Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன் அடித்த 'எக்ஸ்ட்ரா'! ஆஷஸ் விசேட செய்திகள்

Featured Replies

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை விட அதிக ரன் அடித்த 'எக்ஸ்ட்ரா'!

 

தொடரில் இன்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, வரலாறு காணாத அவமானத்தை சந்தித்துள்ளது. அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 60 ரன்களை மட்டுமே எடுத்தது.

sasi.jpg

 

ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் யாரும் நிலைத்து விளையாடவில்லை. கேப்டன் மைக்கேல் கிளார்க்கில் இருந்து அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களில் ஒருவர், கொஞ்சம் நிலைத்து விளையாடினார். ஆனால் அவரும் 13 ரன்களில் அவுட் ஆகி விட்டார். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்காக உதிரிகளாக 14 ரன்கள் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தது எக்ஸ்ட்ராதான்.

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே தனிவீரர் ஒருவர் எடுத்த ரன்களை விட கூடுதலாக உதிரிகள் கிடைத்திருப்பதும் இதுதான் முதல் முறை ஆகும்.

http://www.vikatan.com/news/article.php?aid=50643

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இங்க பார்ரா... ஆஸி- இங்கிலந்து மோதலுக்கு நாட்டாமையாக செயல்பட்ட இந்திய- பாக் நடுவர்கள்!

 

நாட்டிங்காம்: அரிதிலும் அரிதான ஒரு சம்பவம் இன்று கிரிக்கெட் உலகில் நடந்தது. அதாவது பரம வைரிகளான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டியின்போது இன்னொரு பரம வைரிகளான இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர்கள், அம்பயர்களாகப் பணியாற்றியதுதான் அந்த அரிய நிகழ்வு.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரில் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. இந்த நிலையில் இன்று நாட்டிங்காமில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில்தான் இந்தியாவைச் சேர்ந்த எஸ். ரவி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆலிம் தர் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

 
4வது டெஸ்ட்
இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ள இந்தத் தொடரில் முக்கியமான 4வது டெஸ்ட் இன்று நாட்டிங்காமில் தொடங்கியது. முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய, ஆஸ்திரேலியாவை, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பிரித்து மேய்ந்து விட்டார். இதனால் முதல் இன்னிங்ஸை 60 ரன்களுக்கு இழந்தது ஆஸ்திரேலியா.
 
இந்திய - பாக். நடுவர்கள்
இந்தப் போட்டியின் நடுவர்களாக இந்தியாவின் எஸ்.ரவியும், பாகிஸ்தானின் ஆலிம் தர்ரும் செயல்படுகிறார்கள். இது ஒரு அரிய நிகழ்வாகும்.
 
எலைட் நடுவர் ரவி
49 வயதான ரவி சமீபத்தில்தான் ஐசிசியின் எலைட் குழுவில் இடம் பெற்றார். அதேசமயம், ஆலிம் தர் பல போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் படைத்தவர்.
 
97 டெஸ்ட் தர்
97 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ரவிக்கு இது 8வது போட்டியாகும். 2013ம் ஆண்டு ரவி தனது முதல் டெஸ்ட் நடுவர் பணியை ஆற்றியிருந்தார்.
 
5வது நிகழ்வு
டெஸ்ட் வரலாற்றில் இந்திய, பாக் நடுவர்கள் இணைந்து பணியாற்றுவது இது 5வது முறையாகும். கடைசியாக 2009ம் ஆண்டு டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது இந்தியாவின் அமீஷ் சஹேபா மற்றும் ஆலிம் தர் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
 
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ashes-2015-india-pakistan-umpiring-partnership-4th-test-232779.html
  • தொடங்கியவர்
  •  
33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா: டக்அவுட்டில் புதிய சாதனை!
 

ஷஸ் தொடரில் 65 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட்டாகி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் 19 பந்துகளில் 5 விக்கெட்டுகளை மிக விரைவாக வீழ்த்தி புதிய சாதனை நிகழ்த்தினார்.

david.jpg

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி, நாட்டிங்ஹாம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், தங்கள் அணி பீல்டிங் செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ரோஜர்சும் வார்னரும் களமிறங்கினர்.

இங்கிலாந்தின் பிராட் வீசிய முதல் ஓவரில், 3 பந்துகளை மட்டுமே சந்தித்த ரோஜர்ஸ், கேப்டன் குக்கிடம் பிடி கொடுத்து வெளியேறினார். டெஸ்ட் போட்டியில் ரோஜர்ஸ் டக் அவுட்டானதும் இதுதான் முதல் முறை. அடுத்து மார்க் வுட் ஓவரில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வார்னர், பட்லரிடம் கேட்ச் கொடுத்தார். தொடக்க வீரர்கள் இருவரும் ரன் கணக்கை தொடங்குவதற்குள் விக்கெட்டை பறிகொடுத்து பாரிதாபமாக வெளியேறினர்.

braddd.jpg

ஆஷஸ் வரலாற்றில் இதற்கு முன், கடந்த 1950ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட்டாகியுள்ளனர். தற்போது 65 ஆண்டுகளுக்கு பிறகு ரோஜர்சும் டேவிட் வார்னரும் அதேபோல் டக்அவுட் ஆகியுள்ளனர்.

அதுமட்டுமல்ல ஸ்மித் (10) மார்ஷ் (0) கிளார்க் (10) வாக்ஸ் (1) வரிசையாக அவுட் ஆனார்கள். இவர்கள் அனைவரது விக்கெட்டுகளையும் பிராட் வீழ்த்தினார். நெவில் ஃபின் பந்தில் போல்டானார். ஆஸ்திரேலிய அணி, பின்னர் வந்த மிட்செல் ஜான்சனும் ஸ்டார்க்கும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து பார்த்தார்கள். ஜான்சனை 13 ரன்னிலும் ஸ்டார்க்கை ஒரு ரன்னிலும் பிராட் வீழ்த்தினார். தற்போது ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 54 ரன்களை எடுத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் எர்னஸ்ட் தாஸ்ஹக் 19 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக இருந்தது. தற்போது அதனை பிராட் சமன் செய்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50635#

 
 
 
 
 
 

டி20 போட்டியாக மாறிய ஆஷஸ்; ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு ஆல்அவுட்!

 

ஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வெறும் 11 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

stu.jpg

நாட்டிங்ஹாமில் நடந்த இந்த போட்டியில் பிராட் வீசிய முதல் ஓவரிலேயே  ரோஜர்ஸ் விக்கெட்டை எடுத்தார் ரோஜர்ஸ் விக்கெட்தான் டெஸ்ட் அரங்கில் பிராட் வீழ்த்திய 300வது விக்கெட் .தொடர்ந்து ஸ்மித், மார்ஷ், கிளார்க், வாகஸ்,ஜான்சன், ஸ்டார்க்,லியோன்  ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராட்.

மொத்தமே 9.3 ஓவர்கள் வீசிய பிராட் அதில் 5 ஓவர்கள் மெய்டன் வீசினார். 15 ரன்களை மட்டும்தான் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 18.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.

http://www.vikatan.com/news/article.php?aid=50640

  • தொடங்கியவர்

15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா

 

  • டிரெண்ட் பிரிட்ஜில் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்த ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி
    டிரெண்ட் பிரிட்ஜில் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்த ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி
  • ஸ்கோர் போர்டு 29/6 என்று காட்ட மைக்கேல் கிளார் அவுட் ஆகி வெளியேறும் காட்சி. | படம்: ஏ.பி.
    ஸ்கோர் போர்டு 29/6 என்று காட்ட மைக்கேல் கிளார் அவுட் ஆகி வெளியேறும் காட்சி. | படம்: ஏ.பி.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் இந்திய நேரம் 3.30 மணிக்குத் தொடங்கியது. 5.10 மணிக்குள் 18.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 60 ரன்களுக்குச் சுருண்டது. உதிரிகள் வகையில் 14 ரன்கள் வந்ததே அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

1898-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த துவம்சத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார் பிராட்.

ஆஸ்திரேலியாவைச் சுருட்ட 100 நிமிடங்களே எடுத்து கொண்டார் பிராட். இன்னிங்ஸ் முழுதும் 5 ஸ்லிப்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

ஸ்டூவர்ட் பிராட் 9.3 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதன் மூலம் அவர் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். கிறிஸ் ராஜர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியவுடனேயே அவர் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிட்டார். தற்போது 307 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து முன்னாள் வீரர் பிரெட் ட்ரூமென்னை சமன் செய்துள்ளார்.

ஆண்டர்சன் விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் இந்த மைதானத்தில் காயம் காரணமாக அவர் இடம்பெறாததையடுத்து ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டுகளை அள்ளினார். இந்த மைதானத்தில் சிறந்த பவுலிங் இதுவே என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இன்னும் கூறப்போனால், அடுத்த பேட்ஸ்மெனுக்கு கால்காப்பு உள்ளிட்டவைகளை கட்டிக் கொள்ள நேரமிருந்திருக்குமா என்பதே சந்தேகம், அந்த வேகத்தில் விக்கெட்டுகள் மடம்டவென சரிந்தன.

எப்போதும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் டிரெண்ட் பிரிட்ஜ் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார்.

முதல் ஓவரை பிராட் வீச 3-வது பந்து கிறிஸ் ராஜர்ஸ் கிரீஸில் தேங்கி நின்றார், ஃபுட்வொர்க் இல்லை, பிராட் பந்து ஆங்கிளாக உள்ளே வந்து சற்றே வெளியே ஸ்விங் ஆக அதுவே எட்ஜ் எடுத்துக்கொண்டு சென்றது. முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

அதே ஓவரில் 6-வது பந்தில் புதிதாக களமிறங்கிய ஸ்மித்துக்கு ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் சற்றே நல்ல அளவுக்கு கொஞ்சம் முன்னதாக பந்து பிட்ச் ஆக அவர் நின்ற இடத்தில் அப்படியே நேராக திரும்ப வேண்டியதாயிற்று, அதாவது கிரிக்கெட் மொழியில் ஸ்கொயர் ஆனார் என்று கூறப்படுவதுண்டு. பந்து ஸ்மித்தை மதிக்காமல் மட்டையின் விளிம்பைத் தட்டிச் சென்று ரூட் கையில் அடைக்கலமானது.

2-வது ஓவரில் டேவிட் வார்னர், மார்க் உட் வீசிய நல்ல வேகமான பந்தை தன் உடலிலிருந்து சற்றே தள்ளி ஆடி மட்டையை தொங்கவிட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. 3 விக்கெட்டில் இரண்டு டக் அவுட்.

ஷான் மார்ஷ் களமிறங்கினார் 4 பந்துகள் ஆடினார், மீண்டும் பிராடின் அருமையான ஆஃப் ஸ்டம்ப் லெந்த்துக்கு மட்டை விளிம்பைக் கொடுத்தார், வெளியேறினார்.

5-வது ஓவரில் பிராட், வோஜஸையும் ஒரு அருமையான ஸ்விங் பந்துக்கு வீழ்த்தினார், இம்முறை 5-வது ஸ்லிப்பில் ஸ்டோக்ஸ் அருமையான கேட்ச் ஒன்றை பிடித்தார், ஆஸ்திரேலியா 21/5.

கிளார்க் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் இருந்த போது பிராட் வீசிய வெளியே சென்ற பந்தை, விட்டு விட வேண்டிய பந்தை கால்களை நகர்த்தாமல் சேவாக் பாணி ஸ்லேஷ் செய்தார் எட்ஜ் ஆனது குக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஒவ்வொரு விக்கெட்டுக்கும் தலையை எதிர்மறையாக ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் கிளார்க்.

விக்கெட் கீப்பர் நெவிலும் ஃபுட்வொர்க் இல்லாமல் மார்க் உட் பந்தில் பவுல்டு ஆனார். 13-வது ஓவரில் பிராட் மீண்டும் ஸ்டார்க், ஜான்சன் ஆகியோரை காலி செய்தார். இரண்டுமே குட் லெந்த், எட்ஜ், வழக்கமான மட்டை தொங்கவிடல், அவுட்.

நேதன் லயன் 9 ரன்கள் எடுத்தார். ஆனானப்பட்டவர்களுக்கே சட்டென எட்ஜ் எடுக்கும் போது இவர் மட்டும் என்ன செய்வார்? ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 60 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன் அதிகபட்சமாக 13 ரன்கள் எடுத்தார், உதிரிகள் 14 ரன்கள்.

http://tamil.thehindu.com/sports/15-ரன்களுக்கு-8-விக்கெட்டுகள்-பிராட்-ஆவேசத்தில்-60-ரன்களுக்குச்-சுருண்டது-ஆஸ்திரேலியா/article7508022.ece

  • தொடங்கியவர்

ஓய்வு பெறும் எண்ணமில்லை: மைக்கேல் கிளார்க் திட்டவட்டம்

 

மைக்கேல் கிளார்க்
மைக்கேல் கிளார்க்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் கிளார்க், ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6 இன்னிங்ஸ்களில் 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார். இங்கிலாந் துக்கு எதிரான ஆஷஸ் தொட ரோடு கிரிக்கெட்டிலிருந்து கிளார்க் ஓய்வு பெறலாம் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலை அதை மறுத்துள்ள கிளார்க் மேலும் கூறியிருப்பதாவது:

என்னுடைய ஆட்டம் குறித்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் சரியானதுதான். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எனது ஆட்டத்தில் ரன் குவிக்கும் வேட்கை இல்லை. நான் இந்தத் தொடரோடு ஓய்வுபெறக்கூடும் என்பதை என்னுடைய கண்களில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அவை முற்றிலும் தவறானது. யார் வேண்டுமானாலும் என்னுடைய ஆட்டம் குறித்து விமர்சிக்கலாம்.

ஆனால் கிரிக்கெட் விளையாடும் எனது விருப்பம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க முடியாது. நான் பயிற்சியை முடித்துக் கொண்டுதான் இங்கிருந்து கிளம்புகிறேன். நான் ரன் குவிக்கும் வேட்கை இல்லாமல் இருக்கிறேன் என கூறாதீர்கள். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை. கிறிஸ் ரோஜர்ஸ் தனது 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக 35 வயது வரை காத்திருந்தார். எனக்கு இப்போது 34 வயதுதான் ஆகிறது. அதனால் இந்தத் தொடருக்குப் பிறகும் ஆஸ்திரேலியாவுக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.

எனினும் எனது செயல்பாட்டின்படி மற்றவர்களைப்போல் நானும் விமர்சிக்கப்படலாம். எனது ரன் குவிக்கும் வேட்கை குறித்து கேள்வியெழுப்புவது என்னை கொல்வதற்கு சமமாகும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக ஆடுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, எனது ஆட்டத்தை மேம்படுத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஓய்வு-பெறும்-எண்ணமில்லை-மைக்கேல்-கிளார்க்-திட்டவட்டம்/article7506787.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.