Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூடியூப் பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

யூடியூபில் தமிழ் இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியரின் சுவைமிகு முயற்சி

 
 
aivar_2722220h.jpg
 

'இனிமையானது தமிழ் மொழி; கடினமானது தமிழ் இலக்கணம்' என்பார்கள். தமிழ் இலக்கணத்தை எளிமையான முறையில், கற்றுக் கொடுக்கிறார் ஆசிரியர் ரா.தாமோதரன். அரசுப் பள்ளி ஆசிரியரான தாமோதரன், யூடியூபில் தனது பாடங்களை ஏற்றி, தொழில்நுட்பத்தின் வழியாக இலக்கணத்தைக் கற்பிக்கிறார்.

தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான 'ஃ' உருவானது எப்படி, மகரக்குறுக்கத்தின் போது குறையும் மாத்திரைகளின் அளவு ஆகியவை மாணவச் செல்வங்களின் வழியாகக் கற்பிக்கப்படுகின்றன.

இலக்கணம் தவிர மாணிக்கவாசகர் பாடல்கள், விழிப்புணர்வு வாசகங்கள், சிலப்பதிகாரம் உள்ளிட்டவைகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. காணொலிகளை, மாணவர்களின் குரலிலும், சக ஆசிரியர்கள் வழியாகவும் விளக்குவது சிறப்பு.

ஆய்தக்குறுக்கம்

மூவிடப்பெயர்கள்

மெய்தான் அரும்பி - மாணிக்கவாசகர் பாடல்

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் ஒன்றிய அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் தாமோதரன், தன் முயற்சி குறித்து என்ன சொல்கிறார்?

"எங்களின் இந்த முயற்சிக்கு முக்கியக் காரணங்கள் மூன்று.

1. மல்டிமீடியா வழியாக தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும்.

2. மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

3. தனியார் பள்ளிகளில் தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்பிப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. அந்த மாணவர்களும், சீரிய தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கணத்தைப் பற்றிய முறையான வீடியோக்கள், இதுவரை இணையத்தில் வரவில்லை. வந்த சிலதும் பயிற்சி டுட்டோரியல்களாகத்தான் இருக்கின்றன. குறுங்காணொலிகளாக இருக்கும் இவற்றை, இன்னும் விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது.

இப்போது பத்தாம் வகுப்புப் பாடங்கள் முழுவதும், எழுத்து வடிவில்தான் காணொலிகளாக வந்துள்ளன. அவை அனைத்தையும், படங்கள் வடிவிலான காணொலிகளாக மாற்றும் முயற்சியில் இருக்கிறோம்" என்றார்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8188322.ece?homepage=true&relartwiz=true

  • 2 weeks later...
  • Replies 158
  • Views 29.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'தாண்டவம்' ஆடி சமூகத்தை சாடும் குறும்படம்

 

 
constable_2737968h.jpg
 

தங்கள் குழந்தையை தனியார் பள்ளிகளில் சேர்க்க நினைக்கும் நடுத்தர குடும்பங்களின் மனோபாவத்தை அழகாக படம்பிடித்துள்ளது தாண்டவ் எனும் இந்திக் குறும்படம்.

11 நிமிடமே கொண்ட இக்குறும்படம் ஆங்கிலக் கல்வி மோகம் சாதாரணக் குடும்பங்களில்கூட என்னவிதமான சலசலப்பை உண்டாக்குகின்றன என்பதை சொல்லத் தவறவில்லை.

ஒரு ஹோலி கொண்டாட்டத்திலிருந்து படம் தொடங்குகிறது. ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி ஆட்டம் பாட்டம் என கொண்டாடுகிறார்கள் இளைஞர்கள். ஆட்டம் போடும் அந்த இளைஞர்களை தூரநின்று கவனிக்கிறார் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அவர் தனது அறிவுத்திறன்மிக்க மகளை நன்றாக படிக்கவைக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. நினைத்தால் ஒரு நிமிடம் ஆகாது பணம் செலவாகும் தன் மகளின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு.. ஆனால் அவர் ஒரு நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிள்.

ஆங்கிலக் கல்வியைவிட அதையொட்டிய பல்வேறு பிரச்சனைகள்தான் அவரை தொந்தரவு செய்கிறது. இப்படம் எதற்கும் தீர்வு சொல்ல முனையவில்லை... அதற்குள் படம் வேறெங்கோ சென்றுவிடுகிறது...

நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பிரச்சனைகளையும் மண்டையில் ஏற்றிக்கொண்ட சமூகக் கோபம் எவ்வளவு வேடிக்கையானது என்பதைச் சொன்ன தேவசிஷ் மகிஜாவின் இயக்கம் ஒரு நல்ல முயற்சி. நீங்களும் பாருங்களேன் போலீஸ் கான்ஸ்டபிள் மனோஜ் பாஜ்பாயின் தாண்டவத்தை!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8240455.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: ஜாலி - ஜோலி கலந்த 'தங்கிலீஷ்' குறும்படம்

 

 
tanglish1_2746963h.jpg
 

ஒரு குறும்படம் ஒரே சமயத்தில் பொழுதுபோக்கையும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சனையொன்றையும் சரிவிகிதத்தில் பேசியுள்ளது என்றால் அது எப்படிங்க என்றுதான் முதலில் கேட்கத் தோன்றும்..

நெசந்தாங்க... வாழ்வின் அங்கீகரத்திற்காக கிராமம் உள்ளிட்ட விளிம்புநிலையிலிருந்து வந்து ஹைடைக் நிறுவனங்களில் வேலைதேடும் இளைஞர்கள் நேர்காணல்களுக்கு வருவதை நாம்தான் தினம் தினம் பார்க்கிறோமே அதைத்தாங்க 'தங்கிலீஷ்' குறும்படத்தில் கிண்டி கிளறியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் பலரும் ஆங்கிலம் சரியாக தெரியாத காரணத்தாலேயே தகுதி குறைவு முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்படுகிறார்கள். தன்னை ஹீரோவாக கற்பனை செய்துகொள்ளும் பலரும் கூட ஆங்கிலம் தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மையிலும் அவமானத்திலும் அவர்கள் அலைக்கழியப்படுவதை ஸ்மார்ட்போனை கீழே தரையில்போட்டு தூள்தூளாக்கியது போல பளார் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

பங்கேற்றுள்ள கலைஞர்களின் பங்களிப்பில்தான் இப்படத்தின் மையம் பார்வையாளனை கவ்விப்பிடிக்கிறது. காதலை மட்டுமல்ல வாழ்க்கையையும் ஒரு கை பார்க்கவேண்டிய இடத்திற்கு தள்ளப்படும் நாயகன் எப்படி வெல்கிறான் என்பதை தனது சிறந்த நடிப்பாற்றலால் மின்னித் தெறிக்கிறார் லிங்கா... அவருக்கு ஈடுகொடுத்து விவேக் பிரசன்னா, தீபா நடராஜன், அபிராம், ஜெயா கணேஷ் உள்ளிட்ட பலரும் நன்றாகவே தங்களது சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள்.

கேமரா பாலாஜி சுப்ரமணியன் கேமராவும் மரியா ஜெரால்டுவின் இசையும் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை நம்முள் ஏற்றிவிடுகிறது. இங்கிலிஷ் என்கிற அரக்கியையும் எதிர்கொள்ள அழகான பெண்ணின் துணையோடு நாயகன் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறான். நட்பையும் காதலையும் அளவோடு கலந்து இந்தக் குறும்பட ஜாங்கிரியை சுவைபட சுட்டுத் தந்திருக்கிறார் இயக்குநர் துவாரகா ராஜா.

ஹைடெக் மன்னர்கள் மட்டுமல்ல யாரும்கூட வெற்றிவாழ்க்கைக்கு தேவையான ஆங்கிலத்தை ஜாலியாகவே கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் தந்தவிதத்தில் தரமான திரைப்படத்திற்குண்டான நல்ல குணாம்சங்களை தாங்கிவந்துள்ளது இப்படம்.

விறுவிறுப்புக்காக வேண்டி தேவையில்லாத காட்சிகளை சேர்க்க வாய்ப்புகள் பல இருந்தும் எள்ளளவும் அந்த மாதிரியெல்லாம் சறுக்கிவிடவில்லை. ஒரு குறும்படத்திற்கு இவ்வளவு அதகளமா! என வியக்கும்படியான கதையம்சத்தைக் கூறி பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்.

இயக்குநர் துவாரகா ராஜாவுக்கு மட்டுமல்ல இதில் பங்கேற்றுள்ள பல கலைஞர்களுக்கும் பளிச்சிடும் எதிர்காலத்தைத் தரப்போகிறது இக் குறும்படத் துருப்புச்சீட்டு. அப்படி என்ன பரவசமான கதையம்சம் என்பதை தெரிந்துகொள்ள துருப்புச்சீட்டை நீங்களும் பிரித்துப் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8261196.ece?homepage=true&relartwiz=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: கணினி கால வாழ்க்கை விளைவை சொல்லும் 'முற்பகல் செய்யாவிடில்'

 
 
filll_2762399f.jpg
 

இன்றைய கம்ப்யூட்டர் யுக மனிதனின் வாழ்க்கை எப்படிப்பட்டது. அவன் எப்படிப்பட்டவனாக மாறுகிறான் என்பதையெல்லாம் தெளிவாக நிர்ணயம் செய்ய முயன்றுள்ளது 'முற்பகல் செய்யாவிடில்' எனும் குறும்படம்.

இக்குறும்படத்தில் வரும் 'சித்து' ஒரு உதாரணம்தான். வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிப்பதைவிட உள்ளூரில் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்கலாம் என்கிற சித்து வேறு. தங்களையும் குழந்தையையும் ஆசையாகப் பார்க்கவரும் அப்பா அம்மாவை சென்னைக்கு வரவேண்டாம் என்று சொல்வதற்காக பெங்களூருக்கு ஆபீஸ்வேலைப் பயணம், குழந்தைக்கு எக்ஸாம் என்றெல்லாம் பொய்களை அடுக்கும் சித்து வேறு... ஆனால் இவர்கள் எல்லாம் நம்மிடமே உள்ளவர்கள்தான்.

உடன் பணியாற்றும் ஊழியருக்கு உதவ மறுப்பவனும் வழியில் காணும் ஒரு சமூக அவலத்தைக் கண்டு கோழையாய் பயந்து ஓடுபவனும்கூட இன்று நாம் காணும் இன்னொருவகையான மனிதனைத்தான்.. அவ்வகையில் மனிதத்தை காணாமல் அடித்துவிட்டது இந்தக் கம்ப்யூட்டர் வாழ்க்கை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

இன்றுள்ள அவசர உலகத்து மனிதனின் சுயநலம்கூட ''இப்போ ஜனங்க அப்படித்தான்'' என்று ஒருவகையில் நியாயப்படுத்தப்படுகிறது. கடைசியில் அவனது சுயநலத்தினால் அவனுக்கேக் கூட ஆபத்துதான் அது எவ்வளவு தவறானது என்பதையும் எக்குத்தப்பான இறுதிக்காட்சியின் திருப்பம் சொல்கிறது. இருவேறு முடிவுகளைக் கொண்டு பிரித்துக் காட்டியுள்ள இயக்குநர் கணேஷ் கார்த்திக்கின் திரைக்கதை உத்தி மிகமிகப் புதுமையானது.

ஜாவீத் கச்சிதமான ஒளிப்பதிவை, கணேஷ்ராம் மற்றும் மாதவ் ஆகியோரின் இனிய இசையை, ஒரு திரைப்படத்திற்குண்டான ராஹுலின் எடிட்டிங்கையும் மாக்ஸ்வெல், சஷி, அக்ஷயா, நந்து, ஐஸ்வர்யா, தியா, ஆசைத்தம்பி உள்ளிட்டோரின் ஈடுபாடுமிக்க நடிப்பைக் காண 'முற்பகல் செய்யாவிடில்' குறும்படத்தை நீங்களும் பாருங்களேன். மார்ச் 9 அன்று நடைபெறவுள்ள ராடன் குறும்பட விழாப் போட்டியில் பங்கேற்பதற்காக இறுதிச்சுற்றுக்கு தேர்வான காரணம் புரியும்.

https://www.youtube.com/watch?v=pOAIMC5LojE

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article8289652.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'அவள்'களுக்காக 'அவன்'களின் சமர்ப்பணம்!

 

 
amma_2766651f.jpg
 

அவள்...

அவள்தானே எல்லாம்...

அவளால்தானே நாம்...

அவளில்தானே இந்த உலகம்...

அவள் யார்?

*

அன்பு காட்ட அன்னையாக..

சண்டையிடத் தங்கையாக..

சாய்ந்துகொள்ள தோழியாக..

கரம் பற்றக் காதலியாக..

உயிர் கொள்ள மனைவியாக..

பெயர் சொல்லப் பிள்ளையாக..

யார் அவள்?

*

இந்த மகளிர் தினச் சிறப்பு வீடியோ பாடல் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்..

அன்னையாய், பெண்களை மட்டுமே காட்டாமல், பொம்மலாட்டம் மற்றும் நாட்டியத்தின் வழியாக பெண்களைக் காட்சிப்படுத்தியது நல்ல முயற்சி. நமது பாரம்பரியத்தின் இரு வேறு கலைகளை ஒருங்கிணைத்த யோசனையில் புதுமை தெறிக்கிறது.

பொம்மலாட்டத் தாயின் முகத்தில் மிளிரும் தாய்மையும், அதற்கேற்ற வரிகளும் படத்துடன் நம்மை ஒன்றிப்போகச் செய்கின்றன. முக்கியமாக

வலி சுமந்தாள் - உயிர் பெற்றோம்!

கை பிடித்தாள் - நடை கற்றோம்!

என்ற வரிகளுக்கான அபிநயங்களும், பாவனைகளும் நம் பால்யத்தை நினைக்கச் செய்கின்றன.

வடிவரசு ப்ரதீபனின் பாடல் வரிகள், படத்துக்கு அச்சாரமாய் அமைந்திருக்கின்றன. பாடலை ஒட்டி அமைந்திருக்கும் காட்சிகள், படத்தின் பெரும் பலம். ஷ்ரவனின் இசையும், குரலும் பாடலை உயிர்ப்பித்திருக்கிறது. சந்தோஷின் படத்தொகுப்பு கச்சிதம்.

தொப்புள்கொடி வழி உறவு அது; தொலைந்து போகாது. அதன் வீரியத்தைச் சிதைக்காமல் செதுக்கியிருக்கிறது படக் குழு. 'அவள்'களுக்காக 'அவன்'களின் சமர்ப்பணத்துக்கு, எங்களின் ஸ்பெஷல் பூங்கொத்து!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8326905.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: வீட்டு வேலைகளுக்கு விடிவைத் தேடும் குறும்படம்

 
pondati_2762290f.jpg
 

ராடன் குறும்பட விழாவுக்கு வந்த படங்களில் சிலவற்றைப் பார்க்கும்போது வித்தியாசமான அனுபவங்களுக்கு உத்தரவாதம் உண்டு என்றே தோன்றுகிறது. இந்த வரிசையில் வந்த 'பொண்டாட்டிஸ் ஆர் அஸ்' அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கிய குறும்படம்.

வழக்கமாக குறும்படம் என்றாலே எதாவது கருத்தை சொல்லியே ஆகவேண்டும் என மெனக்கெடுவது பளிச்சென்று தெரியும். இது தவிர, சினிமாத்தனத்தையே குறும்படம் என்ற பெயரில் ஜூனியர் சினிமா எடுக்கும் அசட்டுத்தனங்கள் பல்லை இளித்துக்கொண்டு இருக்கும் சில படங்களையும் பார்க்கிறோம்.

அப்படியெல்லாமல் இல்லாமல் இதில், நகைச்சுவை கொப்பளிக்க ரசிக்கத்தக்க ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை பார்க்கமுடிகிறது.

குடும்ப வேலைகளை செய்ய முடியாமல் பெண்கள் தவிக்கும்போது அதற்கு குளோனிங் வந்தால் நன்றாக இருக்கும் ஒரு யோசனையைத்தான் இக்குறும்படம் முன்வைக்க முயல்கிறது என்றுதான் முதலில் தோன்றுகிறது.

குடும்பத்தில் உள்ள பல வேலைகளையும் ஒரே பெண் எப்படி செய்யமுடியும் ஒருவகையில் நியாயமான கேள்விதான்.அமெரிக்காவில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு தினம் தினம் வேலைக்கும் போய்க்கொண்டு இருக்கும் விருகம்பாக்கம் அஷ்டலட்சுமிதான் இப்படத்தின் மைய கதாப் பாத்திரம். இந்த இளம் குடும்பத் தலைவியே தினம்தினம் பல்வேறு குடும்ப வேலைகளில் திக்குமுக்காடி விழிபிதுங்கிக் கொண்டிருக்க தோழியொருத்தி தொலைபேசியின் வழியே வந்ததுகூட மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது அவளுக்கு.

உடனே அவளை நேரில் சந்திக்கிறாள். தோழி ஹேமா குளோனிங் குறித்த விஞ்ஞான முயற்சிகளில் இருப்பவள். அவள் குளோனிங் பற்றி 'ப்ரைன் சிக்னல்'லுக்கு ஏற்ப செயல்கள் குளோனிங்கில் பிரிக்கப்படுகிறது என்பதை சொல்லும்போது தன்னையே பரிசோதனை செய்து கொள்ள அஷ்டலட்சுமிக்கும் ஆசை துளிர்க்கிறது.

இதனால் பலவிதமான வேலைகளை செய்வதற்கு குளோனிங் செய்துகொண்டுவிட்டால் பரபர வேலைகளிலிருந்து விடுபடலாம் என தோன்ற குளோனிங் செய்துகொள்ள சம்மதிக்கிறாள்.

ரத்த சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அஷ்டலட்சுமி, எட்டு லட்சுமிகளாக குளோனிங்கில் பிரிகிறார்கள். இப்போது அஷ்ட லட்சுமிகளும் பல்வேறு வேலைகள் பார்க்கத் தொடங்குகிறார்கள்.

அது எப்படி இக்குறும்பட தயாரிப்புக்குழு, மொத்தத்தில் பெண்ணை குடும்பப் பண்டமாகத்தானே பார்க்கிறார்கள் இது என்ன சயின்ஸ் பிக்ஷன் என்று அறிவுஜீவிகளுக்கு உடனே கண்கள் சிவக்கும். ஆனால் அதற்கு எதிரான மனநிலையிலிருந்தே இப்படம் பேசுகிறது என்பதையும் பின்னர் புரிந்துகொள்கிறோம்.

இந்த வித்தியாசமான திரைக்கதையை குளோனிங் யோசனை குழப்பதை விளைவிக்கும் ஏடாகூட நிலைக்குச் செல்வதையும் சத்யராஜ்குமார், சிவா சங்கமேஸ்வரன் இருவரும் இணைந்து லாவகமாகச் சொல்லி வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

பாலமுரளி பாலு இசையும் தினேஷ் ஜெயபாலன் கேமராவும் படத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. ஒருவிதத்தில் சிறந்த படத்தொகுப்பும் தந்திரக் காட்சிகளும் கொண்டு இதை குறும்படத்தை சயின்ஸ் பிக்ஷனாக சாத்தியப்படுத்தி இருப்பவர் அமி.

மேலும் சயினிஸ் பிக்ஷன் என்றால் ஒருவிதமான புரியாத தன்மையும் பார்வையாளரை இறுக்கமாக வைத்திருக்கவும் முயலும். ஆனால் 'பொண்டாட்டிஸ் ஆர் அஸ்' சரி கலகலப்பு, விறுவிறு. இப்படத்தில் பங்கேற்ற பாலாஜி மாலாப்பு, சிவ செல்வநாதன், சுபா பிரியா, ஸ்மிதா உன்னிவேலன், உன்னிவேலன் பி.ராமன் உள்ளிட்ட குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அந்த கலகலப்புக்குள் உங்களையும் இணைந்துக்கொள்ள.... https://www.youtube.com/watch?v=DLQO1Jru0mU

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8313959.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மூன்றாம் பாலினத்தவர் வாழ்வை வருடிச் சொல்லும் 'மனம்'

 
 
manam_kurumbadam_2756905f.jpg
 

சமூக அங்கீகாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக பேசியுள்ள குறும்படம் 'மனம்'. ராடன் குறும்படப் போட்டியில் பங்கேற்றுள்ளது.

வாழ்வில் எல்லாருக்கும் எல்லாவித வசதிகளும் வாழ்வும் கிடைத்துவிடுவதில்லை. எல்லாருக்கும் எல்லாவித மகிழ்வும் கொண்டாட்டமும் அமைந்துவிடுவதும் இல்லை.

சமூக அங்கீகாரம் மட்டுமல்ல உணர்வுரீதியாகவும் மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் வலிகள் புறக்கணிக்கப்படும் வாதைகள் எண்ணிலடங்காதது. அவர்கள் வசிக்கும் இடம் குப்பமாகவே இருந்தாலும்கூட குழந்தைகளை அவர்களிடம் அண்டவிடாத தாய்மார்களும் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

கொஞ்சுவதற்கு ஒரு குழந்தைகூட கானல்நீரான அவர்கள் வாழ்வில் ஒரு குழந்தை வந்தால் எப்படியிருக்கும்? மனம் குறும்படம் இந்த சூழ்நிலையை மிக மிக அற்புதமாக வடித்துத் தந்துள்ளது.

இத்தகையதொரு படத்தை தயாரிக்க முன்வந்த பாலமுருகன் ஜி. ஜெயக்குமாரின் முயற்சி பாராட்டத்தக்கது.

மூன்றாம் பாலினத்தவர்களாக நடித்துள்ள நேகா, ஷிவானி இருவரது உச்சரிப்பும் உடல்மொழிகளும் விளிம்பில்நின்றுகொண்டு வெளிச்சத்தைத் தேடுபவர்களின் வாழ்வை நம் கண்முன் நிறுத்திவிட்டது.

நவீன் குமாரின் கேமரா குறும்படத்தை ஒரு முழுநீளப் படத்தை பார்க்கமுற்படுகிறோமோ என உணரசெய்துவிட்டது. விஜய் ஆனந்தின் பின்னணி இசையும் அருண் வரதனின் படத்தொகுப்பும் சிறந்த முயற்சிக்கான ஊன்றுகோல்களாகத் திகழ்கின்றன. பாலாஜியின் திரைக்கதைக்கு அருண் பிரகாஷின் வசனம் காயத்தை ஒற்றியெடுத்த சுகம்.

சிலருக்கு கைக்கெட்டும் தூரத்தில் கிட்டிய வசந்தம் வேறுசிலருக்கோ கானல் நீராகவே கடைசிவரை கண்ணெதிரே நிழலாடிக்கொண்டிருப்பது இயற்கைதானே. அந்தக் குழந்தையும் அவர்களுக்கு சொந்தமில்லாமல் போவதை உரிய தர்க்கத்தோடு சொல்லியுள்ளார் இயக்குநர் எம்.பாலாஜி

மனம் குறும்படத்தை காண....

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8296269.ece?homepage=true&relartwiz=true
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'அசரீரி' குறும்படம் - ஐ.டி. கணவனும் நிலைகுலையும் இல்லறமும்

 
 
asarri_2783516f.jpg
 

கணவன் - மனைவிக்கிடையே உள்ள ஊடல்கள் தேவையான ஒன்றுதான். ஆனால் புரிதல் சரியில்லையென்றால் அதனால் ஏற்படும் குழப்பங்கள் ஊடலையும் கடந்து எல்லையைக் மீறிவிடும் என்கிறது 'அசரீரி' குறும்படம்.

கணினி தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் கணவன் வீட்டில் எப்படி நடந்துகொள்கிறான். அவனுக்கு இருக்கும் தலையாயப் பிரச்சனைகள், அவையெல்லாம் அவனை எந்த எல்லைக்கு தள்ளிவிடுகின்றன என்பதும் இப்படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும்போதுகூட செல்பேசியில் சதா அலுவலகப் பேச்சுதான் பிரதிக்கிற்கு. அனு தன் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல எவ்வளவோ முயன்றும் அதை பிரதிக் காதில் வாங்கிக்கொண்டமாதிரி தெரியவில்லை. பலமுறை அவனிடம் மன்றாடியிருக்கிறாள். ஸ்கேன் டெஸ்ட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒருமுறை அதுவும் தவறிவிடுகிறது. அந்த அளவுக்கு சார் ரொம்ப பிஸி.

பிரதிக் நேரம்காலம் தெரியாமல் கணினித்துறையில் பணியாற்றியது ஒரு புதிய 'ஆப்'பை (செயலி) கண்டுபிடிக்கத்தானாம். ஒருவரின் மூளையில் உள்ள நினைவுகளை டவுன்லோடு செய்துகொண்டு அவர் இல்லையெனினும், அந்த நினைவுகளைக் கொண்டு குறிப்பிட்ட மூளையின் கேரக்டர் எப்படி யோசிக்கும் எப்படி பதிலளிக்கும் என்றெல்லாம் யோசித்து அதற்கேற்ப இந்த 'ஆப்பைத் தயாரித்திருக்கிறானாம் பிரதிக்.

எதிர்பாராதவிதமாக அப்படிப்பட்ட கணவனை இன்னொருமுறை வாழ்வில் காண முடியாதநிலைக்குத் தள்ளப்படுகிறாள் அனு. அதன்பின் எப்போதும் அவன் நினைவுகளிலேயே கரைந்துவிடுகிறாள். அவனிடம் சண்டை போடும்போதெல்லாம் இவனைவிட்டு பிரிந்துவிடலாம் என நினைத்தது நடந்துவிட்டபோது நிலைகுலைந்துவிடுகிறாள். அவன் இனி வாழ்வில் இல்லாமல் போனதற்கும் தானே காரணம் என நினைத்து அழுகிறாள்.

கோபம், ஆற்றாமை, பரிதவிப்பு, ஏக்கம், மனவலி போன்ற வீட்டுப் பெண்கள் வெளிப்படுத்தும் பல்வேறு உணர்ச்சிகளை அனுவாக வந்த ஜான்சியின் நடிப்பு மிகச் சிறப்பு. 'ராயல் லுக்' பங்களாவும் இக்கால தொழில்நுட்ப ரசனைக்குகந்த வீட்டு உபயோகப் பொருட்களையும் திரையில் பயன்படுத்தியவிதம் நம்மை பிரமிக்க வைக்கின்றன. நவீன தொழில்நுட்பம் சார்ந்த கவனமும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. இப்படத்தில் நடித்த ஜான்சி உள்ளிட்டோர் வெளிப்படுத்தியுள்ள நடிப்புத்திறமை என்பது இயக்குநர் எண்ணியதைவிட சிறப்பாகவே அமைந்துவிட்டது எனலாம்.

ஆனால் ஒரு சிறிய விமர்சனமும் இப்படத்தின் மீது நாம் வைக்கவேண்டியிருக்கிறது. இன்றைய பெண் சார்ந்த புரிதலும் இல்லாததாக இருக்கிறது இப்படம். உதாரணமாக திரும்பத் திரும்ப வேலைக்குப் போகும் கணவனின் நிலைதான் பெரியது, வீட்டிலிருக்கும் பெண் அதை ஏற்றுக்கொண்டு பொறுத்து வாழ வேண்டும் என்பதாகவும் அவளுக்கு இருக்கும் சின்னச் சின்ன விருப்பங்கள், ஆசைகள், கவலைகள் போனறவற்றிற்கு தீர்வைநோக்கி இக்குறும்படம் நகரவில்லை. மேலும் பிரதிக்கின் துயர முடிவும் முடிவுக்குக் பிறகான திருப்பங்களும் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ராடன் குறும்ப போட்டியில் பங்கேற்ற படங்கள் பலவற்றிலும் சிறந்த பல முயற்சிகளைக் காணமுடிந்தது. முதல் பரிசு பெற்ற இந்தப் படமும் அவ்வகையிலானதுதானா என்ற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை.

உணர்ச்சிப் பீறிடல்கள் மிக்க டிவி சீரியல்களுக்கான இயக்குநராக கணேஷ் கார்த்திக் கிடைத்துவிட்டார் என்றுதான் இப்படத்தை பார்த்தவகையில் சொல்ல தோன்றுகிறது. அதேபோல இவர் போன்றவர்கள் படம் செய்வதற்கும் இங்கு வாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

அசரீரி குறும்படத்தைப் பார்க்க > RSFF FINALISTS | TITLE WINNER | GANESH KAARTHICK | ASARIRI

 

https://www.youtube.com/watch?v=MjPaUxIAH28

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8377592.ece?homepage=true&relartwiz=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: கலகல காதலுடன் 'பாடம்' நடத்தும் குறும்படம்

 
lovedd_2797331f.jpg
 

''கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குடும்பத்தின் நிலையையும் உணரவேண்டும்'' என்கிறது என் பெயர் நீலமேகன் எனும் 13 நிமிடக் குறும்படம்.

கல்லூரி நண்பர்கள் மத்தியில் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ளும் மாணவர்கள் ஏராளம். தினம் தினம் அவர்களது எண்ணங்களும் செயல்களும் ஸ்டைலும் ஆட்டமுமாக மாறிக்கொண்டிருப்பதை நிறையவே பார்க்கமுடிகிறது. தன் வாழ்க்கை நிலையை உணர்ந்து படிப்பே கடமையென உள்ள மாணவர்களும் இதில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?

துறுதுறுப்பான வயசுப் பருவத்தில் ஒரு இணையும் வேண்டியிருக்கிறது... அது சரி எத்தனை நாளைக்குத்தான் தனியாகச் சுற்றுவது? கல்லூரி நண்பர்கள் மத்தியில் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ளும் நீலமேகனுக்கு வழியில் ஒரு காதலும் கிடைக்கிறது.

(இதெல்லாம் காதலா சார் என்று தயவு செய்து கேட்டுவிடாதீர்கள்) அப்புறமென்ன? மாணவனின் அதகளம் கட்டுப்பாடு இல்லாத கவுன்ட் டவுணாக ஸ்டார்ட் ஆகத் தொடங்கிவிடுகிறது..

நாலாயிரம் ரூபாய்க்கு ஷூ, விலையுயர்ந்த செல்போன்... போதாதென்று காதலியோடு டேட்டிங் செய்ய சொந்தமாக ஒரு பைக் வாங்க வேண்டுமென்ற உந்துதல் வேறு. பாடத்திட்ட புராஜெக்ட் செய்ய வேண்டுமென நாற்பதாயிரம் ரூபாய்க்கு அப்பாவிடம் பொய் வேறு. இப்படி போகும் கதையில் நிறைய திருப்பங்கள்... விருப்பங்கள்... திருந்தும் முடிவோடு புத்திசாலித்தனமான காய் நகர்த்துதல்கள்...

இக்குறும்படத்தில் அப்பாவின் நிலையைக் கண்டு மாணவன் உருகும் இடம் இருக்கிறது. அது இப்படத்தின் முக்கிய இடம்... அந்த மாணவன் பெயர் நீலமேகன்... அவனை எங்காவது இயக்குநர் சந்தித்திருக்கக் கூடும். அவனுக்குத்தான் இப்படத்தை சமர்ப்பித்துள்ளார்.

நீலமேகனாக நடித்த மரிய செல்வதாஸ் கெத்துகாட்டவிரும்பும் மாணவனாக படுபொறுத்தம். அவரது நடிப்பும் சிறப்பு. தேவப்பிரியா, பாலகிருஷ்ணன், ராம் பிரசாத் சண்முகம், சத்யா ஷா, விதேஷ் உள்ளிட்டோர் நன்றாகவே நடித்துள்ளனர்.

இக்கால இளைஞர்கள் போக்கை, முக்கியமாக தாழ்வு மனப்பான்மையை கடக்கவிரும்பும் மாணவனை மையப்படுத்திய இயக்குநரைப் பாராட்டலாம். குறும்படம் முழுவதும் கலகலப்புதானோ என்று நினைக்கும்போது மனம் புண்படாமல் சில செய்திகளையும் சொல்லிவிடுவது நல்லது என்பதுபோல முயன்றுள்ளார் இயக்குநர் சந்திரசேகன் அஸ்வின் குமார்.

உறுத்தலில்லாத இசை பால் யோகேஷ், நந்தினியின் பாடல் ஒன்று, லாவகமான எடிட்டிங் சரத், இவர்கள் மட்டுமின்றி, சிவபூரணி, திவ்யா, ரோஹித், ஷங்கர் உள்ளிட்ட கிரியோட்டிவ் குழு பின்னிருந்து படத்தை உருவாக்கியுள்ளது. ஷோபா சேகர் புரொடெக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தை நீங்களும் பார்க்கலாமே.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8422651.ece?widget-art=four-rel

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'வாக்குக்கு எவ்ளோ வாங்குவீங்க?'

 
vote_2801008h.jpg
 

தேர்தல் ஆணையம் 100% வாக்குப் பதிவுக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு வாக்காளனாக என் ஓட்டு விற்பனைக்கல்ல என்ற தேர்தல் விழிப்புணர்வு வீடியோ மூலம் திரைப்பட துணை இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி பொருத்தமான பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்.

ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்ற நேர்மையும், போடுறது முக்கியம் தான், ஆனா அத விட முக்கியம் யோசிச்சுப் ஓட்டு போடுறது என்ற சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத் தன்மையும் உங்களிடம் இருந்து ஆரம்பிக்கட்டும் என்கிறார்.

அதற்காக பிரச்சார தொனியில் எதையும் சொல்லவில்லை. ஓட்டுரிமை எனது பிறப்புரிமை… ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமே என்று உறுதிமொழியை எடுப்பதாக காட்சிப்படுத்தவில்லை.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது அரசியலில் குணப்படுத்த முடியாத புற்றுநோய். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொள்ளையனை விரட்டுவோம் என்று சபதம் எடுக்கச் சொல்லவில்லை.

மாறாக, சுமார் 30 பேரிடம் ஜெயச்சந்திர ஹஸ்மி இயல்பாக கலந்துரையாடுகிறார். ஓட்டுக்கு பணம் வாங்குவீங்களா? என்று கேட்காமல், பணம் கொடுத்தா எவ்ளோ வாங்குவீங்க? என்று கேட்பதில் பணத்துக்கும், வாக்காளருக்குமான தொடர்பை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறார்.

பணம் வாங்குவோம் என்ற வாக்காளர்களின் பதில்களும் வெளிப்படையாக வந்து விழுகின்றன. இவர்களுக்கெல்லாம் அவர் முத்தாய்ப்பாய் என்ன சொல்லிவிடப் போகிறார் என்பது நமக்கும் தெரியும்தான்.

ஆனால், இந்த 3.26 நிமிட வீடியோவின் இறுதியில் வரும் பாட்டி என்ன சொல்கிறார்? அவரின் ரியாக்‌ஷன் எப்படி? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு நீங்களும் என் ஓட்டு விற்பனைக்கல்ல என்று கெத்தாக சொல்வீர்கள்.

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'ட்ரம்ஸ்' மைக்கேலின் தெறியிசை எங்கிருந்து வருகிறது?

 
drums_2804596f.jpg
 

கோவில் மணி அடிக்கும் ஒலி, ட்ரெயின் ஒலிச் சத்தம், மத்தளத்தின் ஓசை, பள்ளியில் அடிக்கும் பெல், பறை அடிக்கும் சப்தம் ஆகிய அனைத்தும் தொடர்ந்து ஒலிக்கின்றன. எங்கேயிருந்து இந்த சத்தங்கள் வருகின்றன? யாராவது பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவை ஒலிபரப்புகிறார்களா?

இல்லை, மைக்கேல் என்பவரின் உபகரணங்களில் இருந்துதான் எல்லா ஒலிகளும் மேலெழும்புகின்றன. பரவாயில்லையே எல்லா மாதிரியான ஒலிக்கருவிகளையும் இறக்குமதி செய்து வைத்திருக்கிறாரே என்கிறீர்களா? அதுதான் இல்லை, எதை வைத்து இவற்றை செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா? கொஞ்சம் இந்தக் காணொலியைப் பாருங்களேன்.

தண்ணீர் பாட்டில், கேன், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டிவி உள்ளிட்ட சுமார் 150 பொருட்களை தனது ட்ரம்ஸ் இசைக் கருவிகளாக மாற்றியிருக்கிறார் மைக்கேல். இசைக்கருவிகள் வாங்கப் பணம் இல்லாததால், தன் தாயின் தையல் மெஷினில் இசைக்க ஆரம்பித்ததில் தொடங்கியிருக்கிறது மைக்கேலின் இசை வாழ்க்கை.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் சேர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்ட மைக்கேல், இப்போது பல மதிப்புமிக்க விருதுகளுக்குச் சொந்தக்காரர். 350-க்கும் மேற்பட்ட மேடைகளிலும் இசைத்திருக்கிறார். சிசிஎல்லில் கலந்துகொண்ட மைக்கேலுக்கு, சிவமணியைப் போல, ஐபிஎல்லில் கலக்கும் ஆசை இருக்கிறது. கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்திலும் இருக்கிறார் மைக்கேல்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article8446486.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'தி ஜங்கிள் புக்' - 4 வயது சிறுமியின் விமர்சனம்

 

 
 
yazhini_2811180f.jpg
 

திரைக்கு முன்னால் தோன்றி விமர்சனம் செய்பவர்கள், திருத்தமாக அழகுடன் இருக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் இன்னும் நல்லது; அப்போதுதான் அதை அதிகம்பேர் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கியவர் இணைய திரை விமர்சகர் ஜாக்கி சேகர். திறமையை மட்டுமே நம்பி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியானால், முதல் ஆளாய் ஜாக்கி சேகரின் விமர்சனமும் நிச்சயம் வெளியாகி இருக்கும்.

இந்த முறை அவரின் 4 வயது மகள் யாழினி, ''தி ஜங்கிள் புக்'' படத்துக்கு விமர்சனம் தந்திருக்கிறார். இது குறித்து, ஜாக்கிசேகர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

ஐங்கிள் புக் திரைப்படத்தின் வீடியோ விமர்சனம் செய்ய லைட்டிங் செய்துக் கொண்டு இருந்தேன்.. அப்போது யாழினி கூப்பிட்டாள்.

"அப்பா?"

"என்னம்மா..?"

"ஜங்கிள் புக் விமர்சனம் நான் செய்யறேன்..."

"அட ஆமாம்ல.. குழந்தைகளுக்கான படம்! அவள் செய்தால்தான் சரியாக இருக்கும்...!"

தொடர்ந்து நான் பேசி வருவதை பார்த்து வருகின்றாள். அவளுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். ஆனால் எந்த அளவுக்கு பேசுவாள் என்று எனக்கு தெரியாது.. எவ்வளவு நேரம் ஆகும்..? தெரியாது. யாழினிக்கு விடுமுறை வேறு. சரி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். பத்து நிமிடங்கள்தான் எடுத்தாள். அவளோட பெஸ்ட்டை கொடுத்து இருக்கான்னுதான் சொல்லுவேன்.

நான்கு வயது யாழினியின் முதல் சினிமா வீடியோ விமர்சனம் உங்களுக்காக...

காணொலியைப் பார்க்கும் நமக்கு, விமர்சனத்தை விட யாழினியின் கண்கள் வழியே பொங்கும் குதூகலத்தைக் காண்பதில்தான் கவனம் செல்கிறது. குட்டி மூச்சுகள் விட்டு விட்டுப் பேசியிருக்கும் யாழினியின் குரலும் க்யூட். விமர்சனத்தின் முடிவில் சென்னை, அபிராமி திரையரங்க நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார் யாழினி. என்ன அது? காணொலியைப் பாருங்கள்!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8465443.ece?widget-art=four-rel

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: இதுவும் இந்தியா.. லத்தூரில் 'தண்ணீர் தண்ணீர்'!

 
 
 
  • water_2824523g.jpg
     
  • லத்தூர் | படம்: விவேக் பேந்த்ரா
    லத்தூர் | படம்: விவேக் பேந்த்ரா

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லத்தூர் வரலாறு காணாத வறட்சியில் கடுமையாக அவதியுற்று வருகிறது. நாம் நினைத்துப் பார்ப்பதைவிடவும் அங்கு நிலைமைகள் மோசமாக உள்ளது. | அது குறித்த 'தி இந்து' (ஆங்கிலம்) வீடியோ பதிவு கீழே |

சிறிதளவு தண்ணீரே உள்ள நீர்நிலையில் நெடுந்தொலைவு தங்கள் பானைகளுடன் குடிநீருக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் மக்கள் துயரம் அடைந்துள்ளனர்.

மீரஜ்ஜிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் தண்ணீருடன் 2 ரயில்கள் லத்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. நீராதாரம் இல்லாமல் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக லத்தூர் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குடிநீருக்காக போராட்டம் வெடிக்கும் ஆபத்தை உணர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 70 தண்ணீர் டேங்கர்களின் மூலம் 50 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் கிடைக்கப்பெற்று வருகிறது.

லத்தூருக்கு தண்ணீர் ஆதாரமான மஞ்சாரா அணையில் கடந்த பிப்ரவை 25-ம் தேதி முதல் நீர் இல்லை. நாளொன்றுக்கு லத்தூருக்கு மட்டும் 50 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது அதில் பாதிக்கும் குறைவாகவே பெற்று வருகிறது.

இதற்கிடையே, லத்தூரிலிருந்து 417 கிமீ தூரத்தில் உள்ள மும்பையில் பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் சர்ச்சை எழுந்தது. சுமார் 60 லட்சம் தண்ணீரைக் குடிக்கும் ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிராவிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 15,747 கிராமங்கள் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் கோடையின் உச்சம் நெருங்காத நிலையில்...

இதுவும் இந்தியாவே... தண்ணீருக்குத் தவிக்கும் லத்தூர்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வை ராஜா 'மை'- சேட்டையாளர்கள் சிறப்பு யூடியூப் லைவ் ஷோ

 

 
smile_2837345f.jpg
 

'ஸ்மைல் சேட்டை' என்ற யூடியூப் தளம், தேர்தலை முன்னிட்டு, புதிய வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ''வை ராஜா மை'' என்ற பெயரில் 24/ 7 பேசும் மாரத்தான் ஒன்றைத் தொடங்கியுள்ளது. சேட்டைகள், கலாய்ப்புகளுடன் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் விழிப்புணர்வு உத்திக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஸ்மைல் சேட்டை தள காணொளிகளை தொடர்ந்து வழங்கிவரும் ஆர்ஜே விக்னேஷ், அன்புதாசன், கார்த்திக் உள்ளிட்டவர்களோடு, மொத்தக் குழுவும் இதில் பங்கெடுக்க உள்ளது. | யூடியூப் இணைப்பு கீழே |

இது குறித்து நம்மிடம் பேசினார் 'ஸ்மைல் சேட்டை' குழுவினரில் ஒருவரான கலையரசன்.

"அரசியல் நிகழ்வுகளை நாகரிகமான முறையில் கேலி செய்துகொண்டிருந்த எங்களுக்கு, கலாய்ப்பது மட்டும் போதுமா என்று தோன்றியது. சுமார் 1 கோடி புதிய தலைமுறை வாக்காளர்களிடையே ஓட்டு போடுவதன் அவசியத்தை புரிய வைக்க வேண்டும் என்று யோசித்தோம்.

நாங்கள் குறிப்பிட்டுள்ள 7878745566 என்ற எண்ணுக்கு ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் வரும் வரை, கடந்த கால தேர்தல் பற்றிய தகவல்கள், அரசியல் வரலாறு, 234 தொகுதிகளின் வேட்பாளர் விவரம் உள்ளிட்ட சுவாரசியமான விஷயங்களைத் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்ந்து பேச உள்ளதாக அறிவித்தோம். சுமார் 120 மணி நேரத்துக்கான தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கிறோம்.

வரலாறு சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா என்று கேட்கிறார்கள். இப்போது அரசியல் எல்லோருக்கும் மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆனால் அரசியலின் பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் பிரமிக்க வைக்கிறது. தேர்தல் நாட்டின் தலையெழுத்தையே நிர்ணயிக்கிறது. அதனால் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறோம்.

இதோ, இன்று (திங்கள்) காலை 10 மணிக்கு, எங்களின் 'நாட்டுக்காக காலவரையற்ற பேசும் விரதம்' தொடங்கிவிட்டது. வாசகர்கள் தங்களின் செல்ஃபி வீடியோக்கள், வாட்ஸ்- அப் உரையாடல்கள், சாட்கள், அழைப்புகள் மூலம் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, சவுதி, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் எங்கள் ரசிகர்கள் இருப்பதால் தயக்கம் இல்லாமல் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த உள்ளோம்.

ஐந்து லட்சம் மிஸ்ட் கால்கள் என்பதே எங்கள் இலக்கு. ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து எத்தனை முறை மிஸ்ட் கால் கொடுத்தாலும், ஒரு முறை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை பதிவேற்றப்படும்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஆதித்யா தொலைக்காட்சி ஆதவன், உறுமீன் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்டோர் வந்து எங்களுக்கு ஊக்கமளித்துச் சென்றிருக்கின்றனர். நிச்சயம் எங்களின் இலக்கு பூர்த்தி அடைந்து, தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்கிறார்.

'ஸ்மைல் சேட்டை' குழுவின் பேசும் மாரத்தானை ஆன்லைனில் காண:

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%8B/article8547116.ece?homepage=true&relartwiz=true
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பெங்களூரு சுரங்க மெட்ரோ ரயிலில் ஒரு ட்ரிப்

 
bmetro_2839716h.jpg
 

பெங்களூருவில் உள்ள‌ பையப்பனஹள்ளியில் இருந்து நாயண்டஹள்ளி வரையிலான 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றது.

இப்பாதையில் கப்பன் பூங்காவில் இருந்து மாகடி சாலை வரை 5.12 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.500 கோடி மதிப்பில் நடைபெற்ற பணிகள் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ட்ரிப் வீடியோ பதிவு:

http://tamil.thehindu.com/india/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article8556457.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் - குறும்படம்

 

 
youtube_001_2840731f.jpg
 

பேசுவதை மட்டுமல்ல நாம் சிந்திப்பதைக்கூட ஒரு செல்போன் தெரிவிக்க ஆரம்பித்தால் நம் நிலை என்ன ஆகும் என்பதைத்தான் ''நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்'' எனும் குறும்படம் கூறுகிறது.

மகன் பிறந்தநாளுக்கு சைனா மொபைல் செட் வாங்கித் தருகிறார் தந்தை. அது மகிழ்ச்சியைத் தரவில்லை அவனுக்கு. காரணம், அவன் கேட்டிருந்தது 'ஐபோன் 6' மொபைல்.

தந்தை, ''என்னடா ஐபோன் சிக்ஸ்? இந்த சைனா மொபைல் வேணாமா? சூப்பர் பீசு, ஃபிரீ சிம், அட்வான்ஸ் டெக்னாலஜி எல்லாம் இருக்கு. நான் எல்லாம் செக் பண்ணிட்டேன் வாங்கிக்கோ'' என்று இவன் தலையில் கட்டிவிட, மொட்டைமாடியில் தனியே போய் உட்கார்ந்துகொண்டு 'முழி முழி'யென்று முழிக்கிறான்.

என்ன செய்வது என யோசித்து முதன்முதலில் அம்மாவுக்கு போன் செய்யலாம் என எண்களை அழுத்துகிறான். ரிங் போகட்டும் என காத்திருக்கிறான்.

ரிங்டோனும் ஓய்ந்து, செல்போன் நிறுவன பெண்ணின் குரல், ''நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் தற்போது சமைத்துக்கொண்டிருக்கிறார்...'' என்று பேசுவதைத் தொடர்ந்து அந்த வாசகம் ஆங்கிலத்திலும் ஒலிக்கிறது.

கண்கள் அலைய, திகைப்பு மேலிட, அதிர்ச்சி ஆளைத் தள்ள வியப்பின் உச்சிக்கே செல்கிறான் அவன். ஷாக் அடிக்குமோ என்பதுபோன்ற அச்சத்தோடு தன் ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி மீண்டும் ரீ-டயல் செய்கிறான். திரும்பவும் அதே குரல், அதே வாசகங்கள். அம்மாவை அழைத்து நிலவரத்தை உறுதி செய்துகொள்கிறான். செல்போன் பெண் சொன்னது உண்மைதான். அப்பா சொன்ன அட்வான்ஸ் டெக்னாலஜி இதுதானா? என வியக்கும் அவனுக்கு அதன்பிறகுதான் காத்திருந்தன அதிர்ச்சிகள்....

சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவில், எஸ்.என்.ஃபாசில் படத்தொகுப்பில், பிரிஃபோ இசையில், இர்பான், ஃபரீனா, டாக்டர் சூரி நடித்துள்ள இப்படத்தை எழுதி பாராட்டத் தக்க வகையில் இயக்கியிருக்கிறார் இர்ஃபான். எனினும் இதில் குறையும் உண்டு.

நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் இளைஞர்கள் அடுத்தவர்களை தரக்குறைவாக பேசுபவர்கள்தானா? என்னதான் இந்தக் காலத்துப் பையன்களைக் காட்டுகிறேன் என்று வெளிப்படுத்த முயன்று இருந்தாலும் பெற்ற அப்பாவையே மரியாதைக் குறைவாக அழைப்பதை தவிர்த்திருக்கலாம்.

''நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர்'' குறும்படம்போல் நடந்துவிட்டால் அவ்வளவுதான் கேட்கவே வேண்டாம்... ரகளை, களேபரம், வெட்டுக் குத்துதான்... அதுவும் குடும்பத்திற்குள்ளேயே நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது எப்படி என்பதை நீங்களும் பாருங்களேன்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8560361.ece?homepage=true&relartwiz=true

 

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மக்களுக்காக ஓர் உணர்வுபூர்வ தூண்டுதல்!

 

hi_2847332h.jpg
 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கின்றன. தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காகவே இந்த முயற்சி.

தேர்தல் ஆணையம், ஊடக நிறுவனங்களுக்கு இணையாக இணையத்தில் இளம் படைப்பாளிகளும் தனித்துவத்துடன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் 'Lets vote' என்ற இந்த வீடியோ குறும்படைப்பு நம்மை வெகுவாக கவனத்தை ஈர்க்கிறது. தேர்ந்த திரைப்படைப்புக் குழு ஒன்றுதான் இந்த வீடியோவைத் தயாரித்து இருக்கிறதோ என்று எண்ணத் தோணுது. அந்த அளவுக்கு நேர்த்தியான படைப்பு இது.

எந்தப் பிரச்சார நெடியும் இல்லாமல், காட்சிகள் - உணர்வுகள் மூலம் நம்மைத் தட்டியெழுப்புகிறது இந்த படைப்பு. குறிப்பாக, வசனங்களைத் தவித்து திரை மொழியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது தனிச் சிறப்பு.

நறுக்கென எடிட் செய்து இயக்கியிருக்கிறார் சர்வேஷ்.

காட்ஸன். ஸோலாவின் ஒளிப்பதிவு ஈர்க்கத்தக்க வகை. ரெஷ்வின். அபே-யின் இசை துருத்தாமல் உணர்வுகளைத் தூண்டவல்லது. இதில் நடித்தவர்கள் புரொஃபஷன்ல் ஆர்டிஸ்டாகவே பங்காற்றியுள்ளனர். மொத்தத்தில் இது பார்க்கவும் பகிரவும் வேண்டிய படைப்பு. இதோ அந்த வீடியோ குறும்படைப்பு...

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8579527.ece?homepage=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: 'திங்க் அண்ட் இங்க்' - கஸ்தூரி பாட்டி நடிப்பில் அசத்தல் பதிவு

 
 
kasthuri_2848555f.jpg
 

'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என்று ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களை உறுதிமொழி ஏற்க வைத்திருப்பதன்மூலம் ஆணையத்தின் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது என்று சொல்லலாம். எல்லோரும் வாக்களிக்கவேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதும் அதிமுக்கியமான ஒன்றாகும்.

இந்நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். நாளுக்குநாள் தேர்தல் நெருங்க நெருங்க இணையதளங்களில் அதிகம் உலவிவரும் விழிப்புணர்வு குறும்படங்களைப் பார்த்தாலே இந்த எதிர்ப்பார்ப்புகள் எவ்வளவு தூய்மையானது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

அவ்விதமாகவே, ''ஓட்டுக்கு பணம் வாங்கத்தான் வேண்டுமா?'' என்பதை பொட்டில் அடித்தாற்போல் நம்மை சிந்திக்க வைக்கிறது 'திங்க் அண்ட் இங்க்' எனும் இந்தப் படைப்பு.

இது சின்னஞ்சிறு படைப்புதான் என்றாலும் அதன் முடிவு சொல்லும் சேதி-யில் அடங்கியிருக்கிறது நம் அரசியல் நிலை.

நவீன்குமாரின் தெள்ளிய ஒளிப்பதிவில் கஸ்தூரி பாட்டி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிமுக, திமுக விளம்பரங்களை முன்வைத்து இணையத்தில் களேபரம் நடந்த நிலையில், கஸ்தூரி பாட்டியின் இந்த அவதாரம் மிரட்டலானது.

நட்டு தேவ் இயக்கியுள்ள இப்படம் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. நீங்களும் பாருங்கள்... நண்பர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்..

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article8584506.ece?homepage=true

  • தொடங்கியவர்

கருத்துக் கணிப்புகள் எத்தகையது?- இது மக்கள் பார்வை

கருத்து கணிப்புகளின் பின்னணி, அவை ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த மக்களின் கருத்துகள் அடங்கிய வீடியோ தொகுப்பு.

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: ஆர்ஜே பாலாஜி இப்படிக் கலாய்த்தல் தகுமா?

rjbalaji_2849826f.jpg
 

தேர்தலுக்குத் தேர்தல் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே போகிறது. தேர்தல் குறித்த அடிப்படை செய்திகள் அவர்களின் எண்ணங்களில் எந்த அளவுக்கு படிந்திருக்கிறது?

வழக்கமான வாக்கு வங்கிகளைத் தவிர்த்து வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் காரணிகள் அவர்கள். ஓரளவுக்காவது அடிப்படை அரசியல் செய்திகளை தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

நாள் முழுக்க செல்போனை நோண்டிக்கொண்டிருக்கும் அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்பது நாகரிகம் இல்லைதான். ஆனால் தன்னைச் சுற்றிலும் இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லாமல் இருப்பவர்களை அப்படியே விட்டுவிட முடியாதல்லவா?

நாட்டில் யாருமே சரியில்லை என்று சொல்வதற்கு, நாம் கொஞ்சமேனும் சரியாக இருக்கவேண்டும்.

எப்.எம். ரேடியோவில் நமக்கு பழக்கமான குரல் ஆர்ஜே பாலாஜியுடையது. நாட்டு நடப்புகளை விளாசுவதாகட்டும், செலிபிரிட்டிகளை சிலாகிப்பதாகட்டும் மின்னலைகளில் தனி கலாய்ப்பைப் பாய்ச்சியவர் பாலாஜி.

'தமிழ்நாடு ஜீரோ பர்சன்ட்' என்ற இந்தக் காணொளிப் பதிவிலும் இளையத் தலைமுறையிடையே உள்ள தனது செல்வாக்கை மிகவும் நேர்மறையாக பயன்படுத்தியிருக்கிறார்.

மாதிரிக்கு சில கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்துள்ளார். அவர்களிடம் தேர்தல் குறித்த மிக சாதாரண செய்திகளைக் கேட்டுப் பார்த்தார். பல கேள்விகளுக்கு வேண்டாம், சில கேள்விகளுக்காவது அவர்கள் பதில் என்ன?

சில மாதங்களுக்குள் வேறு மாற்றிக் கொள்ளப்போகிற ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கே எவ்வளவு மெமரி, என்ன டிஸைன், கேமராவுல ப்ளாஷ் இருக்கிறதா அப்புறம் என்னென்ன ஆப்ஸ் இருக்கிறது என்றெல்லாம் ஒன்றுக்கு பலமுறை பலரையும் விசாரித்து அதைப் பற்றி எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கிறோம்.

நம் தொகுதியின் பிரதிநிதியாக ஐந்துஆண்டுகள் பணியாற்றப் போகிற ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கும்போது, அவர் என்ன கட்சி? நல்லவரா? கெட்டவரா? அவரைப் பற்றி நமக்கு என்னென்ன தெரியும் என்ற குறைந்தபட்ச தேடலாவது நமக்கு இருக்கவேண்டாமா? அவர் கேட்பது நியாயம்தானே?

இந்த வீடியோ பதிவைப் பார்த்து முடித்த பிறகு, நம் இளையத் தலைமுறை மீது உங்களுக்கு கடுப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அது தவறு. சமகால அடிப்படை அரசியலைக் கூட அவர்கள் தெரிந்துகொள்ளாத அளவுக்கு அவர்களை எந்திரங்களாக வளர்க்கும் மூத்த தலைமுறைகளைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்.

பொறுமை இழக்காமல் இந்தக் காணொளியைப் பாருங்கள். நம் அருமை மாணவச் செல்வங்களில் ஒருவராவது தன் பொறுப்பை புரிந்துகொண்டுவிட்டால், தொண்டைக்கிழிய அவர்களுக்கு உணரவைக்க முயன்ற பாலாஜிக்கு அதுவே வெற்றி.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article8589870.ece

யூடியூப் பகிர்வு: ஆர்ஜே பாலாஜி இப்படிக் கலாய்த்தல் தகுமா?

rjbalaji_2849826f.jpg
 

தேர்தலுக்குத் தேர்தல் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே போகிறது. தேர்தல் குறித்த அடிப்படை செய்திகள் அவர்களின் எண்ணங்களில் எந்த அளவுக்கு படிந்திருக்கிறது?

வழக்கமான வாக்கு வங்கிகளைத் தவிர்த்து வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் காரணிகள் அவர்கள். ஓரளவுக்காவது அடிப்படை அரசியல் செய்திகளை தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

நாள் முழுக்க செல்போனை நோண்டிக்கொண்டிருக்கும் அவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்பது நாகரிகம் இல்லைதான். ஆனால் தன்னைச் சுற்றிலும் இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லாமல் இருப்பவர்களை அப்படியே விட்டுவிட முடியாதல்லவா?

நாட்டில் யாருமே சரியில்லை என்று சொல்வதற்கு, நாம் கொஞ்சமேனும் சரியாக இருக்கவேண்டும்.

எப்.எம். ரேடியோவில் நமக்கு பழக்கமான குரல் ஆர்ஜே பாலாஜியுடையது. நாட்டு நடப்புகளை விளாசுவதாகட்டும், செலிபிரிட்டிகளை சிலாகிப்பதாகட்டும் மின்னலைகளில் தனி கலாய்ப்பைப் பாய்ச்சியவர் பாலாஜி.

'தமிழ்நாடு ஜீரோ பர்சன்ட்' என்ற இந்தக் காணொளிப் பதிவிலும் இளையத் தலைமுறையிடையே உள்ள தனது செல்வாக்கை மிகவும் நேர்மறையாக பயன்படுத்தியிருக்கிறார்.

மாதிரிக்கு சில கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்துள்ளார். அவர்களிடம் தேர்தல் குறித்த மிக சாதாரண செய்திகளைக் கேட்டுப் பார்த்தார். பல கேள்விகளுக்கு வேண்டாம், சில கேள்விகளுக்காவது அவர்கள் பதில் என்ன?

சில மாதங்களுக்குள் வேறு மாற்றிக் கொள்ளப்போகிற ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கே எவ்வளவு மெமரி, என்ன டிஸைன், கேமராவுல ப்ளாஷ் இருக்கிறதா அப்புறம் என்னென்ன ஆப்ஸ் இருக்கிறது என்றெல்லாம் ஒன்றுக்கு பலமுறை பலரையும் விசாரித்து அதைப் பற்றி எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கிறோம்.

நம் தொகுதியின் பிரதிநிதியாக ஐந்துஆண்டுகள் பணியாற்றப் போகிற ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கும்போது, அவர் என்ன கட்சி? நல்லவரா? கெட்டவரா? அவரைப் பற்றி நமக்கு என்னென்ன தெரியும் என்ற குறைந்தபட்ச தேடலாவது நமக்கு இருக்கவேண்டாமா? அவர் கேட்பது நியாயம்தானே?

இந்த வீடியோ பதிவைப் பார்த்து முடித்த பிறகு, நம் இளையத் தலைமுறை மீது உங்களுக்கு கடுப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அது தவறு. சமகால அடிப்படை அரசியலைக் கூட அவர்கள் தெரிந்துகொள்ளாத அளவுக்கு அவர்களை எந்திரங்களாக வளர்க்கும் மூத்த தலைமுறைகளைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்.

பொறுமை இழக்காமல் இந்தக் காணொளியைப் பாருங்கள். நம் அருமை மாணவச் செல்வங்களில் ஒருவராவது தன் பொறுப்பை புரிந்துகொண்டுவிட்டால், தொண்டைக்கிழிய அவர்களுக்கு உணரவைக்க முயன்ற பாலாஜிக்கு அதுவே வெற்றி.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article8589870.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: கலெக்டர் கனவுடன் கால் விரல்களால் தேர்வு எழுதும் மாணவர்!

 
mustafa_2878616h.jpg
 

பல்லாரியைச் சேர்ந்த 18 வயது மாணவர் முஸ்தஃபா. பிறப்பிலேயே தனது கைகளை இழந்தவர். அது நடைமுறை வாழ்க்கையில் மிகந்த சிரமத்தைக் கொடுத்தது. ஆனால் கடின முயற்சிக்குப் பின்னர் தனது கால் விரல்களையே மூலதனமாக்கினார் முஸ்தஃபா.

மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து சலுகைகளையும், வசதிகளையும் மறுத்தார் முஸ்தஃபா. தன் கால் விரல்களாலேயே தேர்வு எழுதியவர், பத்தாம் வகுப்பில் 75 % மதிப்பெண் பெற்றார். மொழித்தாள்களைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளையும் எழுதுபவரின் உதவி இல்லாமல் கால் விரல்களாலேயே எழுதியிருக்கிறார்.

நன்றாகப் படித்தவர், கால் விரல்களின் உதவியால் ப்ரி யூனிவர்சிட்டி தேர்வில் (கர்நாடகாவில் +2 விற்கு சமமான தேர்வு) 80% மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

''என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், நண்பர்கள் இல்லாவிட்டால் சாத்தியமாகி இருக்காது. அவர்கள் யாரும் இல்லாவிட்டால் வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருப்பேன்'' என்று கூறுகிறார் முஸ்தஃபா.

நன்றாகப் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் முஸ்தஃபாவின் குரலில் தன்னம்பிக்கை உரத்து ஒலிக்கிறது.

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-கலெக்டர்-கனவுடன்-கால்-விரல்களால்-தேர்வு-எழுதும்-மாணவர்/article8682125.ece?widget-art=four-rel

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: குடிசைப்பகுதியில் மாற்றதுக்கான முகம்!

 

gym_2883729h.jpg
 

நிமிர்ந்து நிற்கும் மாநகர் டெல்லியின் ஓர் ஓரத்தில் அமைந்திருக்கிறது அந்த குடிசைப்பகுதி. கோண்டா நகரத்தின் அருகில் இருக்கும் அம்பேத்கர் பஸ்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட அம்பேத்கரின் பெயராலேயே அமைந்திருக்கிறது.

ஆர்.கே.புரத்தின் பின்புறத்தில், சுமார் 2,500 குடும்பங்களோடு மறைந்திருக்கிறது இந்தப்பகுதி. மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இங்கு பொதுக்கழிப்பறையே 2015 -ல் தான் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

அக்டோபர் 2015 -ம் வாக்கில் இங்கு ஓர் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரி அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?

உடற்பயிற்சி நிலையம் குடிசை வாழ் மக்களின் இயக்கத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. முன்காலங்களில் இயல்பாகவே இப்பகுதியில் கல்வியைக் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்திருக்கிறது. அங்கு வசிக்கும் இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் தேவையில்லாத செயல்களில் ஈடுபட, அதை மாற்ற முயன்றிருக்கிறது இந்த ஜிம்.

ஆண்களும் பெண்களும் வேறு வேறு நேரங்களில் பயன்படுத்துகிற விதத்தில் ஜிம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இது குறித்து பேசிய ஜிம் உரிமையாளர் ராமன் சிங், "பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்போடு கூடிய உடற்பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ஆண்களுக்கான கதையே வேறு. அம்பேத்கர் பஸ்தியில் வசிக்கும் ஆண்களை போதை மருந்துப் பொருட்களிடமிருந்து கவனத்தை திருப்ப முயல்கிறோம்.

பெயர்களே இல்லாத தெருக்களில் வசித்து வந்தவர்கள், பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கஞ்சாவையும், மதுவையும் பயன்படுத்துவது சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருந்தது. அதனால் நாங்கள் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தோம். உடனே உடற்பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க அவர்கள் அனைவரும் இப்போது உடற்பயிற்சியில் பிஸியாக இருக்கிறார்கள்" என்கிறவரின் குரலில் உற்சாகமும், நம்பிக்கையும் நிறைந்து வழிகிறது.

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-குடிசைப்பகுதியில்-மாற்றதுக்கான-முகம்/article8696553.ece?homepage=true

 

 

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: மெழுகு - உருகவைக்கும் குறும்படம்

 

the_candil_002_2896563f.jpg
 

ஒருவர்செய்யும் உதவி உயிர் உள்ளளவும் நினைக்கவைப்பதாக ஒன்று இருக்குமெனில் அது உறுப்புதானமாகத்தான் இருக்கமுடியும்.அது வெறும் செய்தியாக மட்டும் அதைச் சொல்லாமல் இதில் நடித்துள்ளவர்களும் உறுப்புதானத்தை முறைப்படி பதிவு செய்துள்ளனர் என்பதுதான் உருகும் மெழுகின் பளிச்.

ஒரு படைப்பாக்கம் என்றவகையில் சாலை விபத்திலிருந்து தொடங்கும் காட்சிகள், மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நகர்கிறது. அங்குவரும் உறவினர்கள், நண்பர்கள் தெரிந்தவர்கள் என பலரின் உரையாடல்களை நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.

எந்த நேரத்தில் எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என்பதே பல மனிதர்(?)களுக்கு தெரிவதில்லை என்பதுதான் இன்றைய நாகரிக உலகின் மோசமான நிலை. மனித உயிர் பிரச்சனையிலும்கூட மதத்தைப் பற்றிய விவாதங்களை கொண்டுவரும் மனிதர்களை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் இயக்குநர்.

குறும்படம் ஆரம்பத்தில் எதிர்பாராமல் நேர்ந்த சாலை விபத்து, மனிதர்களின் இன்றைய ஸ்மார்ட்மோன் மோகத்தினாலும் நிகழ்வதாக வருகிறது. படம் அதைத் தாண்டிச் செல்லும்போது நெடுஞ்சாலையில் செல்லும் வாகனத்தின் வேகத்தைவிட அதிவேகம்.

அந்த ஸ்மார்ட்போனைக் கடந்து சமூகப் பிரச்சனைளைத் தொட்டுச் செல்லும் வேகம் மிகப் பயனுள்ள திசையைநோக்கி செல்கிறது.கதைத்தளத்தின் போக்கை உணர்ந்து நடித்துள்ள அத்தனை கலைஞர்களும் போற்றத்தக்க வகையில் தங்கள் பங்களிப்பை நிறைவேற்றியுள்ளனர். மனைவி மற்றும் குழந்தையாக நடித்தவர்களின் பங்களிப்பு அபாரம்.

குறும்படம் ஒரு கட்டத்தில் வெறும் வசனங்களால் நிறைந்துவழிகிறது. ஆனால் நாடகத்தனம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதில் இருந்தும் லாவகமாக காட்சியாக்கப்பட்டுள்ளது. ஈரானிய செப்ரேஷன் திரைப்படம்போன்ற பரபரப்பும் நெருக்கடியும் நம்மை ஒரு தீயைப் போல பற்றிக்கொள்ள வைத்த இயக்குநர் தஸ்லீம்கான் பாராட்டுக்குரியவர். எதிர்பாராத விபத்தில் சிக்கியவர் மெழுகாவது நல்லதுதான். ஆனால் அது கிளைமாக்ஸில் பார்வையாளனுக்கு இன்னும் தெளிவாகக் கடத்தியிருக்கலாம்.

என்றாலும், உதவும் மனம் படைத்தால் எல்லோரும் மெழுகுதான் என்பதை நிலைநாட்டிய இக்குறும்படத்தை நீங்களும் பார்க்கலாமே?

குறும்படத்தைக் காண

 

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-மெழுகு-உருகவைக்கும்-குறும்படம்/article8736569.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: தோடர் பழங்குடி கோயில் சுவாரசியங்கள்!

 
 
temp_2894308h.jpg
 

இடையர் குலத்தைச் சேர்ந்த சிறிய இனத்தினர், தோடர் பழங்குடி. இவர்கள் தென்னிந்தியாவின் நீலகிரி மலையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தங்களின் பாரம்பரிய ஆடையான முண்டுகளைத்தான் இன்று வரை அணிந்து வருகின்றனர். பழங்குடியினரின் வாழ்க்கை முறையைப் போல அவர்களின் வழிபாட்டு முறையும் சுவாரசியம் மிகுந்ததாய் இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், உதகமண்டலத்துக்கு அருகில் உள்ள கோயில் கால் முண்டில் தங்களின் கோயில் புனரமைப்பு விழாவைக் கொண்டாடி இருக்கின்றனர். சுமார் ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நடைபெற வேண்டும் என்பது இவர்களின் ஐதீகம்.

கோயில் புனரமைப்புப் பணியில், திரும்பவும் கோயிலைக் கட்டுவதற்கு மலையில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே தோடர் பழங்குடியினர் பயன்படுத்துகின்றனர். சுமார் 2 மாதங்களுக்கு புற்களையும், மூங்கில்களையும் திரட்டுகின்றனர். அவற்றை முறையாகப் பதப்படுத்தி, அவற்றின் நார்களைச் சீவி கூரை வேய்கின்றனர்.

கோயிலின் முகப்பு, திருப்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒற்றைக் கல்லால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றைச் சிற்பம் முந்தைய காலங்களில் இருந்த மரத்தாலான வணங்கும் இடத்துக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் கடவுள் விக்கிரகங்கள் இல்லை.

வழிபாட்டு உருவங்கள் மட்டும் வரையப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு தோடர் கோயிலுக்கும் தனித்தனியான பூசாரிகள் இருக்கின்றனர். அவர்கள் வருடம் முழுவதும் அந்தக் கோயிலில்தான் வசிக்கிறார்கள். கோயிலுக்கோ, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கோ வர பெண்களுக்கு அனுமதியில்லை. தூரத்தில் இருந்து வேண்டுமானால் பெண்கள் கோயிலைப் பார்க்கலாம், வேண்டிக்கொள்ளலாம்.

கோயிலின் காணொளியைக் காண:

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-தோடர்-பழங்குடி-கோயில்-சுவாரசியங்கள்/article8728369.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

யூடியூப் பகிர்வு: பெங்களூருவின் குப்பை மேலாண்மையாளர்கள்!

 
garbage_2893099f.jpg
 

சங்கராபுரம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 30 நபர் குழுவினர், பெங்களூருவின் வீதிகளை சுத்தப்படுத்துவதில் முனைப்போடு இறங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர்.

கிழக்கு பெங்களூருவில் சுமார் ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் குடிசைப்பகுதி சங்கராபுரம். இது ஒயிட்ஃபீல்ட் ஐடி வளாக வருகையின் காரணமாக சிதைந்து போனது. இங்கு 300 ஆண்களும், 280 பெண்களும் வசிக்கின்றனர். வீட்டு வேலை செய்பவர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்தவர்கள் இப்போது மாதம் ஆறாயிரம் வரை சம்பாதிக்கின்றனர். 'சதார்' என்ற பெயரிட்ட குழுவின் கீழ் இவர்கள் வேலை பார்க்கின்றனர். பெண்களை அதிகமாகக் கொண்ட இந்தக் குழுவில் இப்போது 30 பேர் பணிபுரிகின்றனர்.

நிகழ்ந்த மாற்றம்

15 வருடங்களுக்கு முன் தனித்தனியாக சிறுசிறு வேலைகள் பார்த்தவர்களை, பெங்களூரு மாநகராட்சி அலுவலர் ஒருவர் ஒன்றிணைந்து பணிபுரியச் சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கிறார். குப்பைகளை திரட்டும் வேலையை ஆரம்பித்தவர்கள், நாளடைவில் தங்களின் சுற்றுப்புறத்தில் தொடங்கி ஒயிட்ஃபீல்ட் வரை இருக்கும் தெருக்களை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

மாதம் 50 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய இவர்களின் பயணம் மெல்ல மெல்ல குப்பைகளை அள்ளிக் கொண்டு செல்ல 4 லட்சம் மதிப்பிலான ட்ராக்டரை வாங்கும் வரை சென்றிருக்கிறது.

பின்னர் மாநகராட்சியின் அதிகாரங்கள் செயலிழக்க, ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே என்னும் நவீன மாநகராட்சி அமைப்பு வந்தது. இதனால் ஒப்பந்ததாரர்கள் உள்ளே வர இவர்கள் பணி சிக்கலானது. அன்றிலிருந்து தங்களை ஒப்பந்தக்காரர்கள் சாராத தனி குப்பை மேலாண்மை அமைப்பாக இயங்க அனுமதி வேண்டி, இப்போது வரை போராடி வருகிறார்கள்.

தன்னம்பிக்கை மனிதர்களின் முன்னேற்ற காணொலியைக் காண

http://tamil.thehindu.com/opinion/blogs/யூடியூப்-பகிர்வு-பெங்களூருவின்-குப்பை-மேலாண்மையாளர்கள்/article8724115.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.