Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றச் செயல்களை மூடிமறைக்க பூமியதிர்வினால் முடியுமா?

Featured Replies

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழில் கவின்:-

Nepol_CI.jpg

சர்வதேச யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் படையினரின் பெயரை புனர்நிர்மானம் செய்ய சிறந்த சந்தர்ப்பமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள தூர நோக்குடன் ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிக்கின்றனர்.

இதன் ஓர் கட்டமாக நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்வினை பயன்படுத்திக் கொள்ள பிரதமரும் ஜனாதிபதியும் தீர்மானித்துள்ளனர்.

நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உலகின் எந்தவொரு மூலையில் அனர்த்தம் ஏற்பட்டாலும் அந்த அனர்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுப்பது நாகரீகமான மனித சமூகத்தின் தலையாக கடப்பாடுகளில் ஒன்றாகும்.

ஏனெனில் உலகின் ஏனைய எல்லாவற்றை விடவும் மனித உயிர்களுக்கு மதிப்பு அதிகம் என்பதனாலாகும். நேபாளத்தில் இடம்பெற்ற அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதெனும் ஒர் வகையில் உதவுவது நல்ல விடயமேயாகும் அதனை மறுப்பதற்கில்லை.

எனினும் இலங்கைப் படையினரின் இந்த மனிதாபிமான உதவிகள் யுத்தக் குற்றச் செயல்களை மூடி மறைக்க உதவுமா?

அந்த இடத்திலேயே பிரச்சினை காணப்படுகின்றது.

உயிர்களை அழித்து, உயிர்களை காப்பாற்ற செல்வது சில நாடுகளின் நாகரீக கலாச்சாரமாக உருவெடுத்துள்ளது. அது 'வாழ்க்கையில் நாம் செய்த அனைத்து பாவங்களும் களனி விஹாரைக்கு சென்று ஒரு தடவை வழிபாட்டால் நீங்கிவிடும்' என்ற பழமொழிக்கு நிகரானதாகும்.

பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்தி, பல கொலைகளை செய்து, பாவத்தைச் செய்து, எங்கோ ஓர் இடத்தில் இறுதியில் யாருக்கேனும் ஏதேனும ஒர் உதவியை செய்வதன் மூலம் பழைய குற்றச் செயல்களை நியாயப்படுத்திவிட முடியுமா? அல்லது பழைய குற்றங்களை மறந்து விட முடியுமா?

இலங்கைப் படையினரின் களங்கத்தை நீக்கும் வகையில் தூர நோக்குடன் புதிய ஜனாதிபதியும் பிரதமரும் நேபாள அழிவில் படையினரை உதவிக்கு அனுப்பி வைத்திருந்தால் அது பிழையான ஓர் காரியமாகும்.

இது முன்னைய ராஜபக்ஸ அரசாங்கத்தைப் போன்றே பிழையான ஓர் பாதையில் நடப்பதாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் ராஜபக்ஸவை விரட்டியடிப்பதற்காக தங்ளது வாக்குகளை பயன்படுத்தியது, தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலாகும்.

அவ்வாறு இன்றி தங்களது மானத்தை இழிவுபடுத்தி, சொந்த மண்ணை தங்களது குருதியினால் ஈரப்படுத்திய பாரிய அழிவை ஏற்படுத்தியவர்ளுக்க வெள்ளையடிப்பதற்காக அன்றியல்ல.

இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித இருதயங்களினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளமை இப்போது நிரூபணமாகி வருகின்றது. அழிவின் பின்னர் எஞ்சிய தமிழர்களின் வழிகளில் அந்த வழி ஆழமாக பதிவாகியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பில் நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

விசாரணைகளை காலம் தாழ்த்தி, தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பாது குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தரப்பாக அடையாளப்படுத்தப்படும் படையினரை நேபாளத்தில் மனிதாபிமான பணிகளுக்காக அனுப்புவதனால் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் போய்விடாது. அவர்களுக்கு எதிரான சர்வதேச குற்றச்சாட்டுக்கள் நீங்கிவிடுமா?

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என மிகத் திட்டவட்டமாக கூறி வந்த பலர் இன்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர்.

நேரடியாக யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மனச்சாட்சியின் அடிப்படையில் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

யுத்தத்தினால் சர்வதேச ரீதியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படையினரின் நற்பெயரை மீள கட்டியெழுப்பும் நோக்கில் நேபாள அழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்க அனுப்பி வைக்கும் நடவடிக்கையானது பிரதமரினதும், ஜனாதிபதியினதும் தூர நோக்குப் பார்வைகளில் ஒன்றாக அமையக் கூடும்.

எனினும் யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டவில்லை.

நியாயம் வழங்காது இவ்வாறு படையினரை மீட்புப் பணிகளுக்கு அனுப்பி அதன் ஊடாக பிரச்சினைகளை தீர்வு காண முடியும் என கருதினால் அந்த எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது.

தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு நியாயம் நீதி வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறின்றி நேபாளத்திற்கு ஆயிரக் கணக்கான படையினரை அனுப்பி வைப்பதில் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அவ்வாறு செய்தால் தங்களது மனச்சாட்சியே விரோதமாக செயற்படும்.

வடக்கில் தாய் ஒருவரின் மனக் குமுறலுடன் இந்த பதிவை முடிவுறுத்த விரும்புகின்றேன்.

'மஹிந்த ராஜபக்ஸ புதிய பாதைகளை அமைத்தார், பாலங்கள் செய்தார், எனினும் நாம் சொன்னோம், இன்றும் நாம் சொல்கின்றோம், இவை அல்ல நாம் கோரியது. எங்களுக்குத் தேவை எங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

லங்கா ஈ நியூஸ்; மற்றும் விகல்ப ஆகிய ஊடகங்களில் வெளியான கட்டுரையின் தமிழக்காம்.

யுத்தக் குற்றச் செயல்களை மூடிமறைக்க பூமியதிர்வினால் முடியுமா?  குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தமிழில் கவின்:-

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.