Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

59 வருசம் தம்பி சிம்பிளா போவனோ?

Featured Replies

puliyadi12

வணக்கம்

எல்லாரும் சுகமாய் இருக்கிறியளோ? உங்கட கருமங்களை பார்க்கிறதுக்காகத்தான் வயதுபோன நேரத்திலயும் உங்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறன்.

ஓமோம் உந்தக் கறுமத்தை ஏன் கேப்பான் எண்டு முணுமுணுப்பியள். ஆனா ஒண்டை விளங்கிக்கொள்ளுங்கோ இண்டைக்கு இருக்கிற மூத்த அரசியல்வாதி நான் தான்.

தம்பி நான் 33 இல பிறந்து 56 இல தமிழரசுக் கட்சியில சேர்ந்து 77 இல எம்பி ஆனவன் தம்பி.

இண்டைக்கு பார் 59 வருசமாக இந்த அரசியலுக்க தான் நிக்கிறன். இண்டைக்கு 82 வயசிலயும் எங்கட மக்களுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறன் என்ன?

தமிழீழம் வேணும் எண்டு கேட்டுப்போட்டு நீங்கள் போயிட்டியள். இண்டைக்கு அந்த இலட்சியத்திற்காக எத்தினை பிள்ளையள் செத்து போச்சுதுகள் ஆனா இண்டைக்கு அந்த விடுதலைப்போராட்டத்தை மதிக்கிற நோக்கம் இல்லையே எண்டு கேப்பியள்.

ஞாயமான கேள்விதான் தம்பி. அந்த நேரத்தில தனிநாடு கேட்டாக்கள் இப்ப தனிவீடு கேக்கினம் எண்டு இந்தியாவில் நாங்கள் எடுத்த ஓசி வீடு பற்றி படம் போட்டு செய்தி போட்டவை.

என்ர இரண்டு பெடியள் சஞ்சீவன் மற்றது செந்தூரன். ஒரு பொம்பிளைப் பிள்ளை கிருசாந்தினி. இவையள வளத்து ஆளாக்கி விடவேணுமல்லோ தம்பி. அதுதான் சென்னையில ஒரு வீடு எடுத்து முதல்ல வீட்டை பார்ப்பம் பிறகு நாட்டை பாப்பம் எண்டு இருந்தனான் என்ன?

எந்த வேலையெண்டாலும் எங்கட எங்கட வீட்டிலிருந்து துவங்கவேணும் என்ன? வீடு நல்லா இருந்தா நாடு நல்லா இருக்கும் பாருங்கோ.

அவையள எல்லாம் செற்றில் பண்ணிப்போட்டு இப்ப வந்திட்டன். இனி காடு வா வா எண்டாலும் நாட்டுக்கு செய்யிற வேலையள விடமாட்டன் என்ன?

வழமைபோல உங்கட ஆணை வேணும்  எண்டு இந்தமுறை எலக்சனிலும் நிக்கிறன். மைத்திரியோட கதைச்சு ஒரு மாதிரி சம்பூர் ர் பிரச்சனையை சோட்அவுட் பண்ணியிட்டன். காணியை விட்டாச்சு. சனத்தின்ர கிணறுகளை கூட மூடிப்போட்டாங்கள் என்ன? சாதனையள கதைக்கக்க வேதனையள கதைக்ககூடாது.

அப்பிடி விடப்படுற ஒரு வீட்டில போயிருந்து அரிக்கன் லாம்பு ஒண்டு கொழுத்தினா சனம் என்னப்பற்றி என்ன நினைக்கும்? கட்டிப்பிடிச்சு கொஞ்சும் என்ன? அதைத்தான் செய்துபோட்டு வாறன்.

இண்டைக்கு சிங்கள தலைவர்மார் புளட்புறு யக்கற்ற பற்றி அறிய முதலே நான்தான் தம்பி முதல் அந்த யக்கற்றை போட்டு திரியிறனான். சந்திரிகா அம்மையார் அப்ப சொன்னவ உங்கள்ள ஒரு கண் இருக்கு. கவனமா இருங்கோ எண்டு.

எனக்கு கண் வைச்ச ஆக்களின்ர கண்ணுக்குள்ள விரலவிட்டு ஆட்டினவன் நான் தம்பி. ஓமோம் அப்ப ஆனந்தசங்கரியார் எங்கட கட்சியின்ர தலைமையை எடுக்க நிண்டவர்.

என்ன செய்யிறது அரசியல் எண்டு வந்திட்டா ஆற்ற கால்ல எண்டாலும் விழத்தானே வேணும். கிளிநொச்சிக்கு போய் அவருக்கு வேலையை காட்டினன் என்ன?

நாங்கள் 3 பேர்தான் சேர்ந்து முடிவெடுக்கிறது எண்டு எங்கட கிழக்கு சிங்கம் அரியநேத்திரன் துள்ளிக்கொண்டு நிண்டவர். இண்டைக்கு அவரை பாருங்கோ. ஐயா சொன்னா எல்லாம் நல்லதுக்குத்தான் எண்டு பம்மிக்கொண்டு நிக்கிறார் என்ன?

அப்ப அவர் சொன்னவர் சம்பந்தர்-மாவை-சுரேஸ் மூண்டுபேரையும் SMS எண்டு. அவர் சொன்ன மெசேஜ் சரி.

ஆனா ஆறு வருசம் கழிச்சுத்தான் அவருக்கே தெரியும் அது சம்பந்தர்-மாவை-சுமந்திரன் எண்ட 3 பேர்தான் அந்த SMS எண்டு.

இண்டைக்கு கருணாநிதியை பாருங்கோ எப்பிடி காயள வெட்டி தன்னை தன்ர கட்சியை வளர்க்கிறார் எண்டு. அப்ப நானும் அப்பிடி செய்தா பிழையே?

கயேந்திரன் பத்மினி இரண்டு பேரையும் வெட்டிவிட்டன். கடைசியா அனந்தி எனக்கு செக் வைக்கிறா. விடுவனோ.

சுரேஸ் கேட்டார் தன்ர சீற்றில அனந்திக்கு கொடுக்கப்போறன் எண்டு. நான் தெளிவா சொல்லிப்போட்டன். அப்பிடி எண்டா உமக்கும் சீற் வராது எண்டு. அடங்கியிட்டார் என்ன?

சிவாயிலிங்கம் அந்தக்காலத்திலயிருந்து நல்ல மனுசன். எதையும் வெளிப்படையா கதைக்கும். ஆனா என்ர கையாள் சுமந்திரன வெல்லவைக்க வேணும் எண்டா வேறை என்ன செய்யலாம்?

உங்களுக்கு ஒரு சீற் தரலாம். ஆனா அதை சிவாயிலிங்கத்துக்கு கொடுக்கக்கூடாது எண்டு வெட்டு ஒண்டா துண்டு ரண்டா செல்வத்துக்கு சொன்னனான் தம்பி. அமந்திட்டார் என்ன?

மாகாணசபையில செய்யிறதுக்கு நாலுவேலையள் இருக்கு. நாடாளுற வேலையை நாங்கள் பாப்பம் எண்டு சிவாயிக்கு நானே சொன்னன்.

அந்தக்கோவத்தில குருநாகலில போய் நிக்கிறார். நல்ல காலம் கோவத்தில திருக்கோணமலைக்கு வரல்ல.

அப்ப பாரும் தம்பி. இவ்வளவு பிரச்சனைக்க இவ்வளவு றிஸ்க் நான் எடுக்க நாங்கள் என்ன றிஸ்க் எடுத்தனாங்கள் எண்டு நிலாந்தன் பந்தி பந்தியா எழுதுறார் என்ன? தமிழ்க்கூட்டமைப்பை நோக்கி கேள்வி வைக்கிறாராம்.

யதீந்திரா எண்டு ஒருத்தர் என்ர இடத்தில இப்பிடித்தான் எழுதினவர். அவருக்கும் இப்ப ஒரு சீற் கொடுத்து அமத்திப்போட்டன் என்ன? நான் எம்பியா இருந்த வயசே இல்லை கதைக்க வந்திட்டார் …… (இப்ப வயிறு குலுங்க சிரிக்கிறன பொறுங்கோ…)

உங்கட எழுத்தாளர் எண்டு அறியப்பட்ட பெடியன் ஒண்டு தம்பி. பேரை மறந்திட்டன். ஆ அவன்தான் பொன்னான காந்தம். தானைத்தளபதி சம்பந்தன் எண்டு கவிதை எழுதுறனாடா தம்பி. எனக்கே கண்ணில கண்ணீர் வருதடா தம்பி.

என்னதான் திருகுதாளங்களை போட்டாலும் எனக்கு கவிபாடுறதுக்கு ஆக்கள் இருக்கினம் எண்டிறதை நினைக்க என்னாலயே நம்பேலாம கிடக்கு. உங்களுக்கு எப்பிடி இருக்கும்.

மாவை சேனாதி இருக்கமுடியாமல் கஜேந்திரகுமாரின்ர வாயை கிளறிப்போட்டுது. அது ஒரு பிரச்சனையாய் போட்டுது. கஜேந்திரகுமார் எனக்கு கோல்பண்ணினவர். அப்ப மே 17 இரவு இரண்டு மணியிருக்கும். எனக்கோ நல்ல நித்திரை. முள்ளிவாய்க்கால்ல அகப்பட்ட சனங்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்யச் சொல்லி எனக்கு கோல் எடுக்கிறார். நான் எடுக்கல்ல.

எடுக்கல்ல எண்டா ஏன் எண்டு கேக்கிறது இராசதந்திரமோ?

அடுத்தது என்ன?

எலக்சன் பற்றி கேப்பியள். வெண்டா என்ன செய்வன் எண்டு கேப்பியள். மன்மோகன் சிங்குக்கு உண்ணாவிரதம் இருக்கப்போறன் எண்டு சத்தியம் பண்ணினவன் நான் தம்பி.

அதால நான் சொல்லுறதை கேளுங்கோ.

இண்டைக்கு நீங்கள் சுமந்திரனை தெரிவுசெய்யவேணும். அவர் எனக்கும் வேணும். எங்கட மக்களுக்கும் வேணும். (இப்ப கையை மடக்கி பொத்திக்கொண்டு சொல்லுறன் என்ன)

தேர்தல்ல வெண்டா தீர்வு காணவேண்டிய கருமங்களை நாங்கள் கவனமாக முன்னெடுக்கப்போறன். அதுபற்றி மக்கள் யோசிக்க தேவையில்லை. அடுத்த வருசம் தீர்வு. அதோட எங்கட பயணம் முடியும். (இவ்வளவு நேரமும் மூடின கண்கள் இரண்டையும் திறந்து சொல்லுறன் என்ன)

அப்ப வரட்டே!

http://tamilleader.com/?p=50630

 

புளிகள் சேர்த்த காசு  எங்க எல்லாம் பாயுது .

அன்று தொட்டு இன்று வரை தமிழன் அழிவுக்கு 

தமிழ்மக்கள்  சிம்பிளாக போக  விட்டால்  தானே .அதற்கு  ஆகவே புலிகள் தங்கள் பட்டியலில் இருந்து நீக்கினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.