Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வஞ்சகர்கள் மேடையில் தலைவர் பிரபாகரன்

Featured Replies

vanchagar medaiyil thalaivar

“மக்களின் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துப் போராடும் புரட்சிவாதிகள் பயங்கரவாதிகள் எனவும் கொடூரமான மனிதகுல விரோதிகள் எனவும் அவர்கள் வாழ்நாளின்போது கீழ்த்தரமான முறையில் ஒடுக்குமுறையாளர்களால் வர்ணிக்கப்படுகின்றனர். அவர்கள் இல்லாதபோது அதே ஒடுக்குமுறையாளர்கள் அவர்களைப் புத்தர்போல யேசுவைப்போல சாந்தமானவர்கள் மனிதகுல மீட்பர்கள் எனவும் போற்றி அவர்களின் கருத்துகளைத் திரிபுபடுத்தி தங்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முனைகின்றனர்”

இது சோவியத் யூனியனின் முதல் தலைவரும் உலகப் பொதுவுடமைப் புரட்சியாளர்களில் முதன்மையானவருமான மாமேதை லெனின் அவர்களின் தீர்க்கதரிசன வார்த்தைகள்.

லெனின் அவர்களின் ஒப்பற்ற அனுபவத் தத்துவம் இப்போது இலங்கையில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மேடைகளில் அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி வெற்றியை நோக்கி வழிநடாத்திய காலத்தில் அவரைப் பயங்கரவாதியாக வர்ணித்தவர்கள் இப்போது அவரின் வார்த்தைகளையும் விடுதலைப் போராளிகளின் ஒப்புவமையற்ற தியாகங்களையும் தங்கள் தேர்தல் மேடைகளில் தங்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தி வருகின்றனர். வடக்கின் தேர்தல் மேடைகளில் பிரபாகரனின் நாமம் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைப்பண்டமாக வஞ்சக நரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் போற்றிப் புகழ ஆரம்பித்துவிட்டார். முன்னாள் பெண் போராளிகளுக்காகக் கண்ணீர் விடவும் ஆரம்பித்துவிட்டார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபுறம் சமாதானப் போரினை நடத்திக்கொண்டு மறுபுறம் நயவஞ்சகமான முறையில் கருணாவைப் பிரித்தெடுத்து விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி எமது ஆயுதப் போரின் தோல்விக்கு அத்திவாரமிட்டது என்பதை நாம் என்றும் மறந்துவிடப்போவதில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து புலிகளுக்கு பயங்கரவாதிகள் என்ற நாமத்தைத் தீட்டியதும் அவர்களே என்பதையும் நாம் மறந்துவிடப்போவதில்லை.

அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற பிரபாகரன் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் நான் தமிழீழக் கிணற்றில் தண்ணீர் குடித்தவன் என மார்தட்டுவதுடன் பிரபாகரன் அண்ணாஎன உரிமை கொண்டாடவும் ஆரம்பித்துவிட்டார். பிரபாகரன் இலங்கை அரசுடன் பேச்சுகளை நடத்திய போது இனப்பிரச்சனைத் தீர்வுக்கு முன்பாகத் தமிழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தினார் எனவும் ஆனபடியால் தான் தமிழ் இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கப்போவதாகவும் மேடைகளில் அங்கஜன் முழங்கிவருகிறார்.

போக்குவரத்துத் தடை, பொருளாதாரத் தடை, மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டமை, எரிபொருள் தடை என்பன நீக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கொண்டுவரப்படவேண்டும் எனத் தலைவர் முன்வைத்த நிபந்தனைகளையும் அரச வேலைகளைப் பெற பின்னால் அலைவதையும் ஒன்றாக்கிக் குழப்பியடிக்கும் அளவுக்கு அங்கஜனின் அரசியல் ஞானம் சுடர்விடுகிறது. எப்படித் திரிபுபடுத்தியும் பிரபாகரன் பெயரைச் சொல்லி வாக்குகளைப் பெற்று விடும் நப்பாசை அவரிற்கு. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை பின் நகர்த்திப் படுகுழிக்குள் தள்ளியதும், இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்ததும் பல கோடி பெறுமதியான எமது சொத்துக்களை அழித்ததும் எமது பெண்களை விதவைகளாக்கித் தவிக்கவிட்டதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பதை எமது மக்கள் மறந்துவிடமுடியுமா?

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் விடுதலைப் புலிகளின் அடையாளங்களை அழித்து விடுவதில் முனைப்புடன் செயற்பட்டு வரும் மாவை, சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரும் விடுதலைப்புலிகளின் புகழ்பாட ஆரம்பித்துவிட்டனர். தலைவர் பிரபாகரனின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றப் போவதாக மேடைகளில் முழங்குகின்றனர்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் சுமந்திரன் கூறுவதையும் பிரபாகரனின் கொலைப்பட்டியலில் மஹிந்தவை விடத் தனக்கே முதலிடம் எனச் சம்பந்தன் கூறியதையும் தமிழ் மக்களால் மறந்துவிடமுடியுமா? எப்படியிருப்பினும் லெனின் அவர்கள் கூறியிருப்பதுபோல் வேடதாரிகள் பிரபாகரன் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டையாட வந்துவிட்டார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் உயிர் விலைகொடுத்தும் இரத்தம் சிந்தியும் பெற்ற அனுபவங்கள் மறக்கப்படமுடியாதவை. எனவே எத்தகைய ஏமாற்றுகளையும் இனங்கண்டு தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை இந்த வேடதாரிகள் தேர்தலின் பின் நன்றாகவே புரிந்துகொள்வார்கள்.

http://tamilleader.com/?p=50611

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.