Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை

இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் கண்டனங்களுக்கும் மகிந்த அரசு பணிந்துகொடுக்குமா? என்ற வினா பலமானமுறையில் எழுப்பப்படுகின்றது.

நோர்வே அனுசரணை - இணைத்தலைமை நாடுகளின் பங்குபற்றல் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது.

ஜெனீவா - 2 பேச்சுக்கு சர்வதேச செய்திநிறுவனங்கள் அளித்த முக்கியத்துவம் பாரியது. பேச்சுக்கள் ஜெனீவாவில் நடந்தபோது இணைத்தலைமை நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் கொம்பில் தங்கிநின்றனர்.

இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேச அக்கறை அதிகரித்துவிட்டது| என்று ஊடகங்கள் இதற்கு வியாக்கியானம் செய்தன. பேச்சு தோல்வியில் முடிந்தபின் புலிகள் பிரதிநிதிகள் கொழும்பு திரும்பியபோது இந்த இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

திடீரென இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிக்கும் - கொழும்பிற்கும் பயணம் வந்தபோதும் சர்வதேச அக்கறை பற்றிய கதை மீண்டும் வலுவடைந்தது. இங்கிலாந்துப் பிரதமர் ரொனி பிளேயரின் பிரதிநிதி என்று இவருக்கு கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

ஜெனீவா - 2 பேச்சு தோல்விக்கு சிங்கள அரசே காரணம் என்ற உண்மையை சர்வதேசம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆறு இலட்சம் மக்களுக்கான தரைவழிப் பாதையைத் திறந்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்வதை அனுமதிக்க சிங்கள அரசு மறுத்ததால் சர்வதேச சமூகம் சற்று சீற்றமடைந்தது என்றே சொல்லலாம்.

யு-9 பாதைக்கு மாற்றுப்பாதை என்ற பெயரில் பூநகரி - சங்குப்பிட்டிப் பாதையை சிங்கள அரசே சிபாரிசு செய்தது. அந்தப் பாதையை நேரடியாகப் பார்த்து - பாதைதிறப்பு ஒழுங்குகளைக் கவனிக்கவென்ற எண்ணத்துடன், முன் அனுமதிபெற்று அப்பகுதிக்குச் சென்ற கண்காணிப்புக்குழுத் தலைவர், படையினரின் ஆட்லறித் தாக்குதலுக்குள்ளாகிய அதிர்ச்சிச் செய்திகள் வெளியானபோது நோர்வே கடும் சீற்றமடைந்தது. படையினரை விமர்சித்து ஒரு கண்டன அறிக்கையை நோர்வே தலைநகரில் வைத்து திரு.சொல்ஹெய்ம் வெளியிடும் அளவுக்கு நிலைமை இருந்தது.

வாகரை அகதிமுகாம் மீது சிங்கள இராணுவம் ஆட்லறித் தாக்குதலை நடாத்தி 50ற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றபோது, இந்தப் படுகொலைத் தாக்குதலை சிங்களத் தளபதி நியாயப்படுத்த முயன்றபோது, இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் குறுக்குக் கேள்விகள் கேட்டு இராணுவத் தளபதியை வாயடைக்கச் செய்தார் என்று கொழும்பில் இருந்து செய்திகள் கசியும் அளவுக்கு நோர்வே பிரதிநிதிகள் கோபங் கொண்டிருந்தனர்.

வாகரை அகதிமுகாம் படுகொலைக்கு விசாரணைக் கமிசன் நியமிக்கும்படி அமெரிக்க அரசு கேட்கும் அளவுக்கு சிங்களப் படைகளின் அட்டூழியங்கள் சர்வதேசத்தைக் கோபங்கொள்ளச் செய்தன. வலிந்த தாக்குதலை நிறுத்தும்படியும் - போர்நிறுத்த ஒப்பந்தத்தைப்பேண நடவடிக்கை எடுக்கும்படியும் - யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதையைத் திறந்துவிடும்படியும் இணைத்தலைமை நாடுகள் சிங்கள அரசைக் கோரியுள்ளன.

தமிழர் படுகொலையையிட்டு தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும் - கொந்தளிப்பிற்கும் செவிசாய்த்து மகிந்த அரசைத் தட்டிக்கேட்க இந்திய மத்திய அரசும் முயன்றுள்ளது. பெரும்பாலான இந்திய ஊடகங்கள் சிங்கள அரசைக் கண்டித்து தமிழருக்கு எதிரான அதன்

கடும்போக்கை விமர்சித்து காட்டமான செய்திகளை - கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன.

ஆனாலும், சர்வதேச நாடுகளின் இந்தக் கண்டனங்களும் அழுத்தங்களும் எதைச் சாதித்துள்ளன? என்ற கேள்வி அவநம்பிக்கையுடன் எழுப்பப்படுகின்றது.

இந்த வெற்றுக் கண்டனங்களையும் - அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதித்ததாகத் தெரியவில்லை.

மக்கள் படுகொலைகளிலும் - வலிந்த தாக்குதல்களிலும் - வான்தாக்குதல்களிலும் - அரசியல் படுகொலைகளிலும் சர்வதேச சமூகம் எரிச்சலடையும் அளவுக்கு சிங்கள அரசு கடுமைகாட்டி வருகின்றது.

கொண்டிருக்கும்போது, சிங்கள அரசு, சமாதானத்தைக் குழிதோண்டி ஆழப்புதைக்கும் அரசியல் சூழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டபடியுள்ளது.

தமிழர் தாயகத்தை வடக்கென்றும் - கிழக்கென்றும் பிரித்தறுத்துத் துண்டாடி தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்க சிங்களம் சதிசெய்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பு என்று கூறிக்கொண்டு பேரினவாதிகளின் சூழ்ச்சி அரங்கேறுகின்றது. சமாதானத்திற்கு நிரந்தரமாகவே சாவுமணியடிக்கக்கூடிய இந்த சூழ்ச்சிச் செயற்பாட்டை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளவில்லை.

பேச்சுவார்த்தை மேசைகளில் சர்வதேச நாடுகளிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக மகிந்த அரசு ஒரு ஷஜனநாயக| நாடகத்தையும் வெற்றிகரமாக நடாத்திவருகின்றது.

ஷஷஅனைத்துக்கட்சிகளும் இணைந்து - ஒரு தீர்வுத்திட்டம் பற்றி ஒரு உடன்பாட்டிற்கு வரும்|| என்று சாத்தியமற்ற ஒரு கோஷத்தையும் மகிந்த அரசு பயன்படுத்திவருகின்றது. இந்த அரசியல் நாடகத்தையும் சர்வதேச நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.

தமிழரின் படுகொலைகளை விசாரிக்கவென 1983ஆம் ஆண்டிலிருந்து சிங்கள அரசு விசாரணைக் கமிசன்களை நியமித்துவந்துள்ளது. அவற்றால் இதுவரை தமிழர் கண்ட பயன் என்ன!

இலங்கைத்தீவின் நீதிவரலாறு இப்படியிருக்க சிங்களப்படைகளின் படுகொலைகளுக்கு விசாரணைக் கமிசன் நியமிக்கப்படவேண்டும் - குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சிங்கள அரசிடமே, சர்வதேச நாடுகள் கோரிக்கை வைப்பது வேடிக்கையாக உள்ளது.

சர்வதேச மத்தியத்துவத்துடன் பேச்சுக்கள் தொடங்கியபோது தமிழ்மக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர் என்பதுடன் எதிர்காலம் பற்றி நம்பிக்கையும் கொண்டிருந்தனர். ஐம்பதாண்டுகால சிங்கள அரசின் ஏமாற்று அரசியலுக்கு சர்வதேச மத்தியத்துவம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், தமிழ்மக்கள் எதிர்பார்த்தபடி எதுவுமே நடைபெறவில்லை. சிங்கள அரசின் ஏமாற்று அரசியல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. தமிழருக்கு எதிரான இனவெறி - கொலைவெறி அதிகரித்தபடியே செல்கின்றது. இவற்றையெல்லாம் அருகிலிருந்து பார்த்தபடியே சர்வதேச நாடுகளும் அறிக்கை அரசியல் செய்தபடியுள்ளன.

இவையெல்லாம் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் பாடத்தைச் சொல்லுகின்றன. தமிழரின் விடுதலையைத் தமிழர்தான் போராடிப் பெறவேண்டும். இதுதான் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதி என்ற உண்மையை எமது மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள அரசின் அடங்காப் போக்கையும் - தமிழரின் அவல வாழ்க்கையையும் உலகநாடுகள், இப்போது படிப்படியாகப் புரிந்துவருகின்றன என்பதும் உண்மைதான். இந்தப் புறச்சூழலை நாம் பலப்படுத்திக்கொண்டு எமது நிலமீட்புப்போரை விரிவாக்கி - சிங்களப் படைகளை எமது தாயக மண்ணிலிருந்து விரட்டியடிப்பதன் மூலம்தான் எமது விடுதலையைப் பெறமுடியும். தமிழரின் படைபலம்தான் தமிழருக்கு வாழ்வுகொடுக்கும் என்ற சிந்தனைதான் தமிழரது விடுதலைப்போராட்டத்தின் தாரக மந்திரமாகும்.

- விடுதலைப்புலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.