Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியில் வருவான்... விரைவில் வருவான்! - அற்புதம்மாள் நம்பிக்கை!

Featured Replies

வெளியில் வருவான்... விரைவில் வருவான்! - அற்புதம்மாள் நம்பிக்கை!
 
atputhammaaal.jpg
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றவர்களை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கிறார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்!

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரணையில் இருக்கிறது. ‘சி.பி.ஐ விசாரிக்காத வழக்குகளில் வேண்டுமானால் மாநில அரசு முடிவெடுக்கலாம்’ என்பது மாதிரி கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இறுதித் தீர்ப்பு எப்படி அமையுமோ என்ற நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளை சந்தித்தோம்.

தூக்குத்தண்டனை பெற்ற மூவர் வழக்கு மிகமிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. 25 ஆண்டுகளாக என் மகன் சிறையில் இருக்கிறான். என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, சி.பி.ஐ அதிகாரிகள் என் மகனிடம் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு அவனை அழைத்துப் போனார்கள். என் மகன் எந்தத் தவறும் செய்யாததால், நாங்கள் அவனை அதிகாரிகளோடு தைரியமாக அனுப்பி வைத்தோம். அப்போது, எங்கள் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் என் கணவரைத் திட்டினார்கள். ‘போலீஸ் வந்து கேட்டால், நீ பிள்ளையை அனுப்பலாமா?’ என்றார்கள்.

பெரியார் கொள்கைகள், உண்மை, பகுத்தறிவு, சேவை என்பதையே மனதில் வைத்துக்கொண்டு வாழ்ந்த என் கணவர், ‘நாம் தவறு செய்யாதபோது எதற்கு பயப்பட வேண்டும்?’ என்று அப்போது அவர்களுக்குப் பதில் சொன்னார்.

மறுநாள் காலையில் 6 மணிக்கு நான் மல்லிகை அலுவலகம் சென்று என் பிள்ளையை அழைத்து வரப் போனேன். ஆனால், அங்கு அவனை பார்க்கவே விடவில்லை. அதன் பிறகுதான், எங்களுக்குப் பயம் வரத் தொடங்கியது.

என் மகன் படித்த படிப்பே, அவன் மேல் கொலைப்பழி விழுவதற்குக் காரணமாக அமைந்தது. என் மகன் டிப்ளமோ இ.சி.இ படித்திருக்கிறான். அதனால், இவனுக்கு வெடிகுண்டின் சர்க்யூட் தெரியும் என்று சொல்லி ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கிய போது, எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ராஜீவ் காந்தி என்ற ஒரு பெயர் இந்த வழக்கில் இருப்பதால், இதில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குக் கருணை காட்ட வேண்டிய நீதிமன்றம், கருணை காட்டவில்லை. உண்மையாக இந்தக் கொலையைத் தூண்டியவர்களை நோக்கி ஒரு கேள்விகூட இன்னும் கேட்கப்படவில்லை.

ஆனால், அப்பாவிகள் 25 ஆண்டுகளாகச் சிறைக்குள் கிடந்து அவதிப்படுகிறார்கள். என் பையன் யார் மனம் நோகவும் பேசத் தெரியாதவன். ஆனால், கொலைப்பழியைச் சுமந்துகொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக அவனைக் கொலைகாரன்... கொலைகாரன்... என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சிக்கலான வழக்கில் நம் பிள்ளையைக் கொண்டு போய் நாமே தள்ளிவிட்டோமே என்று வேதனைப்பட ஆரம்பித்தோம். இன்றைக்கும் என் கணவருக்கு அந்தக் குற்ற உணர்ச்சி இருக்கிறது.

இறந்த உயிர் பெரிய உயிர்... அதனால் அதில் யாரையாவது சிலரைத் தண்டித்தேயாக வேண்டும் என்று சொல்கிற சட்டத்தை நாம் எப்படிக் கேள்வி கேட்கப் போகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் கீழ்மட்டத்தில் இருக்கிறவர்கள். பொருளாதாரம், அரசியல் என்று எதைச் சார்ந்தும் உயரத்தில் இல்லாதவர்கள். அவர்களுக்கு எப்படி நீதியை வாங்கித் தரப்போகிறோம் என்பதுதான் நான் கேட்க விரும்புகிற கேள்வி.

இன்றைக்கு சட்டங்கள் எல்லாம் ரொம்பக் கொடுமையாக மாறி வருகின்றன. ஆயுள் தண்டனை என்றால், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று இப்போது மத்திய அரசு வற்புறுத்துகிறது. இது மிகவும் கொடுமையானது, ஆபத்தானது. இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருகிறவர்கள், இந்தக் கொடுமையை நாம் எப்போதும் அனுபவிக்க மாட்டோம் என்று நினைக்கிறார்கள்.

இதையெல்லாம் வெறுமனே, நாம் கேள்வி கேட்கும் நிலையில்தான் இருக்கிறோம். ஏனென்றால், எந்தக் கொலை வழக்கிலும் பாதிக்கப்படுபவர்கள், எல்லோருமே கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அல்லது அப்பாவிகள்தான்.

சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், ‘நான் பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. கொஞ்சம் திருத்தித்தான் பதிவு செய்தேன். நான் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், இன்று பேரறிவாளன் விடுதலையாகி வெளியில் உலாவிக் கொண்டிருப்பார்’ என்கிறார்

இப்போது. இதைப் பார்த்து வேதனைப்பட்ட பலர், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘அந்த அதிகாரி மீது வழக்குப் போடுங்கள்’ என்கிறார்கள். இப்போது அவர் மீது வழக்குப் போடுவதால் என்ன பயன்? என் மகனின் வாழ்க்கை போய்விட்டது, இளமை போய்விட்டது, எல்லாமே போய்விட்டது.

ஒரு மனிதனுடைய வாழ்க்கை எங்கு மாறுகிறது என்றால், ஒரு வழக்கில் ஒரு காவலர் குற்றம்சாட்டப்பட்டவர் மீது போடுகிற செக்‌ஷனில்தான் மாறுகிறது. ஒரு காவலர் நினைத்தால், ஒரு நிரபராதியை நிஜக் குற்றவாளியாக்க முடியும். நிஜமான குற்றவாளியை நிரபராதியாக்க முடியும். அதுதான் நடந்தது ராஜீவ் கொலை வழக்கிலும்.

இந்த வழக்குத் தொடர்பாக நாங்கள் சொன்ன உண்மைகளை யாருமே கேட்கவில்லை. ஏனென்றால் இறந்தது ராஜீவ் காந்தி. அவருடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. அதனைக் கண்டுபிடிக்காமல் அப்பாவிகளை தூக்கிலிட்டு வழக்கை முடிக்க நினைக்கிறார்கள்.

கொலைகாரர்கள் நிறைய பேர் வெளியில் வசதியாக உள்ளனர். ஆனால், அப்பாவிகளும் ஏழைகளும் அநாதைகளும்தான் சிறைக்குள் இருக்கின்றனர். சிறை என்பது சீர்த்திருத்தும் கூடமாக இருக்க வேண்டும். பழி வாங்கும் ஓர் இடமாக இருக்கக் கூடாது.

இன்றுவரை சிறையில் என் மகன் நல்லவனாகவே இருக்கிறான்; தன்னடக்கமாக வாழ்கிறான்; தன்னளவில் எல்லா உதவிகளும் செய்கிறான்; சிறைக்குள் தனி கம்ப்யூட்டர் அறை உருவாக்கி இருக்கிறான்.

நான் அவனைப் பார்க்க போகும்போது அவன் சொல்வதெல்லாம், ‘சிறைக்குள் இருப்பவர்கள் எல்லாம் அப்பாவிகள். வாழ வேண்டியவர்கள். நான் சிறைக்குள் இருந்து வெளியில் வந்தாலும் சிறைவாசிகளின் குரலாகத்தான் இருப்பேன் அம்மா’ என்பதுதான். அவன் நிச்சயம் வெளியில் வருவான், விரைவில் வருவான்!” என்றார் அற்புதம்மாள்!

‘‘சிறை வைப்பதால் என்ன நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்?”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரில் நளினியின் மரண தண்டனை, கடந்த தி.மு.க ஆட்சியில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

மற்றவர்களின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வு, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதையடுத்து, அதற்கு மறுநாளே (பிப்ரவரி 19-ம் தேதி) குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432, 433-ன் படி தமிழக அரசு விடுதலை செய்தது.

உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததை எதிர்த்தும் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ததை எதிர்த்தும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தது. இரண்டு மனுக்களின் மீதான விசாரணையும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பினாகி சந்திரகோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அமர்வில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை ஜெயலலிதா விடுதலை செய்ததை எதிர்க்கும் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், தூக்குத்தண்டனையை ரத்து செய்ததை எதிர்க்கும் மனு மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு வழக்கறிஞர் மேக்னா, சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்திருந்தார். தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் மாநில அரசின் அதிகாரத்தை விட்டுத்தர முடியாது என்று தன்னுடைய வாதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் தண்டனையைவிட மரண தண்டனை மேலானது. ஒருவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைப்பதன் மூலம் அவனுக்கு என்ன நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்? அப்படிச் செய்வதன் மூலம், எதற்காக நாம் திருந்த வேண்டும் என்ற அவநம்பிக்கைதான் கைதியின் மனதில் தோன்றும்.

விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால்தானே குற்றவாளிக்குத் திருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்” என்றார்கள். விசாரணை தொடர்கிறது.

http://www.tamilwin.com/show-RUmtyHRdSVmo5C.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.