Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பொறுத்திருந்து பாருங்கள்" மகிந்த ராஜபக்ஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பொறுத்திருந்து பாருங்கள்" மகிந்த ராஜபக்ஸ

- விசேட தமிழாக்கம் ரஜீபன்

mahintha%207c1c-2060x1236_CI.jpeg

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளார் என்கின்றனர் அவரது உதவியாளர்கள்.

இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத தோல்வியை தழுவிய பழுத்த அரசியல்வாதியான ராஜபக்ச அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றார், தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது முடிவை அவர் இன்னமும் அறிவிக்கவில்லை.

எனினும் அவர் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொள்ளும் நூற்றுக்கணக்கான ஆதராவாளர்களை சந்தித்துவருகின்றார், மேலும் அவர் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சென்று மாகாணசபை மற்றும் ஊள்ளுராட்சி அமைப்புகளின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்றார்.

கடந்த வாரம் அவரது அரசியல்வாழ்க்கை முடிவடைந்துவிட்டதா என நாங்கள் கேள்வியெழுப்பிய வேளை பொறுத்திருந்து பாருங்கள் என அவர் பதிலளித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நான் இன்னமும் முடிவெடுக்கவில்லை,ஆனால் மக்கள் வேண்டுகோள் விடுத்தால் அதனை என்னால் நிராகரிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி 8 ம் திகதி தேர்தலில் மைத்திரிபாலசிறிசேன 6 வீதத்தினால் பெற்ற வெற்றியை இந்தியாவும், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் வரவேற்றிருந்தன. இலங்கையின் வரலாற்றில் மிகமுக்கியமான தேர்தல் என அதனை குறிப்பிட்டிருந்த ஆய்வாளர்கள் ஜனநாயகத்திற்கான இறுதி வாய்ப்பு எனவும் தெரிவித்திருந்தனர்.

2005இல் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அதற்கு நான்கு வருடங்களுக்கு பின்னர் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிரான இரத்த ஆறு பெருக்கொடுத்த போரில் இராணுவத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். அதன் காரணமாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் அவரது ஆதரவு பலமடங்காக அதிகரித்தது. 2010இல் அவர் மீண்டும் வெற்றிபெற்றார். அதன் பின்னர் தான் மூன்றாவது தடவையாக போட்டியிடக்கூடிய விதத்தில் அரசமைப்பை மாற்றினார்.

எனினும் ஊழல் குற்றச்சாட்டுகள், எதிர்கட்சியினர் மீதான வன்முறையுடன் கூடிய அச்சுறுத்தல்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், தமிழ்மக்கள் மத்தியில் அதிகரித்த அதிருப்தி மற்றும் வெறுப்புணர்வு, மதரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்தமை போன்றவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கரிசனைகளை அதிகரித்தன.

மேலும் உள்நாட்டு பொருளாதார அபிவிருத்தியின் பலாபலன்கள் மக்களை சென்றடையாத நிலை காணப்பட்டது, இது உள்நாட்டு ஆதரவை பாதித்தது,மேலும் சீனா பக்கம் இலங்கை அரசாங்கம் சாய்ந்தமை அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கரிசனைக்குரியவிடயமாக காணப்பட்டது.

அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக ஏதேச்சதிகார போக்கு காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன,மேலும் முக்கிய பதவிகளுக்கு அவர் தனது இரு சகோதரர்களை நியமித்தமை குடும்ப ஆட்சி குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுத்தது.

எதிர்பாராத தோல்விக்கு பின்னர் அவர் மனமுடைந்த போதிலும்,தன்னை நாடி மக்கள் வருவதை பார்த்ததும் அவர் மீண்டும் தன்னம்பிக்கை கொண்டார் என்கின்றனர் அவரது சகாக்கள் தனக்கு முன்னர் போன்று மக்கள் ஆதரவு தற்போதும் உள்ளதை அவர் உணர்ந்ததும் மகிந்த பழையநிலைக்கு திரும்பினார் என அவருடைய நீண்ட கால நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

சிங்கள கிராமங்களிலும், பௌத்த பழமைவாதிகள் மத்தியிலும் அவர் தொடர்ந்தும் பிரபலமானவராக காணப்படுகின்றார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.மேலும் மக்களை கவரும்விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்ள கூடிய திறமை அவருக்குள்ளது.

சிறிசேன அரசாங்கம் தானே அதற்கு முக்கிய அச்சுறுத்தல் என்பதை உணரவேண்டும் என மகிந்த ராஜபக்ச விரும்புகின்றார்,அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்,ராஜபக்ச இல்லாமல் எதிhகட்சிகள் இல்லை என்ற நிலை தற்போது காணப்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அரசியலுக்கு திரும்புமாறு கோரி மூன்று பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

ராஜபக்ச தனது தோல்விக்கு இந்திய மற்றும் மேற்குலக புலனாய்வு அமைப்புகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

யூன் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடமிருந்து பெறுவதே அரசியலுக்கு மீண்டும் திரும்பவதற்கு அவசியமான நடவடிக்கையாகும்.

தனக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் ஜனாதிபதி கார்டியனுக்கு தெரிவித்தார்.

நான் சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன்எனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்துள்ளேன் இவ்வாறான சூழ்நிலையில் கட்சி எனக்கு ஏன் போட்டியிட அனுமதி மறுக்கவேண்டும். நூன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பிலேயே போட்டியிட விரும்புகிறேன் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன் என்பதை புறக்கணிக்க முடியாதுஎன அவர் தெரிவித்தார்.

இதேவேளை அவரது ஆதரவாளர்களை கவரக்கூடிய இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிடுவதும் அவரிற்கான வழியாகவுள்ளது.சிங்கள தேசியவாத நிகழ்சிநிரலை அடிப்படையாக கொண்ட கட்சியின் சார்பிலேயே அவர் போட்டியிடுவார், அவருடைய செல்வாக்கு அங்கேயேயுள்ளது, இந்த வாக்காளர்களே அவரை ஒரு போதும் கைவிடாதவர்கள் என்றும் மகிந்தவின் சகாவொருவர் தெரிவித்தார்.

இது ஏற்கனவே பிளவுபட்டுள்ள தேசத்தில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தும், முன்னர் கடும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை சேர்ந்த தமிழ் வாக்காளர்களும், முஸ்லீம் சமூகத்தினரும் ராஜபக்சவின் தோல்வியில் முக்கிய பங்களிப்பையாற்றியிருந்தனர். கிளிநொச்சி வாக்காளர்களில் 70 வீதமானவர்கள் சிறிசேனவிற்கே வாக்களித்தனர் என தகவல்கள் தெரிவித்தன.

இந்த வாரம் ஆற்றிய உரையில் புதிய ஜனாதிபதி தேசிய ஐக்கியத்திற்கு அழைப்பை விடுத்தார். எனினும் சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குறிப்பிடதக்க சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.புதிய அரசாங்கத்தின் ஸ்திரமின்மை என்பது அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை.

ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றும் ஓரேயொரு நோக்கம் காரணமாகவே ஐக்கியப்பட்ட கூட்டணியிது. நாடாளுமன்ற தேர்தலில் தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திற்குள்ளது.

சிறிசேன நிறைவேற்று பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையை மீண்டும் பலப்படுத்த முயல்வதன் மூலம் நிறைவேற்று அதிகாரமுறைகை;கு சமநிலையை அளிக்க முயல்கின்றார்.ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் குவிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான அதிகாரங்களையும் குறைக்க முயல்கின்றார்.

எனினும் இதற்கு புதிய சட்டங்களும் சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படலாம்.அதேவேளை ஆழமான பொருளாதார பிரச்சினைகள் உள்ளன, யுத்தத்தின் வடுக்களும் வெளிப்படையாக தென்படுகின்றன.

இலங்கை சிறைகளில் 200 க்கும் மேற்பட்ட அரசியல்கைதிகள் உள்ளதாக பிரதமர் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.புதிய அரசாங்கத்தின் ஆதரவில்ஏற்படும் வீழ்ச்சி மகிந்தராஜபக்சவின் மீள்வருகைக்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் என சுட்டிக்காட்டுகின்றார் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து.

புதிய அரசாங்கத்தின் ஆதரவு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் வரை மகிந்த ராஜபக்ச என்பவர் முக்கியத்துவம் பெறுவார், அதிருப்தியடைந்த வாக்காளர்களின் தெரிவாக அவர் மாறுவார், குறிப்பாக சிங்கள பெரும்பான்மை சமூகத்தை பொறுத்தவரை என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி தனது மீள்வருகைக்காக அவசரப்படவில்லை, என்கின்றனர் அவரது சகாக்கள், அவருக்கு எப்படி காத்திருக்கவேண்டும் என்பது தெரியும், தனக்கு ஜனாதிபதி ஆசையுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்கு முன்னர் 35 வருடங்களாக அவர் காத்திருந்தார், அதுவரை அவரிற்கு அவ்வாறான ஆசையுள்ளது எவரிற்கும் தெரியாது, தற்போது இந்த அரசாங்கம் தனக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் வரை அவர் காத்திருப்பார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118751/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ரனில்/ மைத்திரியின் நாடகம் முடிந்த பின் (4+ வருடங்கள்) மீண்டும் கூட்டமைப்பு தமிழ் மக்களை மகிந்தவுக்கு வாக்களிக்க சொல்லுவார்கள். புலி அல்லாத வாலுகள் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியம் என புகழோ புகழ் என புகழுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரனில்/ மைத்திரியின் நாடகம் முடிந்த பின் (4+ வருடங்கள்) மீண்டும் கூட்டமைப்பு தமிழ் மக்களை மகிந்தவுக்கு வாக்களிக்க சொல்லுவார்கள். புலி அல்லாத வாலுகள் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியம் என புகழோ புகழ் என புகழுவார்கள்.

 

புலி அல்லாத வாலுகளைப் பற்றி நன்றாகவே.... கணித்து வைத்துள்ளீர்கள், நுணாவிலான். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.