Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா மனித உரிமை கழகத்தில் ஒரு முக்கிய நிகழ்வு!

Featured Replies

பசுமைத்தாயகம் ,USTPAC உடன் இணைந்து பிரித்தானிய தமிழர் பேரவை ஒழுங்கமைப்பு.

 

ஆட்சிமாற்றத்தின் பின் மேற்குலக நாடுகள் இலங்கை அரசிற்கு நெருக்கடி வராமல் தவிர்ப்பதற்காக மனித உரிமைக் கழகத்தில் மார்ச் 2015 இல் வர இருந்த தீர்மானம் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் சர்வதேச விசாரணையை கைவிட்டு இலங்கை அரசின் உள்ளக விசாரணையாக அதனை நீர்த்து போகச் செய்வதற்கு திரைமறைவில் உலக அரங்கிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச்மாதத்திலிருந்து இந்தப் போக்கினை மாற்றுவதற்காகவும் இத்திரைமறைவுச் சதியினை அம்பலப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவை சகோதர அமைப்புகளுடன் இணைந்து கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகிறது.

 

குறிப்பாக முன்னைய ஸ்ரீலங்கா அரசும் இன்றைய அரசும் உலக அரங்கில் முகம் கொடுக்க தடுமாறும் விடயமாகிய இறுதி யுத்த காலகட்டத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பது பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை 6 வருடங்களாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறை தலைவர் திரு.நடேசன், திரு.புலித்தேவன் உற்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நகர்ந்த பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விபரங்களை ஸ்ரீலங்கா அரசு வெளியிட வேண்டுமென்பதனை வலியுறுத்தும் பல செயற்பாடுகளை பிரித்தானியா தமிழர் பேரவை முன்னெடுத்து வருகிறது.

 

எதிர்வரும் ஜூன் 24ம் திகதி ஜெனீவா வில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகத்தினுள் இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கண்கண்ட சாட்சியாளர்களை வரவழைத்து நிகழ்வு ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை, பசுமைத்தாயகம், USTPAC என்பன இணைந்து ஒழுங்கு படுத்தியுள்ளன. 29ஆவது கூட்டத்தொடரிற்கு வருகை தந்துள்ள பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இன் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல விடயங்கள் ஐநா மன்றத்தில் முன் வைக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரசு தன் உள்ளக விசாரணை மூலம் நீதியை மூடி மறைப்பதை வெளிக் கொண்டு வருவதுதான் இந்நிகழ்வின் முக்கிய விடயமாகும்.

 

இன் நிகழ்வில் ஸ்ரீலங்கா அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்று சரணடைந்தவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் . உலக தமிழ் மக்கள் ஒரு நீதியான சர்வதேச சுயாதீன விசாரணையைத்தான் வலியுறுத்தி வருகின்றார்கள் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்படும்.

 

பிரபல்யம் வாய்ந்தவர்கள் இந்நிகழ்வில் பேச்சாளர்களாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரம் உயிர்களுக்கு நடந்த கொடுமைகள் நீண்ட காலத்திற்கு உலகிடம் மறைக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை ஓயாது செயற்படுவோம் என்று பிரித்தானியா தமிழர் பேரவை தமிழ் மக்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

 

பிரித்தானிய தமிழர் பேரவை

-- 
media@tamilsforum.com

working together for peace with justice and dignity

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.