இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திர போஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே படத்தை எடுத்துக் காட்டுங்கள். பிறகு பார்க்கலாம்' என்றேன்

அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்....

....நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும் சுயமரியாதையோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.

ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.

1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?

2. பெரியாரின் வரலாறா?

3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?

இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல....வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை...

....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்..."

ஜூனியர் விகடனில் இளையராஜாவின் ஸ்பெஷல் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

"ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.

1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?

2. பெரியாரின் வரலாறா?

3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?

இந்த

....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் "

என்னதான் -ஆச்சு இவருக்கு?

கொள்கை விளக்கப்படமாயிருந்தாலும்- வரலாறு உள் நுழையாதா?

தந்தை பெரியார் - என்று சொல்லபடுபவர் படத்தில் - சத்யராஜ் - நடித்தால்- அது அவர் படம் ஆகிவிடுமா?

வீரபாண்டிய கட்டபொம்மன் -படத்தில நடிச்சால்- சிவாஜிதான் - கட்ட பொம்மனா?

காரணம் வேறாயிருக்கலாமோ-என்னமோ-?

இதில் - பங்குகொள்ளும் -கலைஞர்களில் முக்கியமானவர்கள்- ஊதியமே வாங்கலையாம்...!

ஞானசேகரன் - சத்யராஜ்- குஸ்பு - உதாரணமாம்! :lol:

இதே இளையராஜா - தன் ஆரம்பகால கட்ட வளர்ச்சியில்-

கடவுள் மறுப்பு - பொதுவுடமை - என்ற கொம்னீசிய கொள்கைகளை -

ரோட்டோர பாட்டாய் பாடியே - சில்லறை சேர்த்தாராம்.......

உண்மையா? யாரவது சொல்லுங்களேன்! :lol:

இதுவும் அரசியலோ?!!!!!

  • தொடங்கியவர்

ஆரம்பகாலங்களில் தமயன் பாவலர் வரதராசனோடு சேர்ந்து, திராவிடகட்சி கூட்டங்களுக்கு பிரச்சாரப்பாடல்களுக்கு சென்றிருக்கிறார், வரதராசன் பாடுவார் இளையராஜா பக்கவாத்தியம், பின்னர் சினிமாவில் நுளைந்து பெயர்பெற்றார், இசையை பொறுத்த வரக்கும் அவர் ஒரு எட்டாத உயரம்தான் அதை யாராலும் மறுக்கமுடியாது, இருப்பினும் இவர் ஏதும் சொல்லாமல் இவருக்கு இல கனேசன் வாழ்த்து சொல்லி இருப்பாரா?

ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி சட்மாகப்பட்டிருந்தால் இவர் கடைசி வரைக்கும் இசைஅமைப்பாளராக வந்திருக்கமுடியாது, அதை முழுமூச்சாக எதிர்த்து, அனைத்து ஜாதியினரும் அனைத்தும் படிக்கவும் ,தீண்டாமை ஒழியவும், போலி மத நம்பிக்கை அழியவும், ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன் சிந்திக்கவும், நடக்கவும் வைத்த ஒரு ஒப்பற்ற மனிதர் பெரியார், அவர் தெலுங்கராக இருந்தபோதும் அவர் செயல்கண்டு தமிழர்கள் அவரை போற்றுகின்றனர், வீழ்த்தமுடியாத காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வந்த திராவிடர் கழகத்தை ஆரம்பித்து வைத்தவர். அப்படி பட்ட ஒரு சமூகபுரட்சியாளனது வரலாற்றுப்படத்துக்கு, சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்திருக்கும் இளையராஜா இசையமைக்க மறுத்திருப்பது வருத்தமானவிடயம்.

நாத்திகப்படத்துக்கு இசையமைத்தால் தனது ஆத்திகம் கெட்டுவிடும் என கருதினால், அவர் இதுவரை ஆத்திகப்பாடல்களுக்கு மட்டுமா இசை அமைத்து இருக்கிறார், வக்கிரமான எத்தனையோ பாடல்கலுக்கு இசை அமைத்து இருக்கிறாரே அதற்காக அவர் என்ன வக்கிரம் பிடித்தவரா? ஏன் உயர் ஜாதியை போற்றி, தேவர்மகனில் இசையமைத்து சொந்தக்குரலில் போற்றிப்பாடி இருக்கிறாரே,

ஆனால் இசைஞானி கூறியபடி அவரை இசையமைக்க அழைக்கவில்லை என்றால் இதில் எதுவுமே இல்லை, ஆனால் இசையையைவிட மற்றவிடயங்களில் அவர் ஒரு பிரச்சினைக்குரிய நபரே. ;)

http://video.yahoo.com/video/play?ei=UTF-8...%3Dblog%2Btamil

கமயூனிசிய கொள்கை பிடிப்பான பாவலர் வரதராஜன் இவரின் அண்ணன் என்பதை யாவரும்.... அறிந்தததே... பேராசரியர் வானமாமலை மூலம் சேகரித்த நாட்டு பாடல்களையும் அந்த வரதாரஜன் பெற்றிருந்தார்... அதை திரை இசையாக்கி புகழ் பெற்றவர் இந்த இளைராஜா..

மேலை உள்ள வீடியோ இணைப்பில்......சினிமா படத்தில் வருகிற கதை மாதிரி ஒரு புலூடா கதை சொல்கிறார்...தான் மூகாம்பிகை அருள் பெற்ற...விடயத்தை..சம்பவத்தை..

சிரிப்பு என்ன என்றால்... அந்த மேடை ஜெயகாந்தன் ஞானபீடம் பரிசு பெற்ற பாராட்டு விழா...

ஆரம்ப காலங்களில் இளையராஜா; T.M.சௌந்தரராஜனின் பக்தி பாடல்களுக்கும் மிகக் குறைந்த சம்பளத்தில் இசையமைத்து வந்தார். இதனால் பின்னாளில் இளையராஜா சினிமா இசையமைப்பாளராக மாறிய பின்னும் T.M.சௌந்தரராஜன் அவரைப் பெரிதாக மதித்ததில்லை. அதனாலேயே பின்பு இளையராஜா T.M.சௌந்தரராஜனை ஓரம் கட்டினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.