Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரபிக் கடலில் வீணாக கலக்கும் பெரியாறு நீர்!

Featured Replies

மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது.

இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது.

இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது.

பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களாகவே நடந்து வந்தன. இருப்பினும் தண்ணீரை எடுக்க பயன்படுத்தப்பட்ட ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் அந்தப் பணி இடையில் பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது மண் அடைப்பு சரி செய்யப்பட்டு உபரி நீரை தமிழக பகுதிக்குள் திருப்பி வருகின்றனர் பொதுப்பணித்துறையினர். இருப்பினும் அதிக அளவில் நீர் வருவதால் பெரும்பாலான நீர் கேரள பகுதிக்கே திருப்பி விடப்பட்டு வருகிறது.

தமிழக பகுதிக்குள் 1,100 கன அடி நீரும், கேரள பகுதிக்கு 5,242 கன அடி நீரும் தற்போது திருப்பி விடப்பட்டு வருகிறது. கேரளாவுக்குள் பாயும் நீர் அப்படியே அரபிக் கடலுக்கே போய்ச் சேருகிறது.

இதற்கிடையே, நவம்பர் 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த பெரியாறு நீர் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள நான்கு மின் உற்பத்தி ஜெனரேட்டர்களில் 3 மட்டும் தற்போது செயல்படுகின்றன. ஒன்றில் மண் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அது இன்னும் இயங்கவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2006/11/23/mullai.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாருங்களய்யா அங்கே நடக்கும் கூத்துக்களை.ஒரு தண்ணீர் பிரச்சனையை தீர்க்கமுடியாமல் மாநில அரசுகளும் மத்திய அரசும் காலாகாலமாக இழுபறிப்பட்டுக்கொண்டிருக்க

செய்தியில் பார்த்தேன்...வீணாக போகுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.