Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு

Featured Replies

Tamil_News_large_1281360.jpg

உலகில் தொன்மையான மொழிகளுள் சிறப்பான முதல்மொழி நம் தமிழ்மொழி. ஆதிகாலத்து மூத்த குடிமக்களால் மொழி உருவாக்கம் மற்றும் எழுத்து வடிவம் பெற்று இலக்கணம் படைக்கப்பட்டது. செய்யுள், இறையருட்பாக்கள், காப்பியம், இலக்கியம், நாடகம், கதை, கட்டுரை, செய்திகள், திரைப்படங்கள், நவீன காலப்படைப்புகள் என பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வாக, வழியாக, ஒளியாக, மதியாக நம் தீந்தமிழ்மொழி திகழ்கிறது.தமிழ் எனும் சர்க்கரை தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாகவும், பல்வேறு மொழிகளில் உள்ள பல்வேறு வார்த்தைகளுக்கு வேர்ச்சொல்லாகவும், தமிழ் மொழி இருக்கிறது. 'சர்க்கரை' என்னும் தமிழ் வார்த்தை 'ஷக்கர்' (இந்தி), 'சுகர்' (ஆங்கிலம்), 'சுக்காரியா' (கிரீஸ்), 'சுக்காரோ' (இத்தாலி), 'சூக்கர்' (பிரெஞ்சு), 'அசுக்கர்' (ஸ்பானிஷ்), 'சோக்ரி' (பின்னிஷ்), 'சுக்கர்' (டேனிஷ்), 'கியுக்கர்' (ஹங்கேரியன்), 'சாக்கர்' (ருமேனியன்) மற்றும் இன்னபிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக கரும்பின் பேரினப் பெயரான 'சக்காரம்' மற்றும் ஈஸ்ட் உயிரியின் பேரினப் பெயரான 'சக்காரோமைசிஸ்' என்ற வார்த்தைகள் 'சர்க்கரை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது.

தொழில்நுட்ப முன்னோடி :கரும்பு பயிரிடும் முறை மற்றும் சர்க்கரையை கரும்பில் இருந்து பெறும் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்கள், தமிழர்களே. இதனாலேயே தென்னாப்ரிக்கா, கியூபா, பார்பேடாஸ், மேற்கிந்திய தீவுகள், பிஜித் தீவுகள் என பல்வேறு நாடுகளில் சர்க்கரை ஆலைகள் அமையவும், தொழில் வளம் பெருகவும் முன்னோடிகளாக விளங்கியவர்கள் தமிழர்களே.
அரிசி, மா என்ற நம் அருந்தமிழ் வார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி, லத்தீன், பிரேசிலியன், லித்துவேனியம், போர்த்துக்கீசியம், ருமேனியா, ரஷ்யா, சுவீடன், செக், குரேஷியா நாடுகளின் மொழிகளில் அதே பொருளை உணர்த்தும் வார்த்தைகளாக இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது."நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி' எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாடலில் 'நாவாய்' என்பது அலைகடலில் செலுத்தும் கலத்தைக் (கப்பலை) குறிக்கும். கப்பல் கட்டும் முறையையும், அதனை அலைகடலில் செலுத்திப் பயணிக்கும் திறனையும் உலகிற்கு
அறிமுகம் செய்தவர்கள் நம் மூத்தகுடி தமிழ் மக்களே. இதற்குச் சான்றாக ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ள 'நேவி', 'நேவிகேஷன்' மற்றும் 'நேவிகோ' எனும் வார்த்தைகள் தமிழின் வேர்ச்சொல்லான 'நாவாய்' என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

தமிழும் எண்களும் :வார்த்தைகள் மட்டுமல்லாது பாரசீக எண் உருக்கள் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) தமிழ் எண் உருக்களிலிருந்து (க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க) பெறப்பட்டதே. 'தினம்' எனும் தமிழ்ச்சொல் 'திவஸ்' என்ற சமஸ்கிருதச் சொல் மூலமாக 'டேய்ஸ்' எனும் ஆங்கிலச்சொல்லாக உருவாக்கம் பெற்றது. அதைப் போன்றே அட்(ஷ்)டம், நவம், தசம் என்ற தமிழ்ச்சொற்கள் முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் என ஆங்கில மாதங்களாயின.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாகவும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜித்தீவுகள், மொரீஷியஸ், டிரினிடாட், மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவிலும் தமிழ்மொழி பயன்பாட்டில் உள்ளது. அபூர்வமானதும் தொன்மையானதுமான மொழி என்பதாலேயே, ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் பெயரை, அதன் முகப்பில் தமிழ் மொழியிலும் பொறித்துள்ளனர்.

மொழியியலாளர்கள் கூற்றுப்படி உலகின் ஆறு தொன்மையான மொழிகளுள் தமிழ் மற்றும் சீனமொழிகள் தவிர மற்ற மொழிகள் அழிந்து விட்டன. தற்போதுள்ள நடைமுறைப்படி பார்த்தால் குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை எண்ணித்தான், 'மெல்லத் தமிழினி சாகும்' என பாரதியார் பாடி வைத்தார் போலும்.
பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் இலக்கணம் வகுத்து, வாழ்க்கைக்கான சீரிய நெறிமுறைகளையும், மாண்பையும் கற்றுக்கொடுத்தது தமிழ். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் உருவாக்கிய அன்னை மொழியை நாம் சீரிய முறையில் கற்று, அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை.
இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்;தமிழ்மொழியை உள்ளார்வத்துடன் கற்கவேண்டும். கல்விச்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்.

வார்த்தைகள்- அது தொடர்பான பதங்களை எளிமையாகவும், ஆழ்ந்தும் கற்பிக்க வேண்டும். அதற்கிடையேயான சமூகம், மானுடவியல் தத்துவங்கள் மற்றும் அறிவியல் பூகோளத் தொடர்புகளை ஒருமித்து அறிந்து, அவரவர் துறை சார்ந்து பயன்படுத்த வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று; அதுவே உணர்வு, நம் இயக்கம், நம்மை நெறிப்படுத்தும் ஒரு கருவி; தமிழே நம் வாழ்வு என்பதை முழுமையாக உணர வேண்டும்.

தமிழ் இலக்கணம் :அறிவியல் கூறுகளில் அடிப்படையிலும் தமிழ் இலக்கணம் படைக்கப் பெற்றது. எடுத்துக்காட்டாக உயிரின வகைகளின் அமைப்பு, பண்புகளின் அடிப்படையிலேயே அலகிட்டு வாய்ப்பாட்டினை அமைத்துள்ளனர். தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.
தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.
கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.-

டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை99941 08836dekan_c@rediffmail.com

http://www.dinamalar.com/news_detail.asp?id=1281360

  • கருத்துக்கள உறவுகள்

Tamil_News_large_1281360.jpg

....தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.-

டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை.

இது நம்ம ஊர் ஆளு..! :lol:

பகிர்விற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.