Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போன அகதிகள் படகு கிழக்குதிமோர் லண்டூர் கிராமத்தில் தரை தட்டியது..

Featured Replies

இந்தோனேசியால் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு நடந்தது என்ன?
 
இந்தோனேசியா நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளை கொண்டிருந்த படகொன்று பற்றி தகவல்கள் இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. 
 
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த இவர்கள் முதலில் இந்தோனேசியா சென்று முகாம்களில் தங்கியிருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொண்ட இப்படகில் சுமார் 65 பேர் வரையிலிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
 
தாம் அடைக்கலம் புகும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை தகவலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது உறவுகள் பின்னர் அவர்களது தொலைபேசிகள் செயலிழந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இறுதி வரை செயற்பட்டுக் கொண்டிருந்த படகின் மாலுமியின் செய்மதி தொலைபேசியும் கடந்த ஓரிரு நாட்களாக செயலிழந்திருப்பதாக உறவினர்கள் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாணசபையின் கூட்டமைப்பு சார்பு உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.
 
ஏற்கனவே மியான்மார் நாட்டிலிருந்து தப்பித்து வேறுநாடுகளில் அடைக்கலம் புக முற்பட்டுள்ள அகதிகள் நடுக்கடலில் அந்தரித்துக் கொண்டிருக்கும் நிலையினில் வடகிழக்கிலிருந்தும் அகதிகள் புறப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

காணாமல் போன அகதிகள் படகு கிழக்குதிமோர் லண்டூர் கிராமத்தில் தரை தட்டியது..

 

காணாமல் போன அகதிகள்  படகு கிழக்குதிமோர் லண்டூர் கிராமத்தில் தரை தட்டியது.. காணாமல் போன அகதிகள்  படகு கிழக்குதிமோர் லண்டூர் கிராமத்தில் தரை தட்டியது..

 
குளோபல் தமிழ்ச் செய்திகளுகளுடன்  படகுப் பயனி இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இன்று மதியம் லண்டூர் கிராமத்தில் இருந்து எனது தொலைபேசிக்கு அழைத்த அந்தப் பயனி அவுஸ்ரேலியாவை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில்  அவுஸ்ரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தாம் 8 நாட்கள் உடுத்த உடைகளுடன் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பின்னர் தாம் சென்ற படகை பறிமுதல் செய்து வேறு இரு படகுகளை கொடுத்து ஒருநாளைக்கு அளவான உணவு கொஞ்ச எரிபொருள் ஆகியவற்றுடன் தம்மை கடலில் விட்டதாகவும் தெரிவித்தார்...
 
தமது எரிபொருள் முடிந்து தமது படகு கிழக்குதிமோரில் கரை தட்டியதாகவும் அந்த கிராம மக்கள் காப்பாற்றியதாகவும் தெரிவித்த படகு பயனி தற்போது பொலிசார் விசாரணைனக்காக அங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
 
ஏற்கனவே நேற்று முன்தினம் 29 ஆம் திகதி வெளியிட்ட செய்தி உறவினர்கள் தெரிவித்தமைக்கு அமைவானது..இதன் தொடர்ச்சியாக இன்று குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்பு கொண்ட அவர்கள் இந்த தகவலை வழங்கி உள்ளனர்.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தையும் ஏனையவர்கள் மட்டக்களப்பு - திருகோணமலையினையும் சேர்ந்தவர்கள்....
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.