Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்பாறை றொபினின் முன்மாதிரியை TNAயின் கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றுவார்களா?

Featured Replies

தனது பாராளுமன்ற மாதாந்த சம்பளம் அனைத்தும் அம்பாறை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கே !! எனக் கூறிய றொபின் என அழைக்கப்படும் கவீந்திரன் கோடீஸ்வரன் தமிழ் தேசியகூட்டமைப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...


தான் பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவாகி சென்றால் எப்படியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன் என்பதை ஏற்கனவே துண்டுப்பிரசுரம்மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தி இருந்தார்.


1)    தனது பாராளுமன்ற மாதாந்த முழுச்சம்பளத்தையும் அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன்


2)    பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு.


3)    தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான மாதாந்தக்கொடுப்பனவு


4)    அரசியல் கைதிகளின் விடுதலை.


5)    அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள்  எப்படிப்பட்ட தேவைகளுக்கு எந்நப்பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை புத்திஐீவிகள் குழு அமைத்து அவர்கள்மூலமே தீர்மானித்து ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல்.


6)    பொத்துவில் தொடக்கம் சங்கமன்கண்டிவரையிலான தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேசசபையும் பிரதேச செயலகமும் ஏற்படுத்தல்.


7)    உலகத்தமிழர்களை இணைத்து எமது மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தல்.


8)    தன்னால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் தட்டங்களின் செலவீடுகள் வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும்... போன்ற பல் வேறு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


உண்மையில் தேர்தலுக்கு முதல் கூறிய விடயங்களை வெற்றி பெற்ற பின் செய்வார் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்... இங்கே தேர்தலில் முதன் முறையாக தேர்வு செய்யப்படும் ஒருவர் இத்தகைய செயற்திட்டங்களை வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப் படுத்த தயாராகும் போது 2க்கு மேற்பட்ட தடவைகள் பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் அமையுமா?


ஏற்கனவே மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது மாகாண சபைச் சம்பளத்தை கடந்த 2 வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருவதாக அவரது கட்சித் தரப்புகள் கூறுகின்றன...


தவிரவும் தற்போதைய சந்தை மதிப்பில் 43 கோடி ரூபாய் பெறுமதியான 236 பரப்பு காணியை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு வழங்கியிருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன....


அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் தெரிவு செய்யப்பட்டு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் வளங்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதற்கான வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்பார்களா?


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் ...


1)    ஈஸ்வரபாதம் சரவணபவன்
2)    எம்.ஏ. சுமந்திரன்
3)    இரா சம்பந்தன்
4)    மாவை சேனாதிராஜா
5)    செல்வம் அடைக்கலநாதன்
6)    சிவஞானம் சிறீதரன்


ஆகியோர் பெரும் கோடீஸ்வரர்கள் என்றும். பாரிய சொத்துக்களின் அதிபதிகள் என்றும் அறியப்படுகிறுது....


இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  வைத்திய கலாநிதி சிவமோகன் என்பவரும் பெரும் கோடீஸ்வரர் என அறியவருகிறது....


இவர்கள் அனைவரும் தமது செத்துக்களில் மக்களுக்கு கொடுக்காவிடினும், தமது மாதாந்த சம்பளத்தை கொடுக்காவிடினும். புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படும் பணம், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி மற்றும் வழங்கள், அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் சலுகைகள், வேலைவாய்ப்புக்களுக்கான கோட்டாக்கள் என்பவை முழுமையாக மக்களை சென்றடைய வழி செய்வார்களா? அதற்கான வெளிப்படைத் தன்மையுடைய நம்பகத் தன்மையுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க, சுயாதீன செயற்பாட்டாளர்களை கொண்ட அமைப்பை தோற்றுவிப்பார்களா?


தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை களைவதற்கு தற்போதைய பாராளுமன்ற காலத்தை இவர்கள் பயன்படுத்த முனைவார்களா?

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123429/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தெரிவிக்கப்பட்ட செயற்திட்டங்களை கோடீசுவரர்களான  இந்த அரசியல்வாதிகள் உண்மையிலேயே நடைமுறைப் படுத்த முன்வந்தால் மக்களே அவர்களை அரசியல்வாதிகளாக ஏற்பதற்கு முன்வரமாட்டார்கள். அவர்களை ஆன்மீகவாதிகளாக, தர்மவான்களாகப் போற்றிப்புகழ ஆரம்பித்துவிடுவார்கள். இந்தக் கோடீசுவரர்களுக்குப் பூப்போட்டு அர்ச்சனை செய்வார்களே தவிர ஒட்டுப்போட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பமாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.