Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதனைகள் பல புரிந்தாலும் சங்ககாராவுக்கு மிஞ்சியது வருத்தம்தான்!

Featured Replies

சாதனைகள் பல புரிந்தாலும் சங்ககாராவுக்கு மிஞ்சியது வருத்தம்தான்!

 

லகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார்.

sanga.jpg

இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.

'' உலகக் கோப்பையுடன்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெற முடிவு செய்திருந்தேன். ஆனால் தேர்வாளர்கள் கொஞ்ச காலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுகோள் விடுத்தனர். இதனால்தான் மேலும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சம்மதித்தேன்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது எனது சிறந்த வெளிநாட்டு தொடராக கருதுகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதையும் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.

2009 ஆம்  ஆண்டு பாகிஸ்தானில் எங்கள் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதை எனது வாழ்க்கையில் நடந்த மிக மோசமான நிகழ்வாகவே பார்க்கிறேன்.  இதில் காயமடைந்த சமரவீரா சில மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்து சதம் அடித்ததும் மறக்க முடியாத நிகழ்வுதான்.

உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்பது கனவு. இரண்டு முறை இறுதிப்போட்டி வரை வந்தும் நழுவ விட்டது வருத்தமளிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்ற ஆசையும் நிறைவேறவில்லை. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆசையும் கானல் நீராகி விட்டது '' என்றார்.

சாதனைகள் பல படைத்தவர், வருத்தத்துடன் கிரிக்கெட்டை நிறைவு செய்வதும் வேதனைதான்!

http://www.vikatan.com/news/article.php?aid=50891

  • தொடங்கியவர்
விடைபெறுவது மகிழ்ச்சி என்கிறார் - ‘டைனோசர்’ சங்கா
2015-08-12 10:29:54

11535125067.jpgசர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறுவது மகிழ்ச்சி தருவதாக இலங்கையின் துடுப்பாட்ட நட்சத்திரமும் கிரிக்கெட்டின் கனவான்களில் ஒருவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

 

விடைபெறுவதையிட்டு எவ்வித வருத்தமும் அடையவில்லை எனவும் வீரர்கள் அறையில் தன்னை ஒரு ‘டைனோசர்’ போன்று உணர்ந்ததாகவும் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்றுப் பகல் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.

 

அக்டோபர் 27ஆம் திகதி தனது 38ஆவது வயதை எட்டவுள்ள குமார் சங்கக்கார, இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவதுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெறவுள்ளார்.

 

அதாவது கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 20முதல் 24வரை நடைபெறவுள்ள இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குமார் சங்கக்காரவின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

 

இலங்கையில் இளம் அணிகளையும் ஆங்கிலேய பிராந்திய அணி சரேயையும் பார்த்தபோது இதுதான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் என எண்ணவைத்தது என குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.

 

இலங்கை அணியில் இடம்பெறும் 37வயதான ரங்கன ஹேரத், சரே அணியில் இடம்பெறும் சகவீரர் கரெத் பட்டி (37 வயது) ஆகியோரே தனது வயதை ஒத்தவர்கள் என சங்கக்கார கூறினார்.

 

‘‘அணியில் இடம்பெறும் ஏனையவர்களில் அநேகர் 26 வயதுடையவர்கள். அவர்கள் மத்தியில் நான் இருக்கும்போது என்னை நான் ஒரு டைனோசராக உணர்கின்றேன். 

 

அவர்களைப் பார்த்தபோது ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என எண்ணவைத்தது. 

 

டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய மொத்த ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் நான்காம் இடத்திலிருக்கும் குமார் சங்கக்கார, சமகால வீரர்களில் 38 சதங்களுடனும் 12, 305 ஓட்டங்களுடனும் முதலிடத்தில் இருக்கின்றார்.

 

அவருக்கு அடுத்ததாக 9,223 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் சமகால வீரர் அலஸ்டெயார் குக் ஆவார்.

 

டெண்டுல்கரின் மொத்த எண்ணிக்கையான 15,921 ஓட்டங்களையும் 51 டெஸ்ட் சதங்களையும் சங்கக்கார நெருங்கமாட்டார் என சகலரும் அறிந்திருக்கின்றபோதிலும் டொனல்ட் ப்ரட்மனின் 12 இரட்டைச் சதங்களை சமப்படுத்துவதற்கும் அதனைக் கடந்து புதிய சாதனை படைப்பதற்கும் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.

 

சங்கக்கார இதுவரை 11 இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளார்.
2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு சதங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டிய சங்கக்காரவுக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல முடியவில்லையே என்ற கவலை இருக்கத்தான் செய்யும்.

 

அத்துடன் அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர் வெற்றிகளை ஈட்ட முடியவில்லை என்ற குறையும் அவரிடம் இல்லாமலில்லை.

 

2000ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்த காலி சர்வதேச விளையாட்டரங்கு அவருக்கு பொன்னான மைதானமாகும்.

 

இந்த மைதானத்திலேயே 2001இல் இந்தியாவுக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் சதத்தை சங்கக்கார பதிவு செய்திருந்தார்.

 

‘‘உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருந்த சங்கக்கார, பாகிஸ்தானுடன் போன்றே இந்தியாவுடனும் இரண்டு போட்டிகளில் விளையாட எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தினார்.

 

‘‘தலா இரண்டு போட்டிகளில் விளையாடுவது பொருத்தமல்லாத போதிலும் முன்னைய தெரிவுக்குழுவினருடன் கலந்துரையாடியே எனது எதிர்காலத்தை தீர்மானித்தேன்’’ என்றார்.

 

‘‘உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவடைந்தவுடன் ஓய்வுபெற நினைத்தேன். ஆனால், இன்னும் சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடுமாறு அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர்.

 

நான்கு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே என்னால் விளையாட முடியும் என நான் கூறினேன். அதற்கு அவர்கள் இசைந்தனர்’’ என்றார்.

 

இதேவேளை, ஒருவேளை டெஸ்ட் தொடர் 1 – 1 என சமநிலையில் இருந்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு சங்கக்காரவை தூண்டுவீர்களா என இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸிடம் கேட்டபோது, அவர் புன்முறுவலுடன் பதிலளித்தார்.

 

‘‘என்னைப் பொறுத்த மட்டில் அவர் இன்னும் இரண்டு வருடங்களுக்கு விளையாடவேண்டும் என எதிர்பார்ப்பேன்.

 

ஆனால் அவரது தீர்மானத்தை நாங்கள் மதிக்க வேண்டும். எதிர்காலத்தில் தங்களது பெயர்களை பிரபல்யம் அடையச்செய்ய இளையவர்கள் முயற்சிக்கவேண்டும்’’ என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11535#sthash.Omh8KyIz.dpuf

 

 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.