Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின் மீதும் வீழ்கிறது குற்றப்பொறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தின் மீதும் வீழ்கிறது குற்றப் பொறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை, தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல, இலங்கைத் தீவிலும், சர்வதேச மட்டத்திலும் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழர் தரப்பில் இந்த அறிவிப்பு முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

""சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனி யரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக் களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. எனவே, இந்த விடு தலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் தீர்க்கமான முடிவு செய் திருக்கின்றோம்.'' - என்று "வெட்டு ஒன்று துண்டு இரண் டாக' தலைவர் பிரபாகரன் போட்டுடைத்து அறிவிப்பார் என - பிரகடனப்படுத்துவார் என - பலரும் எதிர்பார்த்திருக்க வில்லை என்பது வாஸ்தவம்தான்.

ஆனால், இலங்கையில் இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகள் இப்படித்தான் கையாளப்படும் என்பதை சமா தான முயற்சிகள் ஆரம்பமாகு முன்னரே 2002 ஜனவரியில் பலரும் எதிர்வு கூறியிருந்தனர்.

அமைதி முயற்சிகள் இப்படியான ஒரு திசையை நோக்கித்தான் நகர்த்தப்பட்டன என்பது இப்போது கண்கூடாகத் தெரி யும் விடயம். இதையே பிரபாகரனும் தமது உரையில் தெளிவாக வும், விளக்கமாகவும் சுட்டிக்காட்டுகின்றார்.

அமைதி முயற்சிக் காலத்தைத் தென்னிலங்கை அரசு கையாண்ட விதத்தில் விசனத்தின் உச்சிக்கே தமிழர்கள் சென்றிருக்கின்றார்கள் என்பதைப் பிரபாகரன் தமது உரை ஊடாகப் பிரதி பலிக்கின்றார்.

இன உரிமை மற்றும் சுதந்திரம் என்ற உயரிய விழுமியங்களுக்காக சுமார் மூன்று தசாப்த காலம் அஹிம்சை மார்க்கத் திலும், சுமார் இரண்டு தசாப்த காலம் முழு ஆயுத வழியிலும் போராடி வரும் தமிழினத்துக்கு இந்தப் போராட்ட காலப் பேரி ழப்புகள், பாதிப்புகள், அவலங்கள், அல்லல்கள், துன்பங்கள் எல்லாம் சகஜமாகிவிட்டன.

போர்க்காலக் கொடூரங்களை எதிர்கொண்ட தமிழினத் துக்குக் கடந்த ஆறு ஆண்டு கால சமாதான வேளைதான் மிக மோசமானது என்ற முடிவுக்குத் தமிழினம் தள்ளப்பட்டிருக் கின்றது. அந்த வகையில்தான் இந்தச் சமாதான வேளைக் காலத்தில் தமிழினம் கையாளப்பட்டிருக்கின்றது என்பதை உரைக்கின்றார் பிரபாகரன்.

சமாதான வேளையில் தமிழர்களுக்கு எதிராக அரங் கேறிய அவலங்களை வரிசைப்படுத்தி, உலகின் மனச்சாட் சியைத் தட்டி எழுப்பும் விதத்தில் கேள்விக் கணைகளை தொடுக்கிறார் பிரபாகரன்.

""போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள் வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் முயற் சித்து ஆறு ஆண்டுகள் அசைந்தோடி விட்டன. நாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டு காலத்தில் - இந்த நீண்ட கால விரிப்பில் - தணியாத நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதா? தமிழரைச் சதா கொடுமைப்படுத் திக் கொன்றொழித்து வரும் சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? தமிழரின் நீதியான, நியாயமான கோரிக் கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா? ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடா வடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும், இம்சைக் கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா? எம் மக்களை நாளாந்தம் அழுத்தி வரும் அன்றாட, அவசியப் பிரச்சினைகள்தானும் தீர்த்து வைக்கப்பட்டனவா? எதுவுமே நடக்கவில்லை. மாறாக, எத்தனையோ கனவுகளோடு, எத் தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத் திருந்த தமிழருக்குச் சாவும், அழிவுமே பரிசாகக் கிடைத் திருக்கின்றன. சோதனை மேல் சோதனையாக, வேதனை மேல் வேதனையாகத் தாங்க முடியாத துயரச் சுமை தமிழர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம் தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த அமை திக் காலம் தமிழர் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்திராத இரத் தம் தோய்ந்த இருண்ட காலமாக மாறியிருக்கிறது.

""அமைதி போதித்த உலக நாடுகள் மௌனத்திற்குள் தமது மனச்சாட்சியைப் புதைத்து விட்டு, கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க, தமிழர் மண்ணில் பெரும் மனித அவ லம் இன்று அரங்கேறி வருகிறது.''

- இப்படி வரிசைப்படுத்திக் கேள்வி எழுப்பியிருக்கிறார் விடுதலைப் புலிகளின் தலைவர்.

இந்நிலைமைகளுக்குத் தென்னிலங்கைச் சிங்களத்தின் மகாவம்சச் சிந்தனையில் தோய்ந்த பேரினவாத மேலாண் மைப் போக்கும், அதனடிப்படையில் எழுந்த திமிரும், அடக்குமுறைச் செருக்கும் ஒரு புறம் காரணம் என்றால், மறு புறம் இந்நிலைமைக்கு இடமளித்து, தமது மனச்சாட்சிக் கதவை மூடி வைத்துவிட்டு, ஒரு பக்கச் சார்பாக நடந்து கொண்ட சர்வதேசமும் பாரிய தவறு விட்டிருப்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக நின்று பிரபாகரன் சுட்டுகின்றார்.

ஆகவே, மீண்டும் முழு அளவில் யுத்தப் பாதையை நோக்கி இலங்கை திரும்பியிருக்கின்றது என்றால் அதற்கான பொறுப்பை சர்வதேச சமூகமும் ஏற்றாகத்தான் வேண்டும்.

அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட இரு தரப்புகளையும் பக்கச் சார்பாக நடத்தி, அதன் மூலம் அவற்றுக்கிடையில் இருந்த சமநிலையையும், சமபங்காளிகள் என்ற தகைமை யையும் மோசமாகப் பாதிக்கச் செய்த சர்வதேச சமூகம் இந்தக் குற்றப் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவே முடியாது.

சுதந்திர விடுதலைப் போராட்டத்தை மீள ஆரம்பிப் பதற்குத் தீர்மானித்திருக்கும் விடுதலைப் புலிகளை அதற் காகத் திட்டித் தீர்த்துக் கரித்துக் கொட்ட சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி முயலலாம். அதற்கு முன்னர் தான் இவ்விவகாரத் தில் இழைத்த பெருந்தவறை ஒரு தடவை அது சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.