Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்?

கலாநிதி சர்வேந்திரா

<p>ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்?</p>
 

 

ஆட்சி மாற்றம் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. சுதந்திரக் கட்சியின் நெருக்கடி ஒரு பிளவை நோக்கிக் கட்சியை இட்டுச் செல்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெருக்கடிக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. இன்னும் சிறிது காலத்தில் இந் நெருக்கடி தனது இயல்பான வளர்ச்சியை அடையும் நிலைமைகளே தெரிகின்றன.

ஆட்சி மாற்றத்தின் பின் சுதந்திரக் கட்சிக்குள் உள்முரண்பாடுகள் வளர்வது ஏன்? கூட்டமைப்புக்குள் நெருக்கடிகள் தோற்றம் பெறுவதற்கான காரணங்கள் எவை? இக் கேள்விகளுக்கு ஒரு பதில் தேடும் முயற்சியாகவே இன்றைய பத்தி அமைகின்றது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இவ்விரு கட்சிகளையும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருப்பது சாராம்சத்தில் ஒரே விடயம்தான். கட்சித் தலைமையின் பிளவுண்ட விசுவாசமே (divided loyalty) அது. தற்போதய ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரபால சிறிசேனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும் பிளவுண்ட விசுவாசம் என்ற பிரச்சினைக்குள் சிக்குப்பட்டுள்ளனர். இவர்களின் பிளவுண்ட விசுவாசம் இவர்கள் தலைமை தாங்கும் அரசியல் அமைப்புக்களை நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறன.

பிளவுண்ட விசுவாசம் தொடர்பான வாதங்கள் புலம்பெயர்வு தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தினர் மத்தியில் புலம்பெயர்ந்தவர்கள் பிறந்த நாட்டுக்கா புகுந்த நாட்டுக்கா விசுவாசமாக இருக்கிறார்கள் என்ற தளத்தில் நடப்பதுண்டு. இந்த விவாதத்தில் இருவகையான கருத்துக்கள் கூடுதல் கவனத்தைப் பெறுவதாக உள்ளன.

புலம் பெயர்ந்தவர்கள் இரண்டு நாடுகளின் மீதும் சமாந்தரமாக முழுமையான விசுவாசம் வைத்திருக்க முடியும் என்கிறது ஒரு தரப்பு வாதம். இத்தகைய விசுவாசம் இரட்டை விசுவாசம் (Dual loyalty) அல்லது பன்முக விசுவாசம் (multiple loyalty) என அழைக்கப்படுவதுண்டு. இது பன்முகத்தன்மையின் ஓர் அங்கமாகப் பார்க்கப்படுவதுமுண்டு. மற்றைய வாதம் இக் கருத்தை மறுக்கிறது. இரட்டை விசுவாசம் என்பது பிளவுண்ட விசுவாசமாக மாறும் ஆபத்தைக் கொண்டது எனக் கூறுகிறது. புலம் பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாட்டுக்கு முழுமையான விசுவாசம் இல்லாது இயங்கும் உதாரணங்களைச் சுட்டிக்காட்டி இவர்களின் விசுவாசம் பிளவுண்டு போய்க் கிடப்பதற்கு இவர்கள் இரண்டு தளங்களில் தமது பிணப்புக்களைக் கொண்டிருப்பதே காரணம் என்று வாதிடுகிறது. இப் பத்தியினைப் பொறுத்தவரை ஒருவரின் விசுவாசம் இரு முரண்பட்ட நலன்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதனை நாம் பிளவுண்ட விசுவாசம் என வரையறுத்துக் கொள்வோம். மைத்திபால சிறிசேனவும் இரா. சம்மந்தரும் எத்தகைய பிளவுண்ட விசுவாசத்தினுள் சிக்கிக் கொண்டுள்ளனர்?

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றவுடன் சுதந்திரக்கட்சியின் நெருக்கடிகள் ஆரம்பித்து விட்டன. கட்சி மகிந்தவின் பிடியில் இருந்தாலும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றவுடன் கட்சியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்களுடன்தான் சந்திரிகாவும் மைத்திரியும் களம் இறங்கியிருந்தனர். ஆட்சி அதிகாரம் கைமாறியவுடன் சுதந்திரக்கட்சியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமானது என்றே இவர்கள் கருதியிருந்தனர். ஆனால் இன்றுவரை மைத்திரியால் கட்சியினைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மைத்திரியின் விருப்பத்தை மீறிய வகையில் பெரும்பான்மை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய பல உறுப்பினர்களும் மகிந்தவுக்குத் தமது ஆதரவினை வெளிப்படுத்திக் கொண்டவாறேதான் உள்ளனர்.

கட்சிக்குள் மகிந்தவுக்கு அதிகரித்துவரும் ஆதரவுக்கு அவர் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட தலைவர் என்பது மட்டும்தான் காரணமா? இனவாதிகள் எல்லோரும் மகிந்தவின் பக்கம்தான் உள்ளனரா? மைத்திரியின் பக்கம் இனவாதிகள் பலர் இல்லையா? இங்கு அதிக கவனம் கொடுக்கப்படாத முக்கியமான பிரச்சினையாக இருப்பது, மைத்திரியின் விசுவாசம் சுதந்திரக் கட்சிக்கும் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வைத்த தரப்பினர்க்கும் இடையே பிளவுண்டு இருப்பதுதான். இதனால் மைத்திரியால் சுதந்திரக்கட்சியை முழுவீச்சுடன், முழுமனதுடன் தலைமை தாங்க முடியவில்லை. அவ்வாறு சுதந்திரக் கட்சியைத் தலைமை தாங்குவதானால் மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சியினை மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினைத் தோற்கடிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அதனைத் தற்போதய சூழலில் மைத்திரியால் செய்ய முடியாது. இதுவே சுதந்திரக் கட்சிக்குள் தோற்றம் கண்டுள்ள முரண்பாடுகள் மகிந்தவுக்குச் சாதகமாக வளர்ச்சியடைந்து செல்வதற்கு முக்கியமான காரணம். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள் தம்மை சிக்க வைப்பதன் ஊடாகச் சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்த ரணில் முயல்வதாகவும் மைத்திரி அதற்கு உடந்தையாக உள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மகிந்த தலைமையில் அணிதிரண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது தம்மைப் பாதுகாப்பதற்கு அவசியமானது எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை வெற்றிபெற வைத்தது சுதந்திரக் கட்சி வாக்குகள் அல்ல. மாறாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக கெல உறுமய வாக்குகளும் தமிழ் முஸ்லிம் வாக்குகளுமே. இதில் தமிழ் முஸ்லிம் வாக்குகளை விட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக கெல உறுமயவுக்கும் மைத்திரி காட்டும் விசுவாசம் பெரிது. இதற்கமைய அவர்கள் தமக்கிடையே உடன்பாடுகளும் செய்து கொண்டார்கள். சிங்கள பௌத்த மேலாதிக்க அரசுக்கு மைத்திரியும் ரணிலும் சம்புக்கவும் சந்திரிகாவும் காட்டும் விசுவாசம் பூரணமானது. இதில் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இதனால் இவர்கள் நிற்கும் தளமும் ஏனைய தமிழ் முஸ்லிம் தலைவர்கள் நிற்கும் தளமும் ஒன்றல்ல. தமிழ், முஸ்லிம் தலைவர்களை சிங்கள பௌத்த மேலாதிக்க அரசைத் தலைமை தாங்கும் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர முழுமையாக நம்பமாட்டார்கள்.

<p>ஆட்சி மாற்றத்தின் பலிக்கடாக்கள் யார்?</p>

ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் நெருக்கடிநிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் தலைவர் சம்மந்தரின் விசுவாசம் தமிழ் மக்களை மையப்படுத்தியதாக இல்லாமல், ஏனைய தரப்புகளின் நலன்களுடன் பின்னிப் பிணைந்து பிளவுண்டு இருப்பதே முக்கியமான காரணம் எனலாம். இங்கு தமிழ் மக்களின் நலன்களும் ஏனைய தரப்புகளின் நலன்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்காமையே பிரதான சிக்கலாகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின் மாற்றத்தை பேணிப் பாதுகாக்கும் «பெரும் பொறுப்பினை» அனைத்துலகத் தரப்பு சம்மந்தரின் கைகளில் ஒப்படைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இலங்கைத்தீவில் தமது பூகோள நலன்களை அடைந்துகொள்ள விரும்பும் அனைத்துலகத் தரப்புகளுக்கும் ஆட்சி மாற்றம் உறுதிபடவேண்டியது அவசியமாகவுள்ளது. தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகள் உரத்து ஒலித்தால் அது ஆட்சிமாற்றத்தைப் பேணுவதற்கு தடையாக இருக்கும் என உணர்த்தப்படுகிறது.

கூட்டமைப்பில் தலைவர் சம்மந்தரின் முடிவுகள் சுமந்திரன் உடாகவே கூடுதலாக வெளிப்படுகின்றன. இதனால் சுமந்திரனின் நடவடிக்கைகளுக்கு கிடைக்கும் எதிர்ப்பு சம்மந்தரின் முடிவுகளுக்குரிய எதிர்ப்பாகவே பார்க்கப்பட வேண்டும். இதேவேளை ஆட்சிமாற்றதின் பின் கூட்டமைப்புக்குள் உரிமைகளை வலியுறுத்தும் போக்குக்கு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமை தாங்குகிறார். வடமாகாணசபையின் தமிழின அழிப்புத் தீர்மானம்கூட கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தருடன் கலந்து பேசாமலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோதிராஜாவுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான தொடர்புகள் பத்திரிகை அறிக்கை வாயிலாக நடைபெறும் அளவுக்கு இடைவெளி தோற்றம் பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. மாற்றத்தை ஆதரிக்க ஆதரிக்க கூட்டமைப்புக்குள்ளும் முரண்பாடுகள் வளர்வதற்கான நிலைமைகள் துல்லியமாகத் தெரிகின்றன.

ஆட்சி மாற்றம் யாருக்கு நன்மை தருகிறதோ இல்லையோ சுதந்திரக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பலிக்கடாக்களாக்கிக் கொண்டிருக்கின்றன.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=7e4507dd-6a15-48a5-a490-6e17a166bb74

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.