Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தரின் சீற்றம் – மகிந்தவின் உலகசாதனை – நிசாங்கவின் சேவை!

Featured Replies

 

kalamegam09-04-2015.jpg?resize=620%2C413

வணக்கம்

காளமேகம் செய்திகள்,

தயாரித்து வழங்குபவர் பொய்யாமொழி,

முதலில் தலைப்புச் செய்திகள்

 

    1.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கீரிமலையில் 200 ஏக்கர் நிலத்தில் 200 கோடி                  ரூபா செலவில் ஜனாதிபதி மாளிகை அமைத்து சாதனை!

 

  1. மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான நிசாங்க விக்கிரமசிங்க இலங்கையின் விமான சேவையான ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய எடுத்த அர்பணிப்பான சேவைகளை ஊழல் மோசடி என்று அபாண்டமான குற்றச்சாட்டு

 

  1. மகிந்தவின் மருமகன் ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த போது உக்ரேன் போராளிகளுக்கு ஆயுத விற்பனை

 

  1. என்ன செய்ய வேண்டமென்பது எனக்கு தெரியும். எனது விடயங்களில் ஊடகங்கள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சீற்றம்.

 

 

இனி விரிவான செய்திகள்

 

1.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிரிமலையில் 200 ஏக்கர் காணியில் 200 கோடி ரூபா செலவில் பிரமாண்டமான மாளிகை ஒன்றை அமைத்து உலக சாதனை

இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கும் நோக்குடன் ஆட்சிபீடமேறிய மகிந்த ராஜபக்ச உலகின் அதிசயமாக மாற்ற எடுத்த முயற்சியே இந்த மாளிகை என நாட்டின் அபிவிருத்தி மேல் அக்கறை கொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த மாளிகையில் சாப்பாட்டு மண்டபத்திற்கும் சமையல் அறைக்கும் இடையே அரை மைல் தூரமிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கிண்டல் செய்திருக்கின்றார். இது இவரின் அறியாமையை காட்டுகின்றது எனவும், வேலைகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்பு இவரே இந்த மாளிகையை பாராட்டுவார் எனவும் இவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதாவது சமயலறைக்கும், சாப்பாட்டறைக்கும் இடையேயும், படுக்கையறையிலிருந்து குளியலறை, நீச்சல் தடாகம் போன்றவற்றுகக்கிடையே அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவிருந்ததாகவும், அவற்றில் 250 மைல் வேகத்தில் ஓடும் நனோ கார்கள் பணியில் ஈடுபடுத்த இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

200 ஏக்கரில் கட்டிடம் அமைக்கப்பட முடியாது என்பதால் ஏனைய பகுதிகளில் ரோஜா தோட்டங்கள் அமைப்பட்டு, உலங்கு வானூர்திகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்பட இருந்ததாகவும் அறிய முடிகின்றது. மேலும் தெருவில் திரியும் நாய்கள் அனைத்தும் பிடித்து வரப்பட்டு குளிரூட்டிகள் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைக்கப்பட இருந்ததாகவும், ஒவ்வொரு நாய்களுக்கு தனித்தனி மருத்துவர்கள், தாதிகள், பராமரிப்பாளர்கள் என 5 பணியாளர்கள் வழங்கப்பட விருந்தனர். ஸ்ரீலங்கா விமான சேவையைச் சேர்ந்த சில அங்கீகாரம் பெற்ற விமானப் பணிப்பெண்கள் அடிக்கடி வந்து போக உலங்கு வானூர்தி தளமும் அமைப்படவிருந்தது. இப்படியாக தேசிய முன்னேற்றத்திற்குத் தேவையான  ஒரு அபிவிருத்தி திட்டத்தை முழுமையாக்காமல் ஆறு நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவது ஒரு பெரும் தேசத் துரோக செயல் என ஆச்சரிய பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

  1. மகிந்த ராஜபக்ச அவர்களின் மைத்துனரான நிசாந்த விக்கிரமசிங்க சிறீலங்கா ஏர் லைன்ஸ் நிறுவனத்தை அபிவிருத்தி செய்ய எடுத்த நடவடிக்கைகளை ஊழல் மோசடி என அபாண்டமான குற்றச்சாட்டு.

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணையை மேற்கொண்ட  விசாரணைக்குழு நிறுவனத் தலைவர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. விமானங்களை கொள்வனவு செய்தது, விமானப் பணிப்பெண்களை நியமித்தது, வாகனங்களுக்கு போலிப்பத்திரங்கள் தயாரித்து ‘லீசிங்” செய்தது. ஏற்கனவே மொபிட்டல், ரெலிகொம் ஆகிய நிறுவனங்களில் பணியாளராக வேதனம் பெறும் ஒருவரை நிறைவேற்று பணிப்பாளராக நியமித்து மாதம் பதினைந்து இலட்சம் சம்பளம் வழங்கியது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. விமான சேவைக்கு பல கோடி நட்டம் ஏற்பட்டாலும் அதன் பெருமையை உலகம் வியக்க எடுத்த நடவடிக்கையை ஊழல், மோசடி என குற்றம் சாட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் வெளிநாடு போகும் போதெல்லாம் ஒரு விமானப் பணிப்பெண்னையும் தன்னுடன் அழைத்துச் செல்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பெண்களுடன் பயணம் செய்யும் போதும், தனியறையில் தங்கும் போதும் மனம் சந்தோசம் அடையும் என்பதால் போன காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம் என்பதை சிலர் புரிந்துக் கொள்ளவில்லையெனவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக் காட்டின. விமான நிறுவனத்தில் சம்பளம் பெற்ற ஒரு பெண் ஜனாபதி செயலகத்தில் சிறப்பு பணியில் ஈடுபட்டமை போன்ற புதுமையான விடயங்கள் குற்றங்களாக காட்டப்படுவதும் ஒரு முட்டாள்தனம் என்று அவ்வட்டாரங்கள் சுட்டிக் காட்டின.

குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்துவது, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஊழல் மோசடி எனக்குறிப்பிடுவது போன்ற ஜனநாயக விரோத அரசியல் பழிவாங்கல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஆச்சரிய அபிவிருத்தி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

  1. மகிந்த ராஜபக்சவின் மருமகன் உதய வீரசிங்க ரஸ்யத் தூதுவராக இருந்த போது உக்கிரேன் கிளாச்சியாளர்களுக்கு ஆயுதம் விநியோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான பிரச்சினையில் ரஸ்யா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றது. அந்த நன்றிக் கடனுக்காகவே உக்கிரேனினுள்ள ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இலங்கையின் நன்மை கருதியே உதய வீரசிங்க ஆயுதம் விநியோகம் செய்தார் என தெரியவந்துள்ளது. இலங்கைக்கென கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்களே இப்படி அடையில் இறக்கி விநியோகிக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாக இலங்கைக்கு நன்மை தரும் ராஜபக்சாக்களின் நடவடிக்கைகளை குற்றமென கூறி விசாரணை நடத்துவது ஒரு தேசத்துரோக நடவடிக்கையென தேசப்பற்றுள்ள மோசடிகளுக்கான அமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பான விபரங்களும் உதய வீரசிங்கவை விசாரிக்கும் போது வெளி வந்துவிட கூடுமாதலால் அவர் தற்சமயம் தலைமறைவாகி விட்டார். இதன் மூலம் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த சில முக்கிய புள்ளிகளை தப்பவிடலாம் என நம்பப்படுகின்றது.

 

  1. என்ன செய்ய வெண்டமென்பது எனக்கு தெரியும். எனது விடயங்களில் ஊடகங்கள் மூக்கை நுழைக்கத்தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

 

முதிர்ந்த அரசியல்வாதியும்,  ஆசியாவின் ராஜதந்திரிகளில் ஒருவரும், வழக்கறிஞருமான இரா.சம்பந்தன் அவர்களை ஊடகங்களும், வேறு சில தமிழ் சிவில் சமூகங்களும் விமர்சனங்கள் செய்வது அவரையும், அவர் தொண்டர்களையும் ஆத்திரமடைய வைத்துள்ளது. விமர்சனம் செய்யப்பட முடியாத தலைவர்களில் ஒருவர் என்பதனை பலரும் பல சமயங்களில் மறந்து விடுகின்றனர். அரசியலின் பக்கம் திரும்பிப்பாராமல் நல்ல வழக்கறிஞராக செயற்பட்டு வந்த அவர் தமிழரசுக்கட்சியின் அப்புகாலத்து மேலான்மை காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டவர். தனி நாட்டு கோரிக்கை அலையில் 1977 இல் அவர் நாடாளுமன்றத்தில் கால் வைத்த போதும் இவர் தமிழீழ கோரிக்கையை வெறுப்பவர். 2013 ஆம் ஆண்டு ரணிலுடன் சேர்ந்து சிங்களத் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தது. 2015 ஆம் ஆண்டு சுந்திர தின விழாவில் பங்கு கொண்டது போன்ற ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் புகழ் பெற்றவர்.

விசமிகள் இவரதும், சுமந்திரனினதும் உருவப் பொம்மைகளை எரித்தாலும் அவர் கொள்கை மாற மாட்டார். ஏனெனில் என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கு மட்டும் தான் தெரியும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் முதிர்ந்த அரசியல்வாதி என நேரடியாகவே பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர் அவர் என்பதை உணர்ந்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விக் கேட்பதை நிறுத்த வேண்டும் என்பது அவரின் அன்பர்களின் கருத்தாகும்.

 

மீண்டும் விசித்திரமான செய்திகளுடன் சந்திக்கிறோம் எனக் கூறி விடைபெறுகிறோம்.

நன்றி – வணக்கம்.

http://tamilleader.com/?p=48184

மொத்தத்தில் சம்பந்தனுக்கு பைத்தியம் பிடிக்காட்டி சரிதான் .  வர வர அலட்ட தொடங்கிட்டார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.