Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் விக்னேஸ்வரன் அவர்கள்.

Featured Replies

கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் விக்னேஸ்வரன் அவர்கள். இது தொடர வேண்டும்.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபன வெளியீடு மற்றும் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது அதனைப் புறக்கணித்திருந்தார். முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களைப் புறக்கணித்துவருகிறார். இது கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களைப் பயன்படுத்தி தாம் பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிடலாம் என கனவுகண்டவர்களுக்கு விக்னேஸ்வரன் அவர்களின் போக்கானது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை தமக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடக் கோரி கூட்டமைப்பினரும். அவர்களின் ஆதரவாளர்களும் தீவிர அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள். வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் இது தொடர்பில் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்.

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களைக் கூட்டமைப்பினர் அண்மைக்காலமாக மதிப்பதில்லை. விக்னேஸ்வரன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டிவருமென மாவை எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் நான் அவர்களின் கட்சிக்காரன் அல்ல என்றார். ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரன் அவர்களைத் திட்டிய நிலையில் கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனைக் கண்டிக்க முன்வராது ரணிலுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தார்கள். இனப்படுகொலை தீர்மானத்தை எதற்கு நிறைவேற்றினார்? அதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை எனக் கூட்டமைப்பில் உள்ளவர்களே குறிப்பிட்டிருந்தார்கள். விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் நலன்களுக்காக மேற்கொண்ட நகர்வுகளை ஆதரிப்பதற்கு முன்வரவில்லை கூட்டமைப்பின் தலைமைகள். வடக்கில் விக்னேஸ்வரன் அவர்களை ரணில் விக்கிரமசிங்க புறக்கணிக்கும் நகர்வுகளில் ஈடுபட்டிருந்தார், அதற்குத் துணைபோனவர்கள் இக்கூட்டமைப்பினர். வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் நகர்விற்கும், அவரின் தீர்க்கமான முடிவுகளுக்கும் கூட்டமைப்பினர் தமது பூரண ஆதரவினை வழங்கவில்லை.

தற்போது கூட்டமைப்பினர் பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்காக முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களிடம் ஆதரவினைக் கோரி நிற்கிறார்கள். ஒருவேளை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் இவர்களை ஆதரித்துப் பரப்புரைகளில் ஈடுபட முனைந்தாரெனில் தமிழ் மக்கள் விக்னேஸ்வரன் அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை அவர் இழக்க நேரிடலாம். முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களால் கூட்டமைப்பின் வேட்பாளர்களின் தொடர்பில் தமிழ் மக்களுக்கு உறுதியான உத்தரவாதத்தை வழங்கி விடமுடியாது. இவர்கள் வெற்றியைப் பெற்றால் சும்மார் 5 ஆண்டுகளுக்கு பதவி சுகத்தையடைவார்கள். ஆகையால் இவர்கள் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து துரோகங்களைப் புரிந்தால் அதன் பழி பாவங்கள் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களையும் சார்ந்துவிடும்.

முன்பு எப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பினர் கடுமையான எதிர்ப்பினை எதிர்கொள்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் தமிழ் மக்களை இவர்கள் மதித்து அவர்களின் அபிலாக்ஷைகளைப் புரிந்து நகர்ந்திருந்தால் மக்களின் எதிர்ப்பினை கூட்டமைப்பினர் இன்று எதிர்கொண்டிருக்கமாட்டார்கள். ஆகையினால் நன்றி விசுவாசத்தை இதில் வெளிபடுத்த முற்பட்டு தமிழ் மக்களுக்குத் துரோகத்தைப் புரிந்துவிடக் கூடாது முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள். இவ்விடயத்தில் தொடந்து முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் அமைதியைப் பின்பற்றுங்கள். நீங்கள் முன்பு குறிப்பிட்டிருக்கிறீர்கள் நான் அவர்களின் கட்சிக்காரன் அல்ல என்று. தமிழ் மக்கள் இத்தனை ஆண்டுகளில் அவர்களின் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதனை முடிவெடுத்து அவர்கள் வாக்களிக்க நீங்கள் அனுமதியுங்கள். தயவுசெய்து அவர்களைக் குழப்பிவிடாதீர்கள். உங்களைப் பயன்படுத்தி மக்களை மீண்டும் ஏமாற்றத் துடிப்போருக்கு துணைசென்று விடாதீர்கள். இன்று தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கும் அவர்களின் வாக்குகளை அபகரித்துக்கொள்வதற்கும் உங்களின் அனுமதியின்றி உங்களின் புகைப்படங்களை இணைத்து கூட்டமைப்பில் உள்ள திருடர்கள் தேர்தலில் பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள்.

வெள்ளைவான் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இன்று கூட்டமைப்பில் உள்ளார்கள். இவர்களுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடப்போகிறீர்களா? உங்களிடம் காணாமல்போனோரின் உறவினர்கள் நாடிவந்து உங்கள் முன் கதறியதனை நீங்கள் தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்? கூட்டமைப்பைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள், அதற்காக மக்களுடன் இணைந்து நீங்களும் உதவுங்கள். நீங்கள் தொடர்ச்சியாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது அதனைப் புறக்கணித்து வருகிறீர்கள். இது உங்களின் நேர்மைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இது தொடரவேண்டும் என்பதே உலகத்தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். முன்னர் நீங்கள் சிங்களத்திற்குத் துணைசென்ற சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் கதைகேட்டு சில முடிவுகளை எடுத்திருந்தீர்கள். இதனால் உலகத்தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பினை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது நீங்கள் சுயமாக தமிழ் மக்களின் நிலமை புரிந்து முடிவுகளை எடுக்கத் துணிந்த பின்னர் தமிழ் மக்கள் உங்களை உயர்வான இடத்தில் அமர்த்தியுள்ளார்கள். மீண்டும் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்களுக்குத் துணைசென்றுவிடாதீர்கள். விலைபோகாத, கொள்கையில் உறுதிகொண்டவர்களுக்கு வாக்களியுங்கள் என அண்மையில் லண்டனில் விக்னேஸ்வரன் அவர்கள் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.