Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி மருத்துவர்களுக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டுமென பயிற்சி அளிக்கப்பட்டது

Featured Replies

மருத்துவர் துரைராஜா வரதராஜா தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வன்னி மருத்துவர்களுக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டுமென பயிற்சி அளிக்கப்பட்டது:-



2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களுக்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டுமென்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக வன்னியில் கடமையாற்றிய மருத்துவர் துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் வைத்தியசாலைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய மருத்துவர்கள், பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இராணுவ விசாரணைகளின் பின்னர் அவர்கள் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இராணுவத்தினர் சிவிலியன் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் வைத்தியசாலைகள் மீது தாக்கியதாகவும் பொய்யாக சர்வதேச ஊடகங்களுக்கு தகவல் வழங்கியதாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் இந்த விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.

இந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு வன்னி மருத்துவர்கள் பதிலளித்திருந்தனர்.

எவ்வாறெனினும், ஊடகவியலாளர் சந்திப்பில் தாம் அளித்த பதில்கள் அனைத்தும் ஏற்கனவே கற்றுக் கொடுக்கப்பட்ட அடிப்படையில் சொல்லப்பட்டவை என டொக்டர் வரதராஜா பி.பி.சீ சர்வதேச ஊடகத்தின் தி விட்னஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் எரிசன், டொக்டர் வரதராஜாவை செவ்வி கண்டிருந்தார்.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தாம் உள்ளிட்ட மருத்துவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பில் என்ன பேச வேண்டும் எவ்வாறு பேச வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடக சந்திப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக அது குறித்த ஒத்திகைகளும் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு சுகாதாரச் சேவை பணிப்பாளராக கடமையாற்றிய தம்மையும் சக மருத்துவர்களையும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் நான்காம் மாடிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம்இடம்பெற்ற காலத்தில் தமிழ் மக்களின் உயிரிழப்பு விபரங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்கள் மெய்யானவை அல்ல எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரயோகித்த அழுத்தமே இவ்வாறு சர்வதேச ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கக் காரணம் எனவும் குறிப்பிட வேண்டுமென இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பரீட்சை ஒன்றின் போது எவ்வாறு கேள்விகளும் பதில்களும் வழங்கி பயிற்சி வழங்கப்படுமோ அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ விடுதபை; புலிகளுக்கு எதிராக கருத்துக்கைள வெளியிட்டதனைத் தொடர்ந்து கே.எப்.சீ உணவத்திற்கு தம்மை அழைத்துச் சென்று கோழி இறைச்சியும் குளிர்பானமும் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் திகதி கொழும்பில் தேசியப் பாதுகாப்பு குறித்த ஊடக மத்திய நிலையத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கடமையாற்றிய ஐந்து மருத்துவர்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் ரீ.சத்தியமூர்த்தி, புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையின் மருத்துவர் இளஞ்செழியன் பல்லவன், முல்லைத்தீவு வைத்திய அதிகாரி கணபதிப்பிள்ளை சண்முகராஜா மற்றும் டொக்டர் சிவபாலன் மற்றும் டொக்டர் வரதராஜா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கை 650 முதல் 750 எனவும் குறித்த காலப் பகுதியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 650க்கும் குறைவாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

புதுமத்தலான் வைத்தியசாலைக்கு 10-15 பேர் வந்தால் 50 முதல் 60 பேர் வரையில் வந்ததாக சொல்லுமாறு புலிகள் தம்மை அச்சுறுத்தியதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் டொக்டர் வரதராஜா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

புலனாய்வு பிரிவினர் கூறும் அறிவுறுத்தல்களை ஏற்கத் தவறினால் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது ஏற்பட்ட காயங்களுக்கு தேவையான சத்திரச சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என அச்சுறுத்தல் விடுத்ததாக டொக்டர் வரதராஜா பி.பி.சீக்கு தெரிவித்துள்ளார்.

“பசி, தாகம் காரணமாக மே மாதம் 15ம் திகதி நான் இருந்த இடத்தை வெளியே வந்தேன். நான் இருந்த இடத்திலிருந்து பத்து அடி தூரத்தில் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனைய மருத்துவர்கள் உதவிக்காக வந்த போது எனது மூக்கிலும் வாயிலும் இரத்தம் வெளியேறுவதனை உணர்ந்தேன். எனது கை உணர்வற்றிருந்தது இதனால் கை உடலை விட்டு துண்டிக்கப்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். இன்னும் 5-6 நிமிடங்களில் மரணித்துவிடுவேன் என்ற உணர்வே காணப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் பற்றியே நான் நினைத்தேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எறிகணைத் தாக்குதலினால் வலது கையின் நரம்புகளில் ஏற்பட்ட உபாதை காரணமாக கை செயலிழக்க கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருந்தேன், சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் கை செயலிழந்திருக்கும். சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமாயின் ஊடகவியலாளா சந்திப்பில் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

“வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தாம் கூறுவதனைப் போன்று செய்தால் நான்கு வாரங்களில் விடுதலை செய்வதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர். ஊடக சந்திப்பின் பின்னர் மீண்டும் மூன்று வாரங்கள் நான்காம் மாடியில் தடுத்து வைத்திருந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வன்னி மருத்துவர்கள் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஊடக சந்திப்பு நடத்தப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121811/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.