Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆகஸ்ட் 15ம் திகதி ஜெயலலிதா வெளியிடும் அதிரடி அறிவிப்பு: பரபரப்பு தகவல்

Featured Replies

11800628_448035828701845_500515180141191

 ஆகஸ்ட் 15ம் திகதி ஜெயலலிதா வெளியிடும் அதிரடி அறிவிப்பு: பரபரப்பு தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:54.03 AM GMT +05:30 ]
jaya_mla_001.jpgதமிழகத்தில் இருக்கும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்த 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுவிலக்கு போராட்டம் நடத்தி காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக அரசு மதுக்கடைகளைக் குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதையடுத்து மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?

வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை? பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை?

மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? கட்டிட உரிமையாளர் ஆட்சேபணை தெரிவிக்கும் மதுக்கடைகள் எத்தனை? பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் எத்தனை? என்பன போன்றவற்றை கணக்கெடுத்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விரைவில் 6 ஆயிரத்து 856 கடைகளில், சுமார் 500 முதல் 1,000 கடைகள் வரை மூடப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கடைகளை குறைப்பது தொடர்பான 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

http://www.newindianews.com/view.php?20KOl1dbcy40644e3IMQ2022YmD3ddcfDmy30eWgAKae4C04A4cb2lOm23

jaya_mla_002.jpg

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.