Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டாஸ்மாக் கடை சூறை விவகாரத்தில் வைகோ மீது கொலை முயற்சி வழக்கு: எந்நேரமும் கைதாகலாம் என்பதால் பதற்றம்

Featured Replies

vaiko_new1_2366297h.jpg

 
 

திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செயல்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

நேற்றுமுன்தினம் மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை செயல்பட்டதை அடுத்து, மதுக்கடையை மக்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் தடியடி நடத்தினர். மதுக்கடைக்குள் புகுந்த சிலர் கடையை சூறையாடினர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

கல்வீச்சில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், சுந்தரநேசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பால்துரை, சுப்பையா, காவலர்கள் சங்கரநாராயணன், ராஜதுரை, சுப்புலட்சுமி, பொன் மணிபித்ரா, அமராவதி, முத்துசெல்வி, திருமலைசெல்வி, லூர்து மேரி, பூமாரி ஆகியோர் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய தடியடியில் வைகோ தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் பலரும் காயமடைந்தனர்.

தடியடியைக் கண்டித்து வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி சரக டிஐஜி முருகன், மாவட்ட எஸ்பி விக்ரமன் ஆகியோர் வைகோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் கைவிடப்பட்டது.

12 பிரிவுகளில் வழக்கு

மதுக்கடை சூறையாடப்பட்டது, போலீஸார் மீது கல் வீச்சு நடத்தப்பட்டது தொடர்பாக சங்கரன்கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வைகோ, அவரது தம்பி ரவிச்சந்திரன் உட்பட 52 பேர் மீதும், மேலும் அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானோர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைகோ உள்ளிட்டோர் எந்த நேரமும் கைதாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கலிங்கப்பட்டியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சங்கரன்கோவில் டிஎஸ்பி லட்சுமணன் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

என்னை குறிவைத்து கண்ணீர் புகை குண்டுவீச்சு: வைகோ குற்றச்சாட்டு

கலிங்கப்பட்டியில் என்னை குறிவைத்து கண்ணீர் புகை குண்டுகளை போலீஸார் வீசினர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்று (ஆக.4) நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கானது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அறவழியில் போராட்டத்தை நடத்துகிறோம். தமிழகத்துக்கு ஏற்படும் பெரிய இழப்பை தடுக்க, ஒருநாள் கடையடைப்பால் ஏற்படும் நஷ்டத்தை வணிகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் அமைதியாகத்தான் நடைபெற்றது. ஆனால் 200-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையைth திறந்து விற்பனை நடைபெற்றது. இதைக் கண்டித்து இளைஞர்கள் ஊர்வலம் சென்றபோது போலீஸார் தடியடி நடத்தினர்.

என் மீதும் இரண்டு அடிகள் விழுந்தன. என் சகோதரர் உட்பட பலர் காயமடைந்தனர். நான் கூட்டத்தினரை அமைதி காக்கும்படி வேன் மீது நின்றபடி வேண்டுகோள் விடுத்தேன். பிரச்சினை முடிவுக்கு வந்து அமைதி ஏற்பட்டது.

இந்த நிலையில், போலீஸார் திடீரென கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 10 கண்ணீர் புகை குண்டுகளில் 6 என்னை குறிவைத்தே வீசப்பட்டன. இந்தக் குண்டு என் மீது பட்டிருந்தால் இறப்பு நிகழாது என்றாலும், என் முகம் கிழிந்துபோயிருக்கும். மேலும் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். யாருக்கு நல்ல காலமோ, அத்துடன் நிறுத்திக்கொண்டனர்.

இவ்வளவு பிரச்சினைகளுக்குப் பின்னரும் கலிங்கப்பட்டியில் அதே டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க ஏற்பாடு நடப்பதாக தகவல் வந்துள்ளது. இந்தக் கடையை மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள எந்த டாஸ்மாக் கடையையும் செயல்படுத்த விடாதவாறு போராட்டம் நடத்துவோம். இதற்கு இளைஞர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்

http://tamil.thehindu.com/tamilnadu/டாஸ்மாக்-கடை-சூறை-விவகாரத்தில்-வைகோ-மீது-கொலை-முயற்சி-வழக்கு-எந்நேரமும்-கைதாகலாம்-என்பதால்-பதற்றம்/article7498913.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.