Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா!

Featured Replies

11059966_1610356552569404_22119625294965

 தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா!

அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா!

கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ?

அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா?

(1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுகொலைகள் செய்தபோதும் அவர் அதனை கண்டிக்காது ஆதரவு தெரிவித்தவர்தானே!

(2)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் அவர் முன்வைத்த தமிழீழத்தை அவரே கைவிட்டிருப்பார். எனெனில் அவர் தமிழீழத்தை கைவிட்டு மாகாண அரசை மட்டுமல்ல மாவட்ட ஆட்சியைக்கூட கையேற்க முனைந்தவர்தானே!

(3)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இன்றும் அவர் தேர்தலில் போட்டியிட்டிருப்பார். அவரை மக்கள் நிராகரித்திருப்பார்கள். எனெனில் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்தானே!

(4)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்தபோது இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டாம் என்று இந்திராகாந்தியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரே பின்னர் அவரது மகன் பகிரதன் ஆயுத இயக்கம் ஆரம்பித்தபோது அதனை ஆதரித்தார்.

(5)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்தபோது தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார். ஆனால் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் மூலம் மதுரை மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார்.

(6)தமிழ் மக்களின் ஒற்றுமை என தமிழர்விடுதலைக்கூட்டணி அமைத்த அமிர்தலிங்கம் அதற்கு மாறாக மட்டக்களப்பில் ராஜதுரைக்கு எதிராக காசிஆனந்தனை தேர்தலில் போட்டியிடவைத்தார்.

(7) அன்று ராஜதுரைக்கு தலைமைப்பதவி வழங்கியிருந்தால் இன்று வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைந்திருக்கும். தனது சுயநலத்திற்காக பிரிவினையை விதைத்தவர் அமிர்தலிஙகமே!

 

 பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகன் பகிரதன் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலே அவர் கொல்லப்பட்டார்.

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால்

• தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார்.

• முள்ளிவாயக்கால் அவலத்தை தடுத்திருக்க முடியாது. ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பபை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர்.

• தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தனுக்கும் தலைவர் பதவி கிடைத்திருக்காது.

எனவே
அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.!

(மீண்டும் தமிழரசுக்கட்சியினர் தோல்வி யுற்றால் என்ற நோக்குடன் இதை இணைத்துள்ளேன்.இனி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்)

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.