Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் மீதான வன்கொடுமைகளும் நியாயந் தேடும் சமூகங்களும் - கலாநிதி.சி.ஜெயசங்கர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மீதான வன்கொடுமைகளும் நியாயந் தேடும் சமூகங்களும்

- கலாநிதி.சி.ஜெயசங்கர்

29 மே 2015

Rape_CI.jpg

உலகின் வளர்ச்சிப் போக்கில் பெண்ணிலைவாத முன்னெடுப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையது. அது எந்த வகையிலும் வன்முறைகளை ஏற்றுக் கொள்ளாதது. இதன் காரண மாகவே ஒடுக்கு முறைகளிலில் இருந்து விடுவித்தலுக்கான ஏனைய முன்னெடுப்புக்களுடன் முரண்பாடுகளை எதிர் கொண்டும் வருகின்றது. ஏனெனில் ஏனைய எந்த வொரு விடுவித்தலுக்கான முன்னெடுப்புக்களும் ஏதோ ஒருவகையில், ஏதொவொரு கட்டத்தில் வன் முறையை ஏற்றுக் கொள்வதாக வேநிலைமைகள் இருந்துவருகின்றன.

பெண்ணிலைவாத முன்னெடுப்புக்கள் வாழ்க்கையை அதன் இயல்புடன் எதிர கொள்கின்றன. சமத்துவமான வாழ்க்கையும், உரிமையும் வேண்டுவதுடன் பூக்களையும் வேண்டுவதாகவும் அவை இருந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் பெண்கள் வன் முறைகளுக்கு ஆளாக்கப் படுவதும், கொல்லப் படுவதும் ஒரு தனித்த நிகழ்வு அல்ல. அது ஒரு சமூகப் பண்பாடாகவே இருந்து வருகின்றது. புங்குடுதீவு பள்ளி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன் முறைமற்றும் கொலையை முன்வைத்து நிகழும் எதிர்ப்புக்கள் மேற்படி கூற்றை வெளிப்படுத்தி நிற்பதை எவரும் அவதானிக்கலாம். ஒரு சிறு குழுவைக் குற்றவாளிகளாக நிறுத்தி அவர்கள் மீதும் அவர்களை முன்வைத்தும் நிகழ்த்தப்படும் எதிர்ப்புக்களும் அனர்த்தங்களும் எங்களை எங்களுக்கு அறிவிப்பதாக இருக்கின்றது.

மேலும் பெண்களது காவலர்களாக ஆண்கள் தங்களை ஆக்கிக் கொள்வது, காலாதி காலமாக பெண்கள் மீதான ஆதிக்கத்தையும் அடக்கு முறையையும் மீளவும் வலியுறுத்தி வலுப் படுத்துவதிலேயே வந்து முடிகின்றது.

எந்த வகையிலும் வன்முறையை எதிர்ப்புவடிவமாக ஏற்றுக் கொள்ளாத பெண்ணிலைவாத முன் னெடுப்புக்களின் அம்சமாக அமைந்திருக்க வேண்டிய எதிர்ப்புப் போராட்டம் எந்தவகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் சாத்தியமற்ற சூழலை உருவாக்கி இருப்பது வேதனைக்குரியது.

இது தேவ, அசுரகதைகளைக் கேட்டு, அறிந்துவளர்ந்த சூழலின் விளைவு என்பதையும் நிராகரிக்க முடியாது. ஏனெனில் புராண இதிகாசக் கதைகளிலும் சரி, புதியதிரை, சின்னத்திரை கதைகளிலும் சரிநாயகர்களின் அநியாயங்கள்; பார்க்கப் படுவதில்லை. அதுபோல் வில்லன்களின் அல்லது அசுரர்களின் நியாயங்கள் பார்க்கப் படுவதே இல்லை. பாடப் புத்தகங்களில் இருந்து பாட்டாபாட்டி கதைகள் வரைநிலைமை இதுவாகத்தான் இருந்துவருகின்றது.

புதிய, மாற்று வாசிப்புக்கள் பொதுசன உரையாடல்களுள் இன்னும் புளங்கத் தொடங்கவில்லை.மாறாகஅதிநவீன இலத்திரனியல் தொழில் நுட்பங்கள் வழியும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியகதைகளே கூறப்பட்டு வருகின்றமையும் கவனத்திற்கு உரியதாகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டு வருகின்ற பொழுதும் அது அதீதமாகவும் குற்ற உணர்வற்ற வகையிலும் இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படுவதற்கு புராண இதிகாசங்களே காரணமாக இருக்கின்றன என்பதை பேராசிரியர் 'காஞ்சஎலையா'தனது ஆய்வில் வெளிப்படுத்தி இருப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் பொருத்திப் பார்க்கப்பட வேண்டியது.

புராண இதிகாசங்களில் வரும் தேவத்தன்மை பொருந்திய பாத்திரங்கள் பெண்கள் மீதுநிகழ்த்தி வந்திருக்கின்ற வன்முறைகளை லீலைகளாக அல்லது அவற்றிற்கு நியாயம் கற்பிப்பது, பெருமை கொண்டாடுவது வழக்கமாகி இருக்கின்றது. இந்தப் பண்பாட்டு அனுபவங்கள் பெண்கள் மீதான வன்முறைகளை இயல்பானவையாக நம்பவைத்து வருகின்றன. ஆண்மை பெண்மை என்ற மரபுரீதியான விளக்கங்கள், வியாக்கியானங்கள் ஊடாக இக்கருத்தாக்கங்கள் தொடர்ந்து நிலை நிறுத்;தப்பட்டு வருகின்றன.

ஆண் ஆதிக்கத்தை புனரமைப்புச் செய்ய முனைந்து கொண்டிருக்கும் அனைத்து சமூகங்களது புராணங்களும் இந்தவகையிலான பணியினைச் செய்யும் வகையிலேயே மீள உற்பத்தி செய்துபரவலாக்கம் செய்வது நிகழ்ந்துவருகின்றது. இந்தவகையில் அதிகாரத்திலிருப்போர் கல்வி, வெகுசன ஊடகம் என்பனவற்றை கச்சிதமாகக் கையாண்டு வருவ தொன்றும் ஒழிவுமறைவானதல்ல.

பெண்களை தெய்வமாகவும் பேயாகவும் போகப் பண்டமாகவும் சித்திரிப்பதிலிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு பெண்களுடன் சக மனிதர்களாக சேர்ந்து வாழும் வாழ்க்கையை ஆக்கிக் கொள்வதே தேவையானது. பொறுப்புணர்வுடைய ஆண்களாக வாழ்தலின் அடிப்படை இதுவாகத் தான் இருக்க முடியும்.

எனவே அசுர- தேவ, நாயக- வில்லன் - வில்லிபார்வையில் இருந்து விடுவித்துக் கொண்டு பெண்ணிலைவாத முன்னெடுப்புக்களின் சாராம்சத்தைப் புரிந்து கொண்டு பொதுசனக் கவனிப்பிற்கு வந்த ஒரு சிலசம்பவங்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாது பொதுசன கவனிப்பிற்கு வராத பல்வேறு சம்பவங்களையும் கருத்திற் கொண்டு முன்னெடுப்புக்களை மேற் கொள்வது பொருத்த முடையது. முன்னெடுப்புக்களின் தொடர்ச்சி என்பது முக்கியமானது. குறித்த சிலகாலம் வெகுசன ஊடகங்களுக்கு தீனிபோடும் விடயமாக மட்டுப்படுவதன் பலா பலன்கள் கேள்விக்குரியவை ஆகியிருக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதும் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளாமல் இருப்பதற்கான முன்னெடுப்புக்கள் அவசியமானவை. இதற்கும் மேலாக, குற்றவாளிகள் என அழைக்கப்படுபவர்கள் ஒன்றும் பாதாளக் குகைகளில் இருந்து உருவாகி வந்தவர்கள் அல்லர். எல்லோரையும் போல் தாயின் கருவறையில் உருவாகி, தாயின் உதிரத்திலும் வியர்வையிலும் வளர்ந்துவெளியாகி இந்தச் சமூகத்தினால் வடிவமைக்கப்பட்டவர்கள். இந்த சமூகங்களின் வன்முறைச் சூழல்களால் உருவாக்கப்பட்டவர்கள். இந்தவன்முறைக் கூறுகள்அற்ற இயல்பினர் நாமெனஎவர்தான் கூறமுடியும்? இந்தவன் முறைச் சூழலில் இருந்து விடுபடுவது எமது முதன்மை நிபந்தனை ஆக இருக்கின்றது.

எமதுவன்முறைச் சூழலுக்கு எவை யெவை எந்தவகையில் பங்களிப்புச் செய்துவருகின்றன. இவற்றை எல்லாம் விரும்பிஏற்றுக் கொள்பவர்களாக நாங்கள் எந்த வகையில் இருந்து வருகின்றோம்.

வன்முறையும் பாலியல் பலாத்காரமுமேவாழ்க்கைஎனக் கட்டமைக்கும் நட்சத்திர நடிகர்கள், நெறியாளர்களது சினிமாப் பண்டங்களை நிராகரிப்பதிலிருந்து எமது ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களைத் தொடங்குவது எந்தவகையில் சிரமசாத்தியமானது?

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சந்தையாக வைத்து செய்யப்படும் சினிமாப் பண்ட வியாபாரத்தில் இருந்து விடுவித்து ஆக்கபூர்வமான சமூக உருவாக்கங்களுக்கான சினிமாக்களை வரவேற்பது எந்தவகையில் இயலா தவிடயமாகிவிடும்?

வன்முறைகளையும் பாலியல் வக்கிரங்களையும் கச்சாய்ப் பொருளாகப் பாவிக்கும் வெகுசனஊடகங்கள் மீதும் பொதுசனக் கவனிப்பு ஏற்படுவதும் இதனுடன் தொடர்புடையது.

இந்தவகையில் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும் வாழ்வதற்கான கலைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் எங்களைஎங்களுக்குஅறிவிக்கும.; எங்களைவிடுவிக்கும்.

ஆக்கபூர்வமானதொரு சமூக உருவாக்கத்திற்கான முன்னெடுப்புக்களுக்காக உரையாடல்களும் உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளும் தொடர்ச்சியையும், பகிர்வையும் வேண்டி நிற்பவை.

இந்தப் பூமிதான் எங்களின் சொர்க்கம். இந்தப் பூமியில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் வாழ்வு செய்ய வேண்டும். சிறைச்சாலைகள் நீங்கி அன்புச் சாலைகள் பெருகும் புதியதோர் உலகு செய்வோம்.

நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில் - என்றும்

நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில்

இயற்கைதந்த இனிய வாழ்வை

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்..

இயற்கைமடியினில் கூடுகள் கட்டி

இயற்கைமகிழ்ந்திடவாழ்வினைக் கூட்டி

இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும் - நாங்கள்

இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்

துயர்களைஎல்லாம் துச்சமாய் எண்ணி,

தடைகளைஎல்லாம் வெற்றிப் படிகளாய் மாற்றி

துணிந்து நிமிர்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்- நாங்கள்

துணிந்து நிமிர்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்

அன்பின் வழியிலேவாழ்வினைக் கூட்டி.

வன்முறையற்ற வாழ்வினைக் ஆக்கி

இணைந்துமகிழ்ந்துஉயர்வுபெற்றுவாழவேண்டும்- நாங்கள்

இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழவேண்டும்

கலாநிதி.சி.ஜெயசங்கர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120281/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.