Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இளம் அணிக்கு அற்புத வெற்றி: கோலி நெகிழ்ச்சியும் சில புள்ளிவிவரமும்

 
 
kohli_2532507f.jpg
 

இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிரான தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இங்கு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. இது இளம் இந்திய அணிக்கு கிடைத்த அற்புதமான வெற்றி. இலங்கை மண்ணில் இதற்கு முன்னர் முதல் டெஸ்ட்டில் தோற்றபிறகு இந்திய அணி தொடரை வென்றது கிடையாது. ஆனால் நாங்கள் முதல் டெஸ்ட்டில் தோற்றபோதும், அதிலிருந்து மீண்டு இப்போது தொடரைக் கைப்பற்றியதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறோம் என்றார்.

இந்த வெற்றிக்கு டிரெஸ்ஸிங் அறையில் நிலவிய அற்புதமான சூழலே காரணம் எனக் கூறிய கோலி, "புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன் போன்றோர் கடைசி இரு போட்டிகளில் விளையாடாதபோதும், வெளியில் இருந்து எங்களுக்கு உதவினார்கள். ஒவ்வொருவரும் வெற்றிக்காக பாடுபட்டார்கள். இந்த வெற்றி எங்களுடைய டெஸ்ட் வாழ்க்கையை கட்டமைக்க உதவும்" என்றார்.

இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட சேதேஷ்வர் புஜாராவை வெகுவாகப் பாரட்டிய கோலி, "முரளி விஜய் காயமடைந்ததால் புஜாரா களமிறங்கினார். ஆனால் புஜாரா அதை கடினமானதாக பார்க்காமல், தனக்கு கிடைத்த வாய்ப்பாக பார்த்தார். அதனால்தான் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முடிந்தது" என்றார்.

மேத்யூஸ் ஏமாற்றம்

தோல்வி குறித்துப் பேசிய இலங்கை கேப்டன் மேத்யூஸ், "டாஸ் வென்று இக்கட்டான சூழலில் இந்திய அணியை முதலில் பேட் செய்ய வைத்தபோதும் நாங்கள் தோற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது. எங்களுடைய பேட்டிங் முற்றிலும் தோல்வியடைந்தது. அதேநேரத்தில் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.

முதல் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அதில் நாங்கள் 300 ரன்கள் வரை குவிக்க வேண்டியதிருந்தது. நானும், பெரேராவும் நீண்ட நேரம் நிற்கலாம் என நினைத்தேன். அப்படி நின்றிருந்தால் அது ஆட்டத்தின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்" என்றார்.

நல்ல வாய்ப்பு: புஜாரா

ஆட்டநாயகன் விருது வென்ற புஜாரா பேசுகையில், "எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது. ஒரு கட்டத்தில் 1-1 என சமநிலையில் இருந்த நாங்கள், இப்போது தொடரை வென்றுள்ளோம். புதிய பந்துகளை எதிர்கொள்ளும்போது சவாலாக இருந்தது. சிறப்பாக தயாராகியிருந்ததும், சர்வதேச போட்டியின் மூலம் எனக்கு கிடைத்த அனுபவமும் இந்தப் போட்டியில் நான் சிறப்பாக ஆடுவதற்கு உதவின" என்றார்.

இஷாந்த் சர்மா 200 விக்கெட்

இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. இவர் தனது 65-வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது நபர் இஷாந்த் சர்மா. கபில்தேவ் (434), நாத் (236), ஜாகீர்கான் (311) ஆகியோர் மற்ற 3 வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவர்.

மேத்யூஸ் 339 ரன்கள்

இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இலங்கை கேப்டன் மேத்யூஸ் 339 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தினேஷ் சன்டிமல் 288 ரன்களுடன் 2-வது இடத்தையும், விராட் கோலி 233 ரன்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அஸ்வின் 21 விக்கெட்

இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 21 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக அமித் மிஸ்ரா, தமிகா பிரசாத், ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

http://tamil.thehindu.com/sports/இளம்-அணிக்கு-அற்புத-வெற்றி-கோலி-நெகிழ்ச்சியும்-சில-புள்ளிவிவரமும்/article7607118.ece

  • Replies 77
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நாம் பொறுமையிழக்காது எதிரணியினரை சோதிக்க வேண்டும்: விராட் கோலி

 
தொடர் நாயகன் அஸ்வின். | படம்: ஏ.பி.
தொடர் நாயகன் அஸ்வின். | படம்: ஏ.பி.

இலங்கை அணிக்கு எதிரான வெற்றி பந்து வீச்சாளர்களுக்கு சொந்தமானது என்று கூறிய கேப்டன் விராட் கோலி, எதிரணியினரின் பொறுமையை நாம் சோதிக்க வேண்டுமே தவிர, நாம் பொறுமையை இழந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

வெற்றி குறித்து கோலி அளித்த பேட்டியில், “இந்தத் தொடர் பந்துவீச்சாளர்களுக்கானது என்று கருதுகிறேன். ஏனெனில் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டனர். புஜாராவின் சதம் உலகத் தரம் வாய்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. இது தவிர பவுலர்கள் செயல்பாடே சிறப்பாக அமைந்தது.

எதிரணி வீரர்களின் பொறுமையை நாம் சோதிக்க வேண்டுமே தவிர, நாம் பொறுமையிழந்து விடக்கூடாது. பவுலிங்கை பொறுத்தவரையில் இந்தத் தொடர் ஒரு அரிய வெளிப்பாடு” என்றார்.

மேத்யூஸ்-குசல் பெரேரா அச்சுறுத்தல் கூட்டணி பற்றி..

டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் ஆட்டத்தில் சதக்கூட்டணி அமைவதை எதிர்பார்க்க வேண்டும், ஆனால் எப்படியும் ஒரு வாய்ப்பு வரும் அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

புதிய பந்து எடுக்கும் முன் அழகாக பந்து வீசினோம். ஆட்டத்தை சற்றே மந்தப் படுத்தினோம். அதன் பிறகு விக்கெட் கிடைத்தது. எப்போதும் வாய்ப்பு கைக்கு வரும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார் கோலி.

21 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் கூறும்போது, “காலே டெஸ்ட் முதல், முதல் நாள் ஆட்டத்தில் என்ன மாதிரியான செயலூக்கத்துடன் இருந்தேனோ அதனை பராமரிக்க முயற்சி செய்தேன்.

பந்துவீச்சில் ரிதம் என்பது மிக முக்கியம். இந்தத் தொடர் முழுதும் ரிதம் என்பதை விட்டுவிடாமல் இருக்க முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறை பந்து வீச அழைக்கப்பட்ட போதும், துல்லியமான ரிதத்துடன் இருந்தேன்.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இசாந்த் சர்மா அசாத்தியமாக வீசினார். ஒவ்வொருவரும் மற்ற பந்துவீச்சாளர்களுக்கேற்ப செயல்பட்டோம். இது மிகப்பெரிய விஷயம், இதனை சீரான முறையில் செய்யும் அணிகளே சாம்பியன்களாகத் திகழ்கின்றனர்.

நான் முழங்கை காயத்தினால் அவதிப்பட்டு வந்தேன், இதனால் எனது பேட்டிங்கில் சில உத்தி ரீதியான மாற்றங்களை செய்ய நேரிட்டது. பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய விரும்பினேன், ஆனாலும் அதிக நேரம் கிரீஸில் நிற்க முடியவில்லை.

நேற்று ஒருநாள், அனைத்தையும் மனதிலிருந்து அகற்றிவிட்டு பேட்டிங்கின் போது பந்தை நெருக்கமாக உற்று கவனித்து ஆடினேன், அதுதான் கடைசியில் பயனளித்தது. அணி நிர்வாகத்துக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

http://tamil.thehindu.com/sports/நாம்-பொறுமையிழக்காது-எதிரணியினரை-சோதிக்க-வேண்டும்-விராட்-கோலி/article7607999.ece

  • தொடங்கியவர்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப்-20-ல் இசாந்த் சர்மா, புஜாரா

 

 
இசாந்த் சர்மா. | படம்: ஏ.பி.
இசாந்த் சர்மா. | படம்: ஏ.பி.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் புஜாராவும், பவுலிங் தரவரிசையில் இசாந்த் சர்மாவும் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளனர்.

முதல் முறையாக புஜாரா பேட்டிங் தரவரிசையில் டாப்-20-க்குள் நுழைந்துள்ளார். கொழும்பு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால் அவர் 4 இடங்கள் முன்னேறி 20-வது இடம் பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக விராட் கோலி 11-ம் இடத்தில் உள்ளார்.

கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இசாந்த் சர்மா 3 இடங்கள் முன்னேறி 18-ம் இடம் பிடித்துள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 48-வது இடம் வகிக்கிறார். அமித் மிஸ்ரா பவுலிங் தரவரிசையில் 37-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் பேட்டிங் தரவரிசையில் தனது 5-வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக பிரசாத் 3 இடங்கள் முன்னேறி 22-ம் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ளது

http://tamil.thehindu.com/sports/ஐசிசி-டெஸ்ட்-தரவரிசையில்-டாப்20ல்-இசாந்த்-சர்மா-புஜாரா/article7607617.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.