Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல்வாதிகளோ விவாத மேடையில்.. அப்பாவி மக்களோ கொடுமையின் பிடியில்…

Featured Replies

அரசியல் என்னும் அவசியமானதொரு துறை ஒரு நாட்டைச்சார்ந்த நிர்வாகத்திற்காகவும் அந்த நாட்டில் வாழும் மக்களுக்காகவுமே தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். அரசியலும் அரசியல்வாதிகளும் மக்களின் நலன் சார்ந்தும் குறிப்பிட்ட நாட்டின் உயர்வு சார்ந்தும் இயங்கவேண்டியவர்கள் ஆவார்கள். ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கு அரசியல்வாதிகள் அவசியமாகின்றார்கள். ஆனால் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கவும் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கவும் தவறும் அரசியல்வாதிகள் அந்த ஆசனத்தை அலங்கரிப்பதற்கு எந்த வகையிலும் ஏற்புடையவர்கள் அல்லர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

உலகில் பல நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், மேற்படி நாடுகளில் அரசியல் துஸ்பிரயோகங்கள் தாராளமாகவே இடம்பெறுகின்றன. நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகின்றன. வர்க்க நலன், இன நலன் சார்ந்த அரசியலே பெரும்பாலான நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றது. பல வளமுள்ள நாடுகள் அந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்த நேர்மையற்ற அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் வளங்கள் சிலரது கைகளுக்குள் மட்டுமே சென்றுவிடுகின்றது. ஆட்சி பீடத்தை அலங்கரிக்கும் முதலாளித்துவவாதிகள் அடிக்கடி மாறிக்கொண்டிருந்தாலும், ஆட்சியாளர்கள் அனைவரும் மக்கள் நலன் சார்ந்தவர்களாக இருப்பவர்களாகத் தெரியவில்லை. சாதாரண மக்கள் தொண்டன் என்ற போர்வையில் ஆட்சி பீடத்திற்கு தெரிவாகும் அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல, அவர்கள் பொருள் மற்றும் சொத்துக்கள் மிகுந்தவர்களாக ஏற்;றம் பெற்றுவிடுவார்கள். தொழிலாளர்கள் அல்லது பொது  மக்களின் பிரதிநிதிகளாக அரசியலில் நுழைந்து கொண்டவர்கள், காலப்போக்கில் மிகப் பெரிய செல்வந்தராகவோ அன்றி தொழில் அதிபராகவோ உயர்ந்து விடுவார்கள்.

இவ்வாறு இரண்டு மூன்று பிரிவுகளாக இருந்து அரசியல் இலாபங்களையும் சுகபோகங்களையும் அனுபவிக்கும் ‘அரசியல்வாதிகள்’ காலக்கிரமத்தில் தங்களுக்குள் மோதிக்கொள்பவர்கள் போல காட்டிக்கொள்வார்கள். ஆனால் மாறி மாறி ஆட்சிக்கு வந்து அனைத்து பிரிவினருமே தங்களை வளர்த்துக் கொள்வார்கள். அவர்களுக்குள் உள்ளக முரண்பாடுகள் இருந்தாலும் அதைக் காட்டிக்கொடுக்காமல் புதியவர்கள் எவரும் அரசியல் தலைமைக்குள் வந்து விடக்கூடாது என்று மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள்.

நாம் மேற்கூறிய விடயங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் இடம்பெற்று வந்தாலும் இந்தியா இலங்கை மற்றும் தென்னாசிய நாடுகளில் ஒரே வகையாகவே இடம்பெறுகின்றன. மத்திய ஆட்சியிலும் மாநில ஆட்சியிலும் ஊழல் புரிவதற்காகவே அரசியல் பீடத்தை அலங்கரிக்க வருபவர்களே அதிகம். இதற்கு நல்ல உதாரணம் நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதியாகும். அவர் ஆரம்பத்தில் ஒரு கலைஞர், பேச்சாளர். பின்னாளில் அரசியலுக்குள் நுழையும் போது வறுமையின் பிடியில் வாடியவர். ஆனால் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்க்க வேண்டிய அவர் தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்த்து, தற்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்திற்கு தலைவராகத் திகழ்கின்றார். இந்த வகையான அரசியல் ‘விளையாட்டு’ என்பது எமது இலங்கையிலும் நடந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் நேர்மையற்ற தன்மையம் சுயநலமும் காணப்படுகின்றது. இதனால் நம்பியிருந்த தமி;ழ் மக்களும் தொண்டர்களும் ஏமாற்றப்பட்டவர்களாகவே உள்ளார்கள். இவ்வாறு தொடரும் நேர்மையற்ற அரசியல் முறைகளால் போரினாலும் இனவாதத்தாலும் பாதிக்கப்பட்ட நமது ஈழத் தமிழ் இனம் வாழ்க்கையின் அடிமட்டத்திற்கு போய்விட்டது என்றே கூறலாம்.

நமது ஈழத்தமிழர்களது அரசியல் என்பது முன்னைய காலங்களில் சாதாரணமாக கருதப்பட்டிருக்கலாம். ஆனால்; தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி சிங்கள இனவாத அரசுக்கு எதிராக போராடி அவர்களின் பிடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தீர்க்கமான சிந்தனை தோன்றியதன் பின்னர் எமது அரசியல் ஒரு சாதாரணமாக பார்க்கப்படுகின்ற விடயம் அல்ல என்பது அறிவிக்கப்பட்ட ஒரு முடிவாகி விட்டது. அதனிலும் மேலாக 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னர், நமது ஈழத் தமிழர்களது அரசியல் என்பது வெறுமனே பதவிகளுக்காக இருக்க வேண்டிய ஒரு விடயமாக கணி;க்க முடியாது. ஆனால் எமது தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தற்போது நடந்து கொள்கின்ற விதம் மற்றும் பேசுகின்ற விடயங்கள், அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்கின்ற பெருமிதம் அனைத்தையும் நாம் பார்;க்கின்றபோது இனிமேல் தமிழர்களுக்;கு சிங்களவர்களால் மட்டுமல்ல, எமது சொந்த இனமக்களாலும் ஆபத்துதான் என்பதையே உணர்த்தி நிற்கின்றது.

முன்னாள் நீதியரசரும் தற்போதைய வடக்கு மாகாண முதல்வருமான விக்கினேஸ்வரன் தொடர்பாக அவர் சார்ந்த கட்சிக்குள்ளேயே இடம்பெறும் குத்துவெட்டுக்கு இலக்காகப் போகின்றவர்கள் அப்பாவி தமிழ் மக்களே என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விபரித்ததால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோசமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்ற விமர்சனத்தை  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பொன்றைய யாழ்.ஊடக அமையத்தில் முன்னணி நடத்தியிருந்தது. இதன்போது கலந்து கொண்டு அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,திரு சம்பந்தன்  ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். என்;று வலியுறுத்தியுள்ளார். இருதேசம் ஒரு நாடு கொள்கையினை நாங்கள் முன்வைத்திருக்கவில்லை. முதன்முறையாக திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட கொள்கையே அதுவாகும். அந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயம் தேசமாக வாழும் மக்களே சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பது. இதுபோக நாங்கள் தனியே இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தவில்லை. தற்போது வடமாகாண முதலமைச்சராக இருக்கும் நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரன் கூட இந்தவிடயத்தை பேசியிருக்கின்றார். அவர் நன்றாக சட்டத்தை அறிந்தவர். அவர் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கிறாரா? எனவே இது மக்களை தவறான பாதையில் கொண்டுசெல்வதற்கான முயற்சியாகும் என தெரிவித்தார். மேலும் சந்திரிக்காவை தலைமையாக கொண்டு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் திரு சம்பந்தன் கூறியிருக்கின்றார். அது மிக மோசமான விடயமாகும். இதே சந்திரிக்கா தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற கோசத்துடன் வந்தவர். பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்து அதில் எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை மக்களிடமிருந்து பிரிப்பதற்கு முயற்சித்தவர். பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டத்திற்கு சம்மந்தன் ஐயா போன்றவர்கள், ஆதரவு தெரிவித்த நிலையில் விடுதலைப் புலிகளை பிடிவாதக்காரர்களாகவும், தீர்வினை விரும்பாத ஒரு தரப்பாகவும் காண்பிக்க நினைத்தார். அதற்கு இவர்கள் துணைபோனவர்கள். இதனை மறைந்த அன்டன் பாலசிங்கம் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். என்று கூறியுள்ள் கஜேந்திரகுமார் மேலும் திரு சம்பந்தனை சாடுகின்றார். ‘சம்பந்தன் ஐயா! அமைதியாக இருங்கள் மீண்டும் மஹிந்தாவை கொண்டுவந்துவிட வேண்டாம் என்று. எனவே நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை கூற கூட வழியில்லாத போது எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? எனவே நாம் கூட்டமைப்பிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், கூட்டமைப்பின் கடந்த 5வருடகால இராஜதந்திரம் எதனை சாதித்தது? சர்வதேச விசாரணை உள்ளூர் விசாரணையாக மாறிவிட்டது. தமிழ்தேசம் என்ற அடிப்படையிலான தீர்வு 13ம் திருத்தச் சட்டமாகிவிட்டது. இதனைவிட எதுவும் சாதிக்கவில்லை. என்பதே உன்மையாகும். எனவே கூட்டமைப்பு மற்றவர்களுடைய நலன்களுக்காக, தமிழ் மக்களை அழிவுகளுக்குள் தள்ளியதுபோதும் என்று திரு கஜேந்திரகுமார் கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

எனினும் இவ்வாறான அரசியல்வாதிகள் தாங்கள் நடத்தும் ‘விவாத மேடைகளினால் மக்களின் துயரங்களை மறைத்தும் மறந்தும் விடுகின்றார்கள் என்பதே உண்மை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளாக செயற்பட்டு தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்ட குடும்பங்களுக்கும் இந்த தமிழ் அரசியல்வாதிகளின் ‘விவாத மேடை’ எந்த வழியிலும் விமோசனம்  தருகின்ற ஒன்றாக இருக்காது என்றே நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.

http://canadauthayan.ca/?p=2283

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.